ஞாயிறு, 29 ஜனவரி, 2012

இன்டபோல் சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் விடுதலைப் புலிகளின் நெடியவன்!


கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் ஶ்ரீலங்கா படையினரால் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடவும், போராட்டத்தின் பெயரால் மேலதிக பணத்தினை வசூலிப்பதனை நோக்கமாகக் கொண்டு பலர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் எனக் கூறிக் கொள்கின்றார்கள், இந்தப் பட்டியலில் முன்னணியில் உள்ளவரும் நோர்வேயில் வசிப்பவருமான நெடியவன் எனப்படும் சிவபரன் பேரின்பநாயகம் இன்டபோல் எனப்படும் சர்வதேச பொலிசாரினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தேடப்படுகின்றார்.

சனி, 28 ஜனவரி, 2012

தமிழ்வின் வெளியிட்ட போலிச் செய்திக்கு ஆப்பு!


அதிக வாடிக்கையாளர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக புதுப் புதுச் செய்திகளை முந்திக் கொண்டு இணையத்தளங்கள் தரவேற்றி வருகின்றன, இவை நவீன தொழினுட்பத்தின் வளர்ச்சி என்றால் மிகையில்லை, ஆனால் வருமானத்தை மாத்திரமே குறியாகக் கொண்ட "தமிழ்வின்" போன்ற சில இணையத்தளங்கள் போலியான செய்திகளை பிரசுரித்து மக்களை ஏமாற்றி வருகின்றன.

திங்கள், 23 ஜனவரி, 2012

கூட்டமைப்பு சம்பந்தனை பகிரங்க கலந்துரையாடலுக்கு அழைக்கின்றார் கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன்!


வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த மாகாணங்களுக்கான காணி, காவற்துறை அதிகாரங்கள் பற்றிப் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தனை கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

போதைப் பொருள் கடத்திய மௌலவி!


போதையை எந்த மதமும் அங்கீகரிக்கவில்லை, இஸ்லாம் மதம் இறுக்கமான கட்டுப்பாடுகளின் ஊடாக போதைப் பொருள் பாவனையை முற்றாகவே தடை செய்துள்ளது, ஆனால் வேலியே பயிரை மேய்வது போல் இஸ்லாமிய மதப் போதகரான சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.சி.எம்.புஹாரி மௌலவி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட போது சென்னை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சனி, 21 ஜனவரி, 2012

தற்கொலை செய்த விடுதலைப் புலிகள் தம்பதியினரின் மரண வாக்குமூலம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாக இருந்து சுய வாழ்க்கைக்குத் திரும்பிய நிரஞ்சன் சங்கீதா காதல் தம்பதிகள் கடந்த 2012.01.16 ஆம் திகதி கொடிய வறுமைக்கு முகம் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். நிரஞ்சன் விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் காலை இழந்ததுடன், காதலி சங்கீதாவைத் திருமணம் செய்து பால்ப்பண்ணை, முறிப்பு, முள்ளியவளை எனும் விலாசத்தில் வசித்து வந்தார்.

திங்கள், 16 ஜனவரி, 2012

யாழ். அரச செயலகத்தில் அநாகரிகமாக உரையாற்றிய ஶ்ரீதரன் பா.உ.


யாழ் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று 2012.01.16 ஆம் திகதி யாழ்ப்பாணம் அரசாங்க செயலகத்தில் நடைப்பெற்றது, உண்மையற்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவருவது தொடர்பாகவும், அறிக்கைகளை பொறுப்பற்று வழங்கக் கூடாதெனவும் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் கருத்துத் தெரிவித்தார்.

வெள்ளி, 13 ஜனவரி, 2012

ஶ்ரீ லங்காவில் பதிவுச் சான்றிதழ் பெற்ற இணையத் தளங்கள் விபரம்.


இலங்கைச் செய்திகளைத் தரவேற்றும் இணையத் தளங்கள் அனைத்தும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதன் முறையாக இன்று 2012.01.13 ஆம் திகதி 27 செய்தி இணையத் தளங்கள் ஶ்ரீ லங்காவின் முறையான பதிவுச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளன.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables

வீடியோ

Loading...

இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----