செவ்வாய், 20 செப்டம்பர், 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டை வேடம்!


தமிழ் பேசும் மக்களிடம் வாக்குகளைப் பெற்று சுகபோக வாழ்க்கை அனுபவித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இரட்டை வேடம் மீண்டும் அம்பலமாகியுள்ளது, சில இராஜதந்திரிகளின் அழுத்தத்தினால் கடந்த 02 ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இரா சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தையின் மூலம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்குபற்றும் நிலையை எட்டியுள்ளது.

திங்கள், 19 செப்டம்பர், 2011

அடைய முடியாத இலக்கு தமிழீழம் - கிழக்கு முதல்வர் பிள்ளையான்


போராட்டத்திற்கு எந்தவொரு பங்களிப்புமே செய்யாத கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் மேலாதிக்கத் தலைவர்களுமே தற்போது அடைய முடியாத இலக்காக இருக்கின்ற தமிழீழம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்களென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலாநந்த வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் குறிப்பிட்டார்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

கிறிஸ் பூதம் தமிழர்களே - மக்களை ஏமாற்ற அரசாங்கம் முயற்சி!


இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய பாதுகாப்புத் தரப்பினரால் கர்ச்சிதமாக நடாத்தப்படும் நிகழ்வாக கருதப்படுவது கிறிஸ் பூதம் எனப்படும் மர்மமனிதன் விவகாரமாகும். ஶ்ரீலங்காவின் சிங்களப் பகுதியில் ஒத்திகை பார்க்கப்பட்டு தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் உளவியல் யுத்தத்தினை மிகவும் தந்திரமான முறையில் இலங்கை அரசாங்கம் செவ்வனே நடாத்தி வருகின்றது, இதனை நடத்துபவர்கள் இலங்கை படையணியினர் தான் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், அரசாங்கமும் அதன் அடிவருடிகளும் மறுத்தே வருகின்றனர்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

சிவராம் நினைவுப் பேருரைக்காக தலைப்பை மாற்றினார் ஶ்ரீதரன் பா.உ.


சுவிற்சலாந்து சிவராம் நினைவு மன்றத்தினரால் கடந்த 2011.09.11 ஆம் திகதி சிவராம் நினைவுப் பேருரை நடைபெற்றது, இந் நிகழ்வின் நினைவுப் பேருரைக்காக "ஈழத் தமிழர் அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம்" எனும் தலைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் அழைக்கப்பட்டு இருந்தார், ஆனால் தலைப்புக்குப் பொருந்தாத "விரியும் சர்வதேசப் பரப்பில் மீண்டும் மிடுக்குடன் எழவல்ல ஈழத் தமிழர் வாழ்வு" எனும் தலைப்பிலான புலம்பெயர் தமிழர்களை உசுப்பேற்றும் பேருரையை நிகழ்த்தினார்.

சனி, 10 செப்டம்பர், 2011

விடுதலைப் புலிகளிடமிருந்து வை.கோ நிதி பெற்றார் - விக்கிலீக்ஸ்


1993 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த பிரிந்து மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய வை.கோபாலசாமி அக் கட்சியின் வளர்ச்சிக்காக தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து நிதியுதவி பெற்றதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு இந்திய சிறப்பு தேசிய விருது.


தென்னிந்திய தமிழ்த் திரைப்படத்துறையில் நடிகராக அறிமுகமாகிய, இலங்கையின் தமிழ் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான, கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் "ஆடுகளம்" திரைப்படத்தில் பேட்டைக்காரன் எனும் பாத்திரத்தில் சிறப்பாக நடித்தமைக்காக இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேலினால் இன்று புதுடில்லியில் உள்ள விஞ்ஞானபவனில் சிறந்த சினிமா கலைஞர்களுக்கான சிறப்பு தேசிய விருது எனும் கௌரவத்தினைப் பெறுகின்றார்.

புலம்பெயர்ந்து நோர்வே நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு "களத்துமேடு" வாழ்த்தினைத் தெரிவிக்கின்றது.

