மாகாண சபை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாகாண சபை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

ஓரங்கட்டப்பட்ட கிழக்கு முதலமைச்சர்! - படங்கள் இணைப்பு

திருகோணமலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று 2011.08.29 ஆம் திகதி காலை திருமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை முதல்வர் சி.சந்திரகாந்தன் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த புஞ்சிநிலமே, எம்.எஸ்.தௌபீக், எம்.கே.டி.எஸ்.குணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் சில்வா, கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள், கிழக்கு மாகாணசபை பிரதிநிதிகள் அடங்கலாக அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2008

பொலநறுவையில் பிள்ளையான் குழுவுக்கும் ஆசனம் !

ஸ்ரீலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து வடமத்திய மாகாணத்தின் பொலநறுவை மாவட்டத்தில் போட்டியிட்ட பிள்ளையான் குழுவின் மங்களம் மாஸ்டர் 5480 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார்.

தெரிவு வாக்குகளின் அடிப்படையில் கடைசி நிலையில் இருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மங்களம் மாஸ்டருக்கு போனஸ் ஆசனமொன்றை வழங்குவதென ஆளும் கட்சி தீர்மானித்துள்ளது.

நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 20 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 12 ஆசனங்களையும் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்று 33 ஆசனங்களைக் கொண்ட வடமத்திய மாகாணசபையில் அதிகப்படியான ஆசனத்தைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு போனஸாக மேலும் இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன, இதில் ஒன்றே மங்களம் மாஸ்டருக்கு கிடைக்கவுள்ளதாகும்.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

ஸ்ரீலங்கா சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் !

சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்:
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ----- 472,789 வாக்குகள் ---- 55.377 வீதம் ----25* ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி ---- 346,321 வாக்குகள் ---- 40.53 வீதம் ---- 17 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி ---- 19,068 வாக்குகள் ---- 2.23 வீதம் ---- 2 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ---- 10,163 வாக்குகள் ---- 1.19 வீதம்
தேசிய ஐக்கிய முன்னணி ---- 1495 வாக்குகள் ---- 0.17வீதம்

மொத்த வாக்குகள் ------ 854,376 ------ 94.75%
நிராகரிப்பு ------ 47,297 ------ 5.25%

ஸ்ரீலங்கா வடமத்திய மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் !

ஸ்ரீலங்காவில் நேற்று இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது.

வடமத்திய மாகாண சபைத் தேர்தல்:

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ---------307,457 வாக்குகள்---------56.37 வீதம்----------20 *ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி --------------------205,284 வாக்குகள்---------37.64 வீதம்----------12 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி ------------- 26,738 வாக்குகள்-----------4.90 வீதம்----------1 ஆசனங்கள்
தேசிய காங்கிரஸ் ----------------------- 3,404 வாக்குகள்-----------0.62 வீதம்
சோஷலிஸ ஐக்கிய முன்னணி ------------- 821 வாக்குகள்---------- 0.15 வீதம்
தேசிய ஐக்கிய முன்னணி ----------------- 695 வாக்குகள்-----------0.13 வீதம்
ஜாதிக சங்வர்தன பெரமுன --------------- 252 வாக்குகள்-----------0.05 வீதம்

மொத்த வாக்குகள்--- 545,440--- 95.10%
நிராகரிப்பு----------- 28,082--- 4.90%

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2008

ஸ்ரீலங்காவின் நாளைய மாகாணசபைத் தேர்தல் !

ஸ்ரீலங்காவின் வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் நாளை நடக்கவிருக்கும் வேளையில் எண்ணற்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன, இன்று பலத்த வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் நடக்கவுள்ள இரு மாகாணங்களுக்குமான நான்கு மாவட்டங்களில் 73 உறுப்பினர்களில், வடமத்திய மாகாண சபைக்காக 31 உறுப்பினர்களும், சப்ரகமுவ மாகாண சபைக்காக 42 உறுப்பினர்களும் தெரிவாகவுள்ளனர்.

