
நேற்று முந்தினம் கொழும்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மானுக்கும் இடையேயான சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
இச் சந்திப்பின் போது ஈபிடிபி யின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.வி.சிவாவும், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திரு.கந்தையா அருமைலிங்கமும் கலந்து கொண்டுள்ளனர்.
இச் சந்திப்பு நட்புரீதியானது எனக் கூறப்பட்டாலும், எதிர்காலத்தில் இரு கட்சிகளும் இணைந்து அரசியல் கால் நகத்துதல் செய்யக் கூடும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.
2008.09.05 ஆம் திகதி வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் ஜனாதிபதி மகிந்த முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட போது அங்கு வருகை தந்த திரு.டக்ளஸ் தேவானந்தாவும், கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையான் சந்திரகாந்தனும் சந்தித்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.



































































![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)