வியாழன், 8 செப்டம்பர், 2011

தமிழ் மக்களை பீதிக்குள்ளாக்கி வரும் மர்மமனிதன் யார்? - சுரேஸ் பா.உ. சூளுரை. - காணொளி இணைப்பு


இலங்கையில் பயங்கரவாதத்துடன் கூடிய யுத்தம் முடிவடைந்து விட்டது, நாங்கள் அபிவிருத்தியை நோக்கி முன்னேறிச் செல்கின்றோம், ஆகவே எமது நாட்டுக்கு இனிமேல் அவசரகாலச் சட்டம் தேவையில்லையென ஜனாதிபதி கூறி இருக்கின்றார், இவரின் கூற்றுக்கு மறுதலையாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதற்குரிய எந்த அறிகுறியும் இல்லை.

அச்சமில்லை அச்சமில்லை


வலைப்பூவுக்கான இசையுடன் கூடிய கொடி

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

தமிழைக் கொல்லும் எதிரி


தமிழர்களுக்கென பல்லாயிரக்கணக்கான ஊடகங்கள் உள்ளன, அவற்றில் பல மக்களுக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன, அந்த வரிசையில் "எதிரி" எனும் இணையத் தளம் "கானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக மாற நினைத்ததாம்" என்பது போல செய்திகள் எழுத வேண்டுமென்பதற்காக தான் நினைக்கும் உரைநடைக்கேற்ப செய்தி பகிர்வது அவலட்சணமாக உள்ளது.

எதிரி இணையத் தளத்தினால் தமிழ்மொழி எண்ணற்ற தொல்லைகளை தினமும் அனுபவித்து வருகின்றது,  தமிழைச் செம்மையாக எழுத முடியாவிட்டால் எதற்காக இந்த வேடம். இன்று முன் பக்கத்தில் பிரசுரமாகி இருந்த செய்தியொன்று இந்தப் பத்தியை எழுதத் தூண்டியது.

இரா.சம்பந்தனின் குடும்ப திருமணத்தால் தமிழ்க் கட்சிகளின் புதுடில்லிப் பேச்சுவார்த்தை இடைநடுவில் இரத்து!


பாரத நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனின் அழைப்பில் புதுடில்லிக்கு விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக தமிழ்க் கட்சிகளின் 16 உறுப்பினர்கள் ஆகஸ்ட் 23,24 ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தைக்கென அழைக்கப்பட்டிருந்தும் கட்சிகளுக்கிடையேயான முரண்பாட்டினால் ஒருமித்த முடிவெடுக்க முடியாமல் பின்வாங்கினர்.

புதுடில்லியில் இலங்கைத் தமிழ்க் கட்சிகள் - சுதர்சன நாச்சியப்பன் செவ்வி. (காணொளி)


இலங்கை தமிழர்களின் அவலங்கள் தொடர்பாக இலங்கைத் தமிழ் அரசியற் கட்சிகளில் 16 உறுப்பினர்களை உள்ளடக்கி, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 23, 24 ஆம் திகதிகளில் புதுடில்லியில் நடைபெற்ற மகாநாடு தொடர்பாக இந்திய சஞ்சிகையான குமுதம்.கொம் இணையத் தளத்துக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் பா.ஏகலைவனினால் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனிடம் பெறப்பட்ட செவ்வி பல அரிய தகவல்களை அறியத் தந்துள்ளது.

திங்கள், 5 செப்டம்பர், 2011

மர்மமனிதன் விவகாரம் யாழில் உண்ணாவிரதம் - சங்கரி பேட்டி, ஈபிடிபி கலந்து கொள்ளுமா ?


