விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 டிசம்பர், 2011

'கலாபூஷணம்' விருது பெறும் தமிழ்க் கலைஞர்கள் பட்டியல்.


இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பனவற்றின் ஏற்பாட்டில் வருடாந்தம் கலைத்துறையில் சிறந்த பண்பாளர்களுக்கு 'கலாபூஷணம்' விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றது.

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு இந்திய சிறப்பு தேசிய விருது.


தென்னிந்திய தமிழ்த் திரைப்படத்துறையில் நடிகராக அறிமுகமாகிய, இலங்கையின் தமிழ் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான, கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் "ஆடுகளம்" திரைப்படத்தில் பேட்டைக்காரன் எனும் பாத்திரத்தில் சிறப்பாக நடித்தமைக்காக இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேலினால் இன்று புதுடில்லியில் உள்ள விஞ்ஞானபவனில் சிறந்த சினிமா கலைஞர்களுக்கான சிறப்பு தேசிய விருது எனும் கௌரவத்தினைப் பெறுகின்றார்.

புலம்பெயர்ந்து நோர்வே நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு "களத்துமேடு" வாழ்த்தினைத் தெரிவிக்கின்றது.

சனி, 2 அக்டோபர், 2010

இலங்கை அரச இலக்கிய விருதுகள்.

2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச இலக்கிய விருதுகள் மும்மொழிகளையும் சேர்ந்த 35 நூல்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் வைத்து 2010.09.30 ஆம் திகதி வழங்கப்பட்டன, இவ்விருதுகளை 11 தமிழ்மொழி நூல்களும், 18 சிங்கள மொழி நூல்களும், 06 ஆங்கில மொழி நூல்களும் பெற்றுக் கொள்ள நீண்ட காலமாகப் இலக்கியத் துறைக்கு பங்களிப்புச் செய்த கலாபூஷணம் ஏ. முஹம்மது சமீம், பேராசிரியர் டப்ளியு.எஸ். கருணாதிலக்க மற்றும் கலாநிதி லக்ஷ்மி டி சில்வா ஆகிய மூவருக்கும் “சாஹித்தியரத்ன” விருதுகள் வழங்கப்பட்டன.

2009 ஆம் ஆண்டு வெளியீடு செய்யப்பட்ட 1332 நூல்களில் மும்மொழிகளையும் சேர்ந்த 77 நூல்கள் அரச இலக்கிய விருதுக்காக சிபாரிசு செய்யப்பட்டிருந்தும், 35 நூல்களே அரச இலக்கிய விருதுகளை பெற்றுக் கொள்ள தகுதி பெற்றன.

தமிழ் மொழியில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான விருதை ஒ.கே. குணநாதன் எழுதிய "குறும்புக்கார ஆமையார்", சிறந்த சிறுவர் மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான விருதை சரோஜினி அருணாசலம் எழுதிய "என்றும் உங்கள்", சிறந்த நாடக இலக்கியத்திற்கான விருதை கலையார்வன் எழுதிய "கூத்துக்கள் ஐந்து" போன்ற நூல்கள் பெற்றுக் கொண்டன.

மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான விருதை, மடுல்கிரியே விஜேரத்ன எழுதிய "தீச்சுடர்", திக்குவல்லை கமால் எழுதிய "தொடரும் உறவுகள்", கெக்கிராவ சுலைஹா எழுதிய "பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும்", ஆய்வு இலக்கியத்திற்கான விருதை கலாநிதி எஸ். ஜெபநேசன் எழுதிய “இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன்”, கவிதை இலக்கியத்திற்கான விருதை மு.பொ. எழுதிய "கவிதையில் துடிக்கும் காலம்" போன்ற நூல்களும் பெற்றுக்கொண்டன.

அறிவியல் இலக்கியத்திற்கான விருதை ச. அருளானந்தம் எழுதிய "அற்புதமான வானம்", சிறுகதை இலக்கியத்திற்கான விருதை சுதாராஜ் எழுதிய "மனைவி மகாத்மியம்", சிறந்த நாவல் இலக்கியத்திற்கான விருதை நீ.பி. அருளானந்தம் எழுதிய "துயரம் சுமப்பவர்கள்" போன்ற நூல்களும் பெற்றுக்கொண்டன.

விருதுக்குத் தகுதியான நூல்களைப் படைத்த ஆசான்களுக்கு களத்துமேட்டின் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

வியாழன், 4 டிசம்பர், 2008

ஊடகவியலாளர் திசைநாயகத்துக்கு ஊடகச் சுதந்திர விருது!

ஊடகப் பணியின் மூலம் தகவல் சுதந்திரத்திற்கான ஆதரவை வெளிப்படுத்தும் நாடுகளில் உள்ள சிறந்த ஊடகவியலாளர்களுக்கு ஊடக கண்காணிப்பகமான எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு "ஊடகச் சுதந்திர விருது" வழங்கி கௌரவித்து வருகின்றது.

எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு இவ் விருதிற்காகத் தெரிவு செய்துள்ள அறுவர்களில் ஸ்ரீலங்கா தமிழ் ஊடகவியலாளர் திரு.ஜே.எஸ்.திசைநாயகமும் ஒருவராகும்.

ஊடக கண்காணிப்பகமான எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பினால் இவருக்கான விருதினை இன்று 2008.11.04 ஆம் திகதி வியாழக்கிழமை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பரிஸில் நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாதி அவர்கள் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார்.

மனித உரிமைகள் அமைப்பினால் சர்வாதிகாரப் போக்குடையது என விழிக்கப்படும் ஸ்ரீலங்காவின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் அதிகாரத்தினால் கடந்த 2008.03.07 ஆம் திகதி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதலாவது ஊடகவியலாளர் திரு.ஜே.எஸ்.திசைநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டத்தினாலும், அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள திசைநாயகத்தின் மீது குற்றம் நிரூபிக்கப்படின், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான குற்றத்துக்காக குறைந்தது ஐந்து வருடமாவது சிறைத்தண்டனை விதிக்கப்படுமெனவும், அவசரகால ஒழுங்கு விதியின் கீழான குற்றமென தீர்ப்பு வழங்கப்படின் பத்து வருடங்கள் முதல் இருபது வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென வழக்கறிஞர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----