690 பேர் போட்டியிடும் வடமத்திய மாகாண சபைக்காக அனுராதபுர மாவட்டத்தில் 21 பேரும், பொலநறுவ மாவட்டத்திலிருந்து 10 பேருமாக மொத்தம் 31 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 569 398 வாக்காளர்கள் அனுராதபுர மாவட்டத்தவர்களும், 277 056 வாக்காளர்கள் பொலநறுவை மாவட்டத்தவர்களுமாக மொத்தம் 846 454 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அனுராதபுர மாவட்டத்தின் 12 அரசியல் கட்சிகளில் இருந்து 288 பேரும் மற்றும் 7 சுயேச்சை குழுக்களிலிருந்து 168 பேருமாக மொத்தம் 456 அபேட்சர்களும், பொலநறுவை மாவட்டத்தின் 10 அரசியல் கட்சிகளில் இருந்து 130 பேரும், 8 சுயேச்சைக் குழுக்களிலிருந்து 104 பேருமாக 234 அபேட்சகள் களம் இறங்குகின்றனர்.

1008 பேர் போட்டியிடும் சப்ரகமுவ மாகாண சபைக்காக இரத்திரபுரி மாவட்டத்தில் 24 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 18 பேருமாக மொத்தம் 42 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 713 205 வாக்காளர்கள் இரத்தினபுரி மாவட்டத்தவர்களும், 605 621 வாக்காளர்கள் கேகாலை மாவட்டத்தவர்களுமாக மொத்தம் 131 826 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தின் 12 அரசியற் கட்சிகளில் இருந்து 324 பேரும் மற்றும் 9 சுயேச்சைக் குழுக்களிலிருந்து 243 பேருமாக மொத்தம் 567 அபேட்சகர்களும், கேகாலை மாவட்டத்தின் 11 அரசியற் கட்சிகளில் இருந்து 231 பேரும் மற்றும் 10 சுயேச்சைக் குழுக்களிலிருந்து 210 பேருமாக மொத்தம் 441 அபேட்சகர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அனுராதபுர மாவட்டத்தின் 7 தேர்தற் தொகுதிகளில் உள்ள 527 வாக்களிப்பு நிலையங்களிலும், பொலநறுவை மாவட்டத்தின் 7 தேர்தற் தொகுதிகளில் உள்ள 231 வாக்களிப்பு நிலையங்களுமாக மொத்தம் 758 வாக்களிப்பு நிலையங்கள் வடமத்திய மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் 8 தேர்தற் தொகுதிகளில் 541 வாக்களிப்பு நிலையங்களும், கேகாலை மாவட்டத்தின் 9 தேர்தற் தொகுதிகளில் 473 வாக்களிப்பு நிலையங்களுமாக மொத்தம் 1014 வாக்களிப்பு நிலையங்கள் சப்ரகமுவ மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1772 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு 1698 பேர் போட்டியிடும் இவ்விரு மாகாணங்களுக்கான நான்கு மாவட்டங்களிலும் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க 2 165 280 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளார்கள். இத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி போன்ற 45 அரசியல் கட்சிகளும், 34 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

இத் தேர்தல் வேலைகளில் ஈடுபடும் அதிகாரிகள் 36000 பேரில் 2100 அதிகாரிகள் தேர்தல் கண்காணிப்பு, ஆலோசனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போது ஏற்படும் வன்முறைகளைக் கண்காணிக்கவென 21 000 பொலிஸாரும் மேலதிக பாதுகாப்புக்கென இராணுவத்தினரும் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

புதன், 20 ஆகஸ்ட், 2008

வன்னி மக்களுக்கு கிழக்கு மாகாண சபையின் அவசர உதவி !

ஸ்ரீலங்கா பாதுகாப்புப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம் பெற்றுவரும் யுத்தத்தில் சிக்கித் தவிக்கும் வன்னிப் பகுதி மக்களுக்கு அநர்த்த நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. இரா. துரைரெத்தினம், அம் மாகாணசபைக்குக் கோரிக்கை விடுத்ததன் பேரில் மனிதாபிமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள கிழக்கு மாகாணசபை முடிவு செய்துள்ளது.

யுத்தத்தால் பாதிப்புற்று இடம்பெயர்ந்துள்ள 150 000 பேருக்கும் மேற்பட்ட வன்னி மக்களுக்குக் தேவையான அவசர உதவிகளையும், அத்தியாவசியப் பொருட்களான உணவு, உடை, குழந்தைகளுக்கான பால்மா மற்றும் இதர பொருட்களையும் அனுப்ப கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் சி. சந்திரகாந்தன் உட்பட மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக இத் தீர்மானத்தை ஆதரித்துள்ளார்கள்.

விரைவில் இம்மக்களுக்கான அவசர உதவிகளும், அத்தியாவசியப் பொருட்களும் போய்ச் சேருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----