இலங்கைத் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அண்மைக் காலமாக மர்ம மனிதன் எனும் பீதி மக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றது.  இதனைச் செய்வித்துக் கொண்டிருப்பது அரசாங்கமே என பல்வேறு சந்தற்பங்களில் அடையாளம் காணப்பட்டிருந்தும் அரசாங்கமோ அல்லது படை தரப்போ மர்ம மனிதன் விடயத்தில் எவ்வித அக்கறையும் காட்டாமல் அல்லது கைது செய்ய முயற்சி எடுக்காமல், மாறாக மர்ம மனிதனைப் பிடிக்க முயலும் பொதுமக்கள் மீதே தாக்குதலும் குற்றமும் சுமத்தப்படுகின்றது.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

முன்னாள் போராளிகளின் பெயரில் ஊடக விபச்சாரம் - காணொளி இணைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை மையப்படுத்தி புலம்பெயர்ந்த நாடுகளில் பண வசூலிப்பில் ஈடுபட்டவர்களை அந்தந்த நாடுகள் கைது செய்ததைத் தொடர்ந்து, நிறுத்தப்பட்டு இருந்த சட்டரீதியற்ற பண வசூலிப்பை மீண்டும் சில தமிழ் ஊடகங்கள் கையெடுத்துள்ளன.

புதன், 31 ஆகஸ்ட், 2011

இடை நிறுத்தப்படுமா தினக்குரல் பத்திரிகை ?

இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளில் வீரகேசரி, தினக்குரல் மற்றும் தினகரன் போன்ற பத்திரிகைகள் முதன்மையானவை, அவற்றில் தினகரன் லேக் ஹவுஸ் எனும் அரச பத்திரிகைத் திணைக்களத்தினைச் சார்ந்ததால் அரசாங்க செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றது, மற்றைய இரு பத்திரிகைகளிலும் மக்களிடம் அதிக செல்வாக்கு மிக்க பத்திரிகையாக வீரகேசரி திகழ்கின்றது.

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

ஓரங்கட்டப்பட்ட கிழக்கு முதலமைச்சர்! - படங்கள் இணைப்பு

திருகோணமலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று 2011.08.29 ஆம் திகதி காலை திருமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை முதல்வர் சி.சந்திரகாந்தன் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த புஞ்சிநிலமே, எம்.எஸ்.தௌபீக், எம்.கே.டி.எஸ்.குணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் சில்வா, கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள், கிழக்கு மாகாணசபை பிரதிநிதிகள் அடங்கலாக அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

தூக்குத் தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்த செங்கொடி! - கடிதம் இணைப்பு


தமிழக அரசியற் களத்தில் கால் பதிப்பதற்காக அண்மைக் காலமாக புதிய முகங்கள் சில புதிய புதிய யுக்தியைக் கையாண்டு வந்தார்கள், கடந்த காலங்களில் இவர்களுக்கு "இலங்கைத் தமிழர்" எனும் நாமம் பேசு பொருளாகக் கிடைத்திருந்தது, இதற்கான ஏற்பாடுகளை தமிழீழ விடுதலைப் புலிகளே செய்து வந்தார்கள்.  முள்ளிவாய்க்கால் சங்கமத்துடன் பேசு பொருளுக்கு நாதியற்றிருந்த சினிமாத்துறை அரசியலாளர்கள் இப்போது கிடைத்திருக்கும் துருப்பாக இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தூக்குத் தண்டனையை எதிர்பார்த்து இருக்கும் முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் போன்றோரை இன்றைய அரசியல் காய் நகர்த்தலுக்குப் பயன்படுத்துகின்றார்கள்.

இலங்கைத் தமிழர் விடிவுக்காக புதுடில்லி சென்ற தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையீனம் மீண்டும் அம்பலம்!

"துயரும் வாழ்வும்" எனும் தொனிப் பொருளில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை குறித்து இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஸன நாச்சியப்பன் தலைமையில் இருபது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இலங்கைத் தமிழ்க் கட்சிப் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டதான மாகாநாடு 2011 ஆகஸ்ட் 26,  27 ஆம் திகதி புதுடில்லியில் இடம்பெற்றது.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

கச்சதீவுப் பகுதியில் மீன் பிடிக்கத் தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை! - காணோளி

இலங்கை தமிழ் மக்களின் அவலம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று 2011.08.25 ஆம் திகதி நடைபெற்ற விவாதத்துக்கு இன்று 26 ஆம் திகதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா பதிலளித்து உரையாற்றினார்.

