

கட்சித் தலைவர் கருணாவின் கருத்துக்களை உப தலைவர் பிள்ளையான் ஏற்றுக் கொள்ள தவறுகின்றார் எனும் காரணத்தினால் நேற்றிரவில் இருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உப தலைவராக திரு.ஜெயமும், பேச்சாளராக இருந்த திரு.அஸாத் மௌலானாவுக்குப் பதிலாக வேறு ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே பிள்ளையானின் செயலாளர் செயற்பட்டு வருவதாகவும், முதலமைச்சர் பிள்ளையானின் மெய்ப் பாதுகாவலர்கள் போராளிகளற்றவர்களெனவும், இது கட்சி விதிக்கு முரணானதெனவும