சனி, 11 டிசம்பர், 2010

ஓரணியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகள் அரங்கமும்!

காலம் காலமாக பிரிந்து அரசியற் பணி செய்த தமிழ் அரசியற் கட்சிகட்குள் இருந்து வந்த பேதங்கள் நீங்கி ஓரணியில் அனைவரும் இணைந்து தமிழர்களின் குரலாக ஒலிக்கும் தருணம் வந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் முள்ளிவாய்க்காலுடன் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர்கள் எடுப்பார் கைப்பிள்ளை எனும் நிலையிலே கவனிக்கப்படலாகினர், பெரும்பான்மை இனத்தவர்கள் தங்களின் பார்வைக்கேற்பவே தமிழர்கள் வாழ வேண்டுமென நினைக்கலாகினர், இவர்களின் பார்வைக் கோளாறை தீர்த்து வைக்க வேண்டுமெனில் தமிழர் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று தமிழர்களின் பிரச்சனைகளை உரத்துக் கூற வேண்டும், ஆயுதப் போராட்டம் ஒழிக்கப்பட்ட நிலையில் சாத்வீக அரசியற் போராட்டமே நிரந்தர உரிமைமைப் பெற்றுத் தரும்.

எமது அரசியற் தீர்வை நோக்கிய பயணத்தில் காலடி வைத்திருக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமது அணியுடன் இணைந்து கொள்ளுமாறு கடந்த ஜூன் 24 ஆம் திகதி முதல் பல தடவை கோரிக்கை விடுத்திருந்தது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் திட்டத்துக்கேற்ப செயற்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து செயற்படுவதில் இருவேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்ததால் பேச்சுவார்த்தைக்கான ஆரம்ப முயற்சியிலேயே இழுபறி ஏற்பட்டது, இந்த நிலையில் தமிழர்கள் இணைந்து ஒரு குடையின் கீழே என்னிடம் வாருங்கள் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார், மகிந்தவின் குரலை ஆமோதிப்பதாக அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா அவர்களும் இணைந்து செயற்படுமாறு இரு கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுத்தார்.

இதன் முதற் கட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புதிதாக உருவெடுத்த தமிழ்க் கட்சிகள் அரங்கமும் உத்தியோக பூர்வமாக 2010.12.11 ஆம் திகதியான இன்று பம்பலப்பிட்டியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பினை நடாத்தினர்.

இரு பிரதான அரசியல் அமைப்புக்களின் கட்சித் தலைவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் எம்.சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சிவசக்தி ஆனந்தன், பா.அரியநேத்திரன், எம்.சுமந்திரன், பொன்.செல்வராசா, எஸ்.வினோநோதாரலிங்கம் மேல்மாகாண சபை உறுப்பினர் குமரகுருபரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, எம்.கே.சிவாஜிலிங்கம், த.சித்தார்த்தன், அ.இராசமாணிக்கம், மற்றும் செ.சந்திரஹாசன், ரி.சிறிதரன், ப.உதயராசா ஜீ.சுரேந்திரன், கோபாலகிருஷ்ணன், ஆர்.ராகவன், எஸ்.சதானந்தம், டி.மாணிக்கவாசகர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம், வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள் போன்றனவுக்கான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகுறித்து அடுத்தடுத்த கட்டங்களில் இணைந்த கலந்துரையாடல்களை மேற்கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டதுடன் அரசியல் தீர்வு தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு இலகுவாக அதற்கான வரைபினை தயாரிப்பதற்கு ஏதுவாக ஆறு பேர் கொண்ட உபகுழுவினை எதிர்வரும் 2010.12.13 ஆம் திகதி திங்கட்கிழமை அமைப்பதென்றும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டதானது, தமிழர்களுக்கு பிரகாசமான ஒளி கிடைக்கவுள்ளது என்பதை எதிர்வு கூறுகின்றது.

இணைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் எனும் இரு துருவங்களும் எத்தகைய சவால்களையும் முறியடித்து தமிழ் மக்களுக்கான சுபீட்சமான வாழ்வுக்கு வழிவகுப்பார்களென எதிர்பார்ப்போம்.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----