இலங்கைச் சிறைகளில் இந்திய மீனவர்கள் எவருமே இல்லை, அனைவருமே விடுவிக்கப்பட்டு விட்டார்கள், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து வருகின்றது.

புதன், 24 ஆகஸ்ட், 2011

மர்ம மனிதன் விடயமாக பாராளுமன்றத்தில் சூளுரைத்தார் பா.உ. ஶ்ரீதரன்.


இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று 2011.08.23 ஆம் திகதி விமான நிலையங்கள், கப்பல் துறைமுகங்கள் அபிவிருத்தி தொடர்பான கூட்டத் தொடர் இடம்பெற்ற வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் பிற்பகல் 2.40 மணியளவில் தனக்குக் கிடைத்த சந்தற்பத்தினைச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு, நாட்டில் இன்று மக்களை அசௌகரியத்துக்குள்ளாகி நிம்மதி இழக்க வைத்திருக்கும் மர்ம மனிதன் விவகாரத்தை தெளிவு படுத்தினார்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தால் அரசியலாக்கப்படும் இலங்கைத் தமிழ்ப் பெண்கள்!


"அரசியலாக்கப்படும் இலங்கைத் தமிழ்ப் பெண்களின் சமுதாய நிலை" எனும் தலைப்பில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய பதிவு தற்போதைய இலங்கையின் சில சாதக பாதக நிலமையைக் குறிப்பிட்டிருந்தது, தலைப்புக்குப் பொருத்தமற்ற பத்தியாக காணப்பட்ட போதிலும் நாட்டை உலுப்பிக் கொண்டிருக்கும் கிறிஸ் பூசப்பட்ட மர்ம மனிதனைப் பற்றியதாக தொட்டுச் சென்றுள்ளார்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

தமிழ்ப் பிரதேசசபை அபிவிருத்தியும் புலம்பெயர் தமிழர்களும்!


நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழா யாழ்ப்பாணத்தில் ததேகூ தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுமைக்குட்பட்ட உள்ளூராட்சி மன்ற பிரதேசசபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் வழங்காவிடின் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து பெற்று சபையைத் திறம்பட நடாத்துவோம் என சம்பந்தன் கூறினார்.

புதன், 17 ஆகஸ்ட், 2011

கிழக்கில் பீதியை ஏற்படுத்தும் மர்ம மனிதர்களைக் கண்டு கொள்ளாத தமிழ் அரசியல்வாதிகள்!



இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ள மர்ம மனிதனினால் தினமும் தொல்லைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது, இதனை தமிழ் அரசியல்வாதிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது கவலையை ஏற்படுத்துகின்றது.

எமது எதிர்கால கல்வியலாளர்களைச் சிதைப்பதற்காக திட்டமிட்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் இந்த நேரம் பார்த்து மர்ம மனிதனை உருவாக்கி உள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம்.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

கிழக்கு மாகாணத்தில் "கிறிஸ்"மனிதன்!

இலங்கைச் சஞ்சிகையில் வெளிவந்த இயக்கப்படும் கிறிஸ் மனிதனின் கற்பனைச் சித்திரம்.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

தமிழகத் தொலைக்காட்சியில் தமிழ்க் கொலை! - காணொளி


தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் ரிவி, மக்களுக்குத் தேவையான பொழுதுபோக்கை மையப்படுத்தி காத்திரமான பல நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது.  அந் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் "கோம் சுவீட் கோம்",  இந்நிகழ்ச்சியை முன்னர் நடிகர் சத்தியராஜ் தொகுத்தளித்தார், போட்டியின் வெற்றியாளர்களுக்கு வீடொன்றைப் பரிசளிப்பதே நோக்கம்.  தற்போது தீபக், திவ்வியதர்ஷினி இருவரும் இணைந்து தொகுத்தளிக்கின்றார்கள்.

