கொழும்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொழும்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 10 அக்டோபர், 2011
சனி, 21 பிப்ரவரி, 2009
தமிழ் இணையத் தளங்களும் பொறுப்பற்ற செய்திகளும்!
நேற்று இரவு 10 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளின் இரு விமானங்கள் கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள விமானப்படைத் தலைமையகம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீலங்கா வான் படைத்தளம் போன்றனவற்றை இலக்காக வைத்து தாக்குதல் நடத்த முனைந்தன, ஆனால் இதன் விளைவு எப்படியானது என்பதனை ஊடகங்கள் பக்கச் சார்பாக தங்கள் நிலைக்கேற்ப செய்திகளைத் தந்துள்ளன.
அதிர்வு இணையத்தளம் தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் இரு விமானங்களும் தளம் திரும்பி விட்டதாக செய்தி தந்துள்ளது, ஆனால் விமானங்கள் இரண்டும் ஸ்ரீலங்கா விமானப் படையினரின் தானியங்கி விமான எதிர்ப்பு பீரங்கிப் பொறிமுறையால் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டதாக ரூபவாஹினி அரச தொலைக்காட்சியில் படங்களுடன் செய்தி காண்பிக்கப்படுகின்றது.
கொம்பனித்தெருவில் அமைந்துள்ள விமானப்படைத் தலைமையகத்தினுள் தாக்குதல் நடத்த வந்த வானூர்தி இலக்குத் தவறி அருகில் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்கள கட்டடத்தின் மீது குண்டு வீசிய போது அவ்விடத்திலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், மற்றய வானூர்தி கட்டுநாயக்கா விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் சுடப்பட்டு வீழ்ந்து நொறுங்கியுள்ளது, இந்த விமானத்தின் பாகங்களுடன் விமானத்தை ஓட்டிவந்த வான்புலிகளின் வானோடி விமான இருக்கையுடன் இறந்த நிலையில் காணப்பட்டதுடன் விமானத்தின் உட்பகுதியில் வெடிமருந்துகள் மற்றும் குண்டுகள் மற்றும் இரு சயனைற் குப்பிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அரச செய்திகள் கூறுகின்றன.தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் 47 பேர் காயமடைந்திருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைச் செய்திகள் கூறுகின்றன.
இத் தாக்குதல்களை நடாத்திய வான்புலிகளின் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்டினன் கேணல் சிரித்திரன் ஆகியோர்களைக் கௌரவித்து விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே.பிரபாகரன் "நீலப்புலிகள்" எனும் விருதினை இவ்விரு மாவீரர்களுக்கும் வழங்கியுள்ளார் என விடுதலைப் புலிகளின் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறியீடு :
கொழும்பு,
வான் தாக்குதல்,
விடுதலைப் புலிகள்
புதன், 29 அக்டோபர், 2008
தமிழீழ வான்புலிகளின் தாக்குதலும் ஸ்ரீலங்கா ஊடக கருத்தும்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நேற்று 2008.10.28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10:20 மணியளவில் மன்னாரில் உள்ள தள்ளாடி ஸ்ரீலங்கா படைத்தளத்தின் மீதும், இரவு 11:45 மணியளவில் கொழும்பு களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மீதும் தாக்குதல் நடாத்தி உள்ளனர்.இவ்விரு இடங்களிலும் தாக்குதலை நடத்தி விட்டு வானூர்திகள் அனைத்தும் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளனவென தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு களனி திஸ்ஸ மின்சார மையத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நடாத்திய தாக்குதலில் மின் பிறப்பாக்கி ஒன்று சேதத்துக்கு இலக்காகியதாகவும், தாக்குதலில் சிக்குண்ட ஒரு பணியாளர் அதிர்ச்சிகுள்ளாகி காயமேதுமின்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று மரணித்துள்ளார், தள்ளாடி இராணுவ முகாம் மீதான தாக்குதலில் படையினர் மூவர் காயத்துக்கு இலக்காகியுள்ளதாக பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்ததாக ஸ்ரீலங்கா உத்தியோகபூர்வ ஊடகம் செய்தி தெரிவித்துள்ளது.
"இரு இலக்குகள் மீதான புலிகளின் வான் தாக்குதல் முறியடிப்பு" - ஸ்ரீலங்கா ஊடகச் செய்தி:
களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் மீதும் மன்னார், தள்ளாடி இராணுவமுகாம் மீதும் நேற்று இரவு புலிகளின் இலகு ரக விமானம் தாக்குதல் நடத்தியாதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல்களில் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்துக்கோ மன்னார், தள்ளாடி இராணுவமுகாமுக்கோ பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் மீது புலிகளின் இலகு ரக விமானம் நேற்று இரவு 11.30 மணியளவில் 2 குண்டுகளை வீசியுள்ளது.
இதனால் மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கி ஒன்று தீப்பிடித்ததால் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த வந்த கொழும்பு, தீ அணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவந்தனர். இதன் போது மின்சார சபை ஊழியர் ஒருவருக்கு சிறுகாயம் ஏற்பட்டது. மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் இன்று வழமைபோல் இடம்பெறுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, மன்னார் தள்ளாடி இராணுவமுகாம் மீதும் நேற்று இரவு 10.20 மணியளவில் புலிகள் விமானம் மூலம் 3 குன்டுகளை போட்டுள்ளனர். இத்தாக்குதலினால் இராணுவ முகாமுக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் படை வீரர் ஒருவர் சிறுகாயங்களுக்கு உட்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இத்தாக்குதலையடுத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தறையிறங்குவதற்காக வந்த 2 விமானங்கள் சென்னை விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
நவீன ரக ரேடார் கருவிகளும், விமான எதிர்ப்பு பீரங்கிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றன, இனிமேல் அவர்களால் எவ்வித தாக்குதலும் நடத்த முடியாது, வானில் பறந்தாலே சுட்டு வீழ்த்தி விடுவோம் என்று கூறிய ஸ்ரீலங்காவின் கூற்றுக்கு அவர்களின் பாசையிலையே பதில் சொல்லியுள்ளார்கள் விடுதலைப் புலிகள்.
இலகு ரக விமானத்தின் மூலமோ அல்லது கன ரக விமானத்தின் மூலமோ எவற்றாலும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் ஏக காலத்தில் பல விமானங்களின் மூலம் தாக்குதல் நடாத்த முடியுமென விடுதலைப் புலிகள் நிரூபித்துக் காட்டி விட்டார்கள்.
ரேடார் கருவிகளும், இலக்குத் தவறாமல் தாக்குதல் நடத்தக் கூடிய விமான எதிர்ப்பு கருவிகளும், அவற்றைச் செவ்வனே இயக்கக் கூடியவர்களும் இருந்தால் ஏன் ஸ்ரீலங்கா படை தரப்புக்கு தயக்கம் ஏற்பட வேண்டும், ஒரு வேளை இவ் இயக்குநர்கள் நித்திரையில் இருந்திருப்பார்களோ!
தேர்ந்தெடுக்கும் இலக்குகள் மீது தமிழீழ வான்புலிகளால் இலகுவாக தாக்குதல்களை நடத்தி சேதத்தை ஏற்படுத்தி விட்டு தளம் திரும்பக் கூடிய நிலை கடினமான இந்த யுத்த சூழ்நிலையில் இருக்கின்றது, ஆனால் உலக நாடுகளில் பயிற்சிகளைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா வான்படையால் சரியான இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்த முடியாமல் இருக்கின்றது.
ஸ்ரீலங்கா ஊடகச் செய்தியின் கருத்தினை உற்று நோக்கும் போது "விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை"யென பிரிகேடியர் உதய நாணயக்கார கூறுவது தெரிகின்றது.



தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் கொழும்பு களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மீது தாக்குதலை நடாத்தியதன் பின்னர் ஸ்ரீலங்கா படையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் இதனால் கொழும்பு வான் பரப்பு நெருப்புக் கற்றைகளைக் கொண்டதாகக் காட்சியளித்தது.


குறியீடு :
கொழும்பு,
தமிழீழ வான்படை,
தாக்குதல்,
மன்னார்,
விடுதலைப் புலிகள்
ஞாயிறு, 21 செப்டம்பர், 2008
கொழும்பில் வட பகுதி தமிழர்களுக்கு இன்று பதிவு !
இலங்கையின் வட பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தலைநகரில் கடந்த ஐந்து வருடங்களாக வாழும் தமிழர்கள் அனைவரும் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று தங்களின் விபரங்களைப் பதிவு செய்யுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த அனைவரையும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யக் கோருவது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும், ஒரு ஜனநாயக நாட்டில் குடிமகனுக்கு உரிய கௌரவம் மறுக்கப்படுவது விசனத்துக்குரியதாகும்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த அனைவரையும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யக் கோருவது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும், ஒரு ஜனநாயக நாட்டில் குடிமகனுக்கு உரிய கௌரவம் மறுக்கப்படுவது விசனத்துக்குரியதாகும்.
செவ்வாய், 16 செப்டம்பர், 2008
கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் குண்டு வெடிப்பு !
மட்டக்குளியில் இருந்து மொரட்டுவ நோக்கிச் சென்ற 155 ஆம் இலக்க பிரயாணிகள் பேரூந்து கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் பி.ப 1.45 மணியளவில் சென்று கொண்டிருந்த சமயம் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இதில் பயணித்த பயணிகள் சந்தேகத்துக்குரிய பொதியைக் கண்டு பேரூந்தை விட்டு இறங்கிச் சென்ற பின் குண்டு வெடித்துள்ளது, எனினும் நால்வர் காயங்களுக்கு உள்ளாகியதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனைத் தொடர்ந்து கொழும்பு லிப்டன் சதுக்கம் பகுதியில் படையினரின் தேடுதல் நடாத்தி வருகின்றனர்.
வியாழன், 7 ஆகஸ்ட், 2008
கொழும்பு பல்கலைக் கழக மீது பாலியல் வல்லுறவு

கொழும்பு பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் மாணவியை அவ்வளாகத்தினுள்ளேயே வைத்து பல்கலைக் கழக ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரிகளான இரு மார்ஷல்கள் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.
இவ்வல்லுறவு விடயமாக பல்கலைக் கழகம் போதிய விசாரணை நடாத்தவில்லை எனும் காரணத்தைக் காட்டி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் விசாரணைக் குழுவிடம் கருத்து தெரிவிக்கும் போது ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.
வேலியே பயிரை மேய்ந்தால்.......... பயிரைக் காப்பது யார்?
குறியீடு :
கொழும்பு,
பல்கலைக் கழகம்,
மாணவி,
வல்லுறவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)