யாழ்ப்பாணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ்ப்பாணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

கலைந்த தமிழ் கட்சிகள் அரங்கம் மீண்டும் இணையுமா?


தமிழ் கட்சிகளின் ஒருமைப்பாடு அவசியம் எனக் கருதிய தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் "தமிழ்க் கட்சிகளின் அரங்கம்" எனும் குடையின் கீழ் ஒன்று சேர்ந்து, பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தின.

இக் கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமையை உருவாக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னின்றார் என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் அரசாங்க அமைச்சராக இருக்கும் இவருடனும், இவரைச் சார்ந்த கட்சியான ஈபிடிபி உடனும் சேர்ந்து தமிழ்க் கட்சிகள் அரங்கத்தை நடத்துவதில் கருத்து வேறுபாடுகள் நிலவின.

புதன், 31 டிசம்பர், 2008

யாழ்ப்பாண எதிர்கால நோக்கு - பரிசளிப்பு விழா!

யாழ்ப்பாணத்தின் எதிர்கால நோக்கு எனும் தொனிப்பொருளில் தொழில்சார் மற்றும் கல்விக் கண்காட்சியும் களிப்பூட்டு விழாவும் யாழ்ப்பாண மாவட்ட ஸ்ரீலங்கா இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரஸ்ரீயின் ஏற்பாட்டில் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்றிருந்தது, இந் நிகழ்வில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பொது மக்கள் கலந்து கொண்டதுடன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்கைக்கோள் மூலமாக அகன்ற தொலைக்காட்சியில் தமிழில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

இந் நிகழ்வில் இடம்பெற்ற பாடல் போட்டியில் தோற்றி முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாண பல்கலைக் கழக நுண்கலைப் பீட 3 ஆம் வருட மாணவி றஞ்சன் தாரிணி களிப்பூட்டு விழாவின் போது "உயிரே உயிரே" எனும் பாடலைப் பாடி "வடக்குத் தாரகை" (North Star) எனும் கிரீடத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து பெற்றுக் கொண்டதுடன், அசோஷியேற்றட் மோட்டார் கொம்பனி அன்பளிப்புச் செய்த மாருதி சுஷுக்கிக் காரினை முதலாம் பரிசாகப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இங்கு இடம்பெற்ற போட்டியில் இரண்டாம் இடத்தினைப் பெற்ற மீசாலையைச் சேர்ந்த விழிப்புலன் இழந்த திரு.குலேந்திரன் ஜெகதீசன் இரண்டாம் பரிசான இரு சக்கர உழவு இயந்திரத்தினைப் பெற்றுக்கொண்டார்.

.


மூன்றாம் இடத்தினை வென்ற யாழ்ப்பாண பல்கலைக் கழக சமூக விஞ்ஞான பிரிவு மாணவனான, சாவகச்சேரியைச் சேர்ந்த திரு.மகாலிங்கம் தயாபரன், மூன்றாம் பரிசாக உந்துருளியைப் பரிசாகப் பெற்றுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்தவின் தமிழ் உரையின் ஒளிப்பேழை







வெள்ளி, 28 நவம்பர், 2008

யாழ்ப்பாணத்தில் வெள்ளக்காடு, மக்கள் இடம்பெயர்வு!

கடந்த 2008.11.24 ஆம் திகதி இரவு பலத்த காற்றுடன் வீசிய கனமழையினால் யாழ்ப்பாணம் வரலாறு காணாத வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றது, இதனால் 32000 பேர் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம் பெயர்ந்துள்ளோர் விபரம்:

அனைக்கோட்டை : 570 குடும்பங்கள்
தங்கியுள்ள இடங்கள்:
கலைஒளி சனசமூக நிலையம் - 30 குடும்பங்கள்
உயரப்புலம் அ.மி.த.க.பாடசாலை - 90 குடும்பங்கள்
ஆதவன் பாடசாலை - 450 குடும்பங்கள்

நவாந்துறை : 130 குடும்பங்கள்
(நாவாந்துறை நித்தியஒளி, வசந்தபுரம், சாயிபுரம்)