சனி, 13 ஆகஸ்ட், 2011

விடுதலை பெற்ற 152 முன்னாள் விடுதலைப் புலிகள்! - காணொளி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக முள்ளிவாய்க்காலில் காவு கொடுக்கத் தயாராக இருந்த பல்லாயிரம் பேரில் இருந்து மீண்டு, ஸ்ரீலங்கா படையிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் 11000 பேரில் புனர்வாழ்வு பெற்ற 152 பேர் நேற்று 2011.08.12 ஆம் திகதி புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவினால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

கிறிஸ் மனிதனெனும் வதந்தியும், சாதகமாக்கிக் கொள்ளும் மர்ம ஆசாமிகளும்!


கிறிஸ் போன்ற உடலில் வழுக்கக் கூடிய திரவத்தைப் பூசிக் கொண்டு இரவு வேளைகளில் பெண்களிடம் சென்று பாலியல் தொந்தரவு செய்யும் மர்ம மனிதர்களால் ஸ்ரீலங்காவில் பல பகுதிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. அண்மைக் காலமாக இம் மர்ம மனிதர்களின் செயற்பாடுகள் பல இடங்களிலும் அதிகரித்திருப்பது வேதனையைத் தருகின்றது, இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான செயற்பாடுகள் இன்று வரை காவற்துறையினர் மேற்கொள்ளாமல் கண்டும் காணாமல் இருப்பது தான் வேடிக்கை.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

கோத்தபாயவின் விமர்சனத்துக்கு ஜெயலலிதா கண்டனம்! (காணொளி)


தமிழக சட்டப் பேரவைத் தீர்மானத்தை விமர்சித்த ஸ்ரீலங்காவுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென கடந்த ஜூன் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானம், முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் இலாபத்துக்காகக் கொண்டு வரப்பட்டதாகுமென ஸ்ரீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் விடுதலைப் புலிகளால் கற்றல் மறுக்கப்பட்ட முன்னாள் போராளிகள் (காணொளி)

தமிழீழ விடுதலைப் புலிகளால் கற்றல் மறுக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 185 பேர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றார்கள்.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

இந்திய ஹெட்லைன் ருடே ஒளிபரப்பிய இலங்கை கொலைக்கள சாட்சியம். (காணொளி)

இந்தியாவின் புதுடில்லியை மையமாகக் கொண்ட "HEADLINES TODAY"  (ஹெட்லைன் ருடே) எனும் ஊடகம், பிரித்தானிய ஊடகமான சனல் 4 ஒளிபரப்பிய "ஸ்ரீலங்காவின் கொலைக் களம்" எனும் போர்க்குற்ற ஆதார வீடியோ காணொளிக்கு ஒத்ததாக "I witnessed Genocide: Inside Lanka’s Killing Fields" எனும் ஆவண வீடியோ காணொளியை இன்று 2011.08.09 ஆம் திகதி இரவு ஒளிபரப்பியது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் கே.பி. குமரன் பத்மநாதன் வழங்கிய செவ்வி.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. குமரன் பத்மநாதன் "தமிழ் மிரர்" இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஸ்ரீலங்கா கொலைக்குற்ற ஆவண காணொளி தமிழில்!

பிரித்தானிய ஊடகமான சனல் 4 தொலைக்காட்சி, ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்கள் மீது நடாத்திய கொலைக் குற்றங்களை ஆவணமாக வெளியிட்டு சர்வதேசத்துக்குக் காட்டியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உளத் தூய்மையாக செயற்படுமா?


இலங்கை அரசாங்கத்துடன் பத்து தொடர் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பேச்சுவார்த்தையைத் தொடர முடியாமல் உள்ளது, அரசாங்கம் உளச்சுத்தியுடன் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் காலத்தை நீடிக்கின்றது என்பதை உணர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்துள்ளனர்.

சனி, 6 ஆகஸ்ட், 2011

வவுனியா நகரசபைத் தலைவருக்கு வந்த அனாமதேய அச்சுறுத்தல் கடிதம்!


வவுனியா நகரசபைத் தலைவர் ஐ.கனகையா 48 மணித்தியாலத்தினுள் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டுமெனவும், இல்லாவிடில் உறவினர்கள் உட்பட அவரும் கொல்லப்படுவாரென ஜிகாத் போராளிகள் எனும் பெயரில் அச்சுறுத்தல் கடிதம் வந்துள்ளதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

கலைந்த தமிழ் கட்சிகள் அரங்கம் மீண்டும் இணையுமா?


தமிழ் கட்சிகளின் ஒருமைப்பாடு அவசியம் எனக் கருதிய தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் "தமிழ்க் கட்சிகளின் அரங்கம்" எனும் குடையின் கீழ் ஒன்று சேர்ந்து, பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தின.

இக் கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமையை உருவாக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னின்றார் என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் அரசாங்க அமைச்சராக இருக்கும் இவருடனும், இவரைச் சார்ந்த கட்சியான ஈபிடிபி உடனும் சேர்ந்து தமிழ்க் கட்சிகள் அரங்கத்தை நடத்துவதில் கருத்து வேறுபாடுகள் நிலவின.

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

சனல் 4 வீடியோ காணொளிக்கு மறுப்புக் கூறும் ஸ்ரீலங்கா வீடியோ காணொளி!


பிரித்தானிய ஊடகமான சனல் 4 அண்மையில் ஒளிபரப்பிய "இலங்கையின் கொலைக்களம்" எனும் வீடியோ காணொளி பலதரப்பட்ட மக்களையும் சென்றடைந்து சலசலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா பேரினவாதம் உலகுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவையை உணர்ந்துள்ளது.

புதன், 3 ஆகஸ்ட், 2011

யாழ்.நல்லூர் முத்திரைச்சந்தியில் வீர வாளுடன் சங்கிலிய மன்னனின் பொன்னிறச் சிலை.

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னன் சங்கிலியனின் நல்லூர், முத்திரைச்சந்தியில் இருந்த உருவச் சிலை இந்திய சிற்பிகளால் பொன்னிறத்தில் புனருத்தாரணம் செய்யப்பட்டு இன்று 2011.08.03 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் திறப்பு விழா செய்யப்பட்டது.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

த.தே.கூ. பொய்முகம் மீண்டும் அம்பலம், ஸ்ரீலங்கா குழுவில் செல்வம் அடைக்கலநாதன்!


மீனுக்கு வாலையையும் பாம்புக்கு தலையையும் காட்டிக் கொள்ளும் விலாங்கினைப் போல் தமிழ் மக்களிடம் ஒன்றும் சிங்களப் பேரினவாத அரசாங்கத்திடம் ஒன்றும் கூறி, அரசியற் கதிரையைத் தக்க வைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொய்முகம் மீண்டும் ஒரு முறை அரங்கேறியுள்ளது.

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

மனிதாபிமான நடவடிக்கையென சர்வதேசத்தின் சோற்றினுள் பூசனிக்காயை புதைக்க முற்படும் கோத்தபாய!


தமிழீழ விடுதலைப் புலிகளால் மாவிலாறு அணைக்கட்டு பூட்டப்பட்ட 2006 ஜூலை தொடக்கம் 2009 மே முள்ளிவாய்க்கால் வரையான காலப் பகுதியில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட “மனிதாபிமான நடவடிக்கை தொடர்பான உண்மை விபர ஆய்வு” எனும் தொனிப் பொருளில் இன்று ஓகஸ்ட் - 01ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் சர்வதேசத்துக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

சிவாஜிலிங்கம் புதிய அரசியல் கடை திறக்கவுள்ளார்?