நல்லூர் : 112 குடும்பங்கள்
(ஜே/81, ஜே/103)

யாழ்.இந்துக் கல்லூரி - 650 பேர்
இந்து மகளிர் கல்லூரி - 534 பேர்

காரைநகர் : 100 குடும்பங்கள்
(ஊரி, பிட்டிஎல்லை, மருதபுரம், வியாவில், கல்லந்தாழ்வு)
தங்கியுள்ள இடம்:
வியாவில் ஐயனார் ஆலய மண்டபம்
வலந்தலை பொதுக் கட்டடம்

புன்னாலைக்கட்டுவன்
(புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கம்பம்புலம்)
தங்கியுள்ள இடம்: புன்னாலைக்கட்டுவன் மகா வித்தியாலயம்

ஊரெழு
(ஊரெழு கிழக்கு, ஊரெழு மேற்கு)
தங்கியுள்ள இடம்: ஊரெழு கலைவாணி முன்பள்ளி

யாழ்.போதனா வைத்தியசாலை செயற்பட முடியாத அளவுக்கு பிரசவ விடுதி, இருதய சிகிச்சைப் பிரிவு பகுதிகளில் வெள்ளம் பன்னிரெண்டு அங்குலத்துக்கும் மேலாக பரவியுள்ளது. வீதிகளில் மரங்கள் முறிந்து கிடப்பதாலும், வீதிகளில் வெள்ளப் பெருக்கு இருப்பதாலும் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பண்ணைப் பாலம் சேதமுற்றுள்ளதால் தீவகங்களுக்கான மக்கள் போக்குவரத்தும் பாதிப்புற்றுள்ளது.













நன்றி: உதயன்

புதன், 12 நவம்பர், 2008

யாழ்ப்பாணத்தில் இளம் பெண் சுட்டுக் கொலை!

கடந்த 2008.11.09 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் நாயன்மார்கட்டுப் பகுதியில் வைத்து வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த 27 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயான ஸ்ரீரங்கன் சுமதி துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த மனைவியின் சடலத்தை கணவர் நிதிபதிக்கு அடையாளம் காட்டினார்.

வியாழன், 27 செப்டம்பர், 2007

சுன்னாகத்தில் பொதுமக்கள் மீது கிளைமோர் குண்டுத் தாக்குதல்!

இன்று காலை 9.50 மணியளவில் யாழ்ப்பாணம் சுன்னாகம் மத்திய சந்தை பகுதியில் ரோந்து சென்ற பொலிஸ் வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டும் 17 பேருக்கும் மேற்பட்டோர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொல்லப்பட்டடோர் விபரம்:
1.நாகமுத்து ராசையா (வயது 70) அளவெட்டி.
2.சீனியர் சண்முகராஜா (வயது 49)
3.செல்லையா அசோகன் (வயது 37) கல்லாரை, மல்லாகம்.

படுகாயமடைந்தோர் விபரம்:
1.காசிப்பிள்ளை (வயது 90) கண்ணகி அம்மன் கோவிலடி அளவெட்டி
2.நளாயினி (வயது 45) அளவெட்டி வடக்கு
3.தமிழ்ச்செல்வன் (வயது 35) அளவெட்டி மேற்கு
4.எஸ்.குணமணிதேவி (வயது 50)
5.ஜீ.பொன்னையா (வயது 63) வயது
6.வீ.கமலவாஸ் (வயது 48)
7.ராசையா சிறிசண்முகராஜா (வயது 40)
8.கே.அமுதராணி (வயது 42) தொல்புரம் கிழக்கு
9.சின்னத்தம்பி செல்லத்துரை (வயது 45)
10.ஏ.காந்திமதி (வயது 43)
11.ரீ.சீதாலக்ஷ்மி (வயது 57)
12.ரீ.நாகேஸ்வரி (வயது 46)
13.நந்தகுமார் அளவெட்டி
14.விசாலாட்சி
15.ஜீவன் (வயது 34)
16.ஜே.ஜெகதீஸ்வரன் (வயது 16)
17.ரீ.சர்மிளா (வயது 16)
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----