யாழ்ப்பாணம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்காக ததேகூ சார்பாக முதன்மை வேட்பாளர் க.சிவாஜிலிங்கம் ஈறாக பலர் போட்டியிட்டனர், இந்த நகரசபைக்கான ஆட்சி அதிகாரத்தை ததேகூ கைப்பற்றியது, அதிகூடிய விருப்பு வாக்குப் பெற்றவரே தலைவராகக் கூடிய நிலை இருப்பதால் என்.ஆனந்தராஜா அவ் ஆசனத்துக்கான தகைமையைப் பெறுகின்றார்.

சனி, 30 ஜூலை, 2011

ஊடகவியலாளர் குகநாதனை தாக்கியவர்கள் யார்!

2011.07.29 ஆம் திகதி (நேற்று) மாலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் "உதயன்" பத்திரிகையின் செய்தி ஆசிரியரான 59 வயதுடைய ஞானசுந்தரம் குகநாதன் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெள்ளி, 29 ஜூலை, 2011

மௌனித்த இதயவீணை வானொலி மீண்டும் குரல் கொடுக்குமா!


ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் நடாத்தி வரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தங்களின் பிரசார நடவடிக்கைக்காக "இதயவீணை" எனும் பகுதி நேர வானொலியினை "இலங்கை வானொலி"க்கூடாக ஒலிபரப்பி வந்தனர், இதனால் அறிய முடியாத பல மறைக்கப்பட்ட செய்திகள் அம்பலத்துக்கு வந்தன.

வியாழன், 28 ஜூலை, 2011

கிழக்கில் தொடரும் நாசகார செயல்களும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும்


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து வேறு அரசியற் கட்சியை உருவாக்கிக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகத் தெரியவில்லை.

செவ்வாய், 19 ஜூலை, 2011

கைப்பற்றிய பிரதேசசபைகளில் ததேகூ செய்த அபிவிருத்திகள் என்ன?


ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குக் கோரும் அறிக்கையினை பாட்டனின் பேரால் தந்தை வழியாக அரசியல்வாதியாக உள்நுழைந்த சந்திரநேரு சந்திரகாந்தன் வெளியிட்டுள்ளார்.

சனி, 16 ஜூலை, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் போலி முகத்திரையை அம்பலமாக்கவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்


ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி இருப்பதனால், அந்தந்த பிரதேசங்களில் போட்டியிடும் அரசியற்கட்சிகள் மிகவும் சுறுசுறுப்பாக அரசியல் வேட்டையில் இறங்கி மக்களிடம் வாக்குகளை பெற முயன்று வருகின்றார்கள்.

செவ்வாய், 12 ஜூலை, 2011

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2011 ஜூலை 23

எதிர்வரும் 2011. 07.23 ஆம் திகதி நடைபெறவுள்ள ஒத்திவைக்கப்பட்ட 65 சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.  அபேட்சகர்கள் வாக்கு வேட்டைக்கு வீடு வீடாகச் சென்று கட்சி சார்ந்த கொள்கைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கதிர்காம கந்தனின் பக்தையின் பரிதாப மரணத்தைத் திசை திருப்பி அரசியல் இலாபமீட்ட பிரசாரம் மேற்கொள்ளும் ஊடகங்கள்!


கதிர்காமம் முருகன் ஆலயத்தைத் தரிசிக்கும் நோக்கத்தில் ஆடி மாத கொடியேற்றத்தினைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களிலும், கால் நடையாகவும் சென்று வழிபாடு நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

திங்கள், 11 ஜூலை, 2011

168 ஆண்டுகளாக பிரித்தானியாவில் பவனி வந்த "நியூஸ் ஒஃப் தி வேல்ட்" பத்திரிகைக்கு மூடு விழா!

பிரித்தானியாவில் 1843 ஆம் ஆண்டு தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரை, கடந்த 168 ஆண்டுகளாக பிரசுரமாகி வந்த “நியூஸ் ஒஃப் தி வேல்ட்” (NEWS OF THE WORLD) எனும் பத்திரிகை நேற்று தனது இறுதிப் பதிப்பை வெளியிட்டு வாசகரிடமிருந்து பிரியாவிடை பெற்றது. தனது இறுதிப் பதிப்பின் முதல் பக்கத்தில் தனது பழைய பதிப்புக்களின் படங்களுடன், பெரிய எழுத்தில் “நன்றி, சென்று வருகிறேன்” எனப் பதிவு செய்திருந்தது.

ஞாயிறு, 10 ஜூலை, 2011

பாராளுமன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முகத்திரையைக் கிழிக்க முனைந்த பிரதியமைச்சர் கருணா! - வீடியோ இணைப்பு

கடந்த 2011 ஜூன் 07 ஆம் திகதி பிற்பகல் 2.05 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தனால் பாராளுமன்றத்தில் பிரேரிக்கப்பட்ட ஒத்திவைப்பு பிரேரணையின் உரையைத் தொடர்ந்து மாலை 7.25 மணியளவில் உரையாற்றிய பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சந்தர்ப்பவாதப் போக்கினைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.

புதன், 6 ஜூலை, 2011

சனல் 4 வீடியோ போர்க் குற்ற ஆதாரத்தை பொய்ப்பிக்க எத்தனிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம்!

பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 அண்மையில் ஒளிபரப்பிய இலங்கையின் போர்க் குற்ற ஆவணமான வீடியோ பதிவு இலங்கை அரசாங்கத்தை சர்வதேசம் திரும்பிப் பார்த்து கேள்வி கேட்கும் நிலையை உருவாக்கியது, இதனால் இலங்கை அரசாங்கம் வெட்கித் தலை குனியும் நிலை ஏற்பட்டுள்ளது.

செவ்வாய், 5 ஜூலை, 2011

புனர்வாழ்வு பெற்று விடுதலையான 552 முன்னாள் புலிகள் - வீடியோ இணைப்பு

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களின் கடந்த இரு வருடங்களாக தொழிற்பயிற்சிகளைப் பெற்ற பெண்கள் எண்மர் அடங்கலாக 552 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 2011.07.04 ஆம் திகதி (நேற்று) வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தினைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஞாயிறு, 26 ஜூன், 2011

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எனும் அரசியல் பெட்டிக்கடை கலைக்கப்பட்டது!

நேற்று மாலை ஊடகவியலாளர் மாநாட்டினை நடாத்திய தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் தலைவர் சிறிகாந்தா மற்றும் செயலாளர் சிவாஜிலிங்கம் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் இதனால் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பை இன்றுடன் கலைப்பதாக தெரிவித்துள்ளனர்.

புதன், 15 ஜூன், 2011

"இலங்கையின் கொலைக்களம்" ஆவணத் திரைப்படத்தின் முழு வடிவம்!

ஸ்ரீலங்காவின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தும் "இலங்கையின் கொலைக்களம்" எனும் தலைப்பிலான ஆவணத் திரைப்படத்தை சனல் - 4 தொலைக்காட்சி ஒளிபரப்புச் செய்தது.

Sri Lanka’s Killing Fields எனும் இவ் ஆவணத் திரைப்படத்தின் முழு வடிவமும் இணைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 14 ஜூன், 2011

சனல்-4 தொலைக்காட்சியில் இன்று "இலங்கையின் கொலைக்களம்" ஒளிபரப்பு

வன்னி யுத்தத்தின் அவலத்தினை உலகுக்குக் காட்டுவதற்காக சனல் 4 தொலைக்காட்சியினால் உருவாக்கப்பட்ட "இலங்கையின் கொலைக்களம்" எனும் ஆவணத் திரைப்படம் இன்று சர்வதேச நேரம் 23.05 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

ஞாயிறு, 5 ஜூன், 2011

கட்சி தாவலை உறுதிப்படுத்தினார் மு.றெமிடியஸ்

யாழ் மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான முடியப்பு றெமீடியஸ் ஆளும் மக்கள் ஐக்கிய மக்கள் முன்னணியில் இணைந்து செயற்பட இருப்பதாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும். ......................................................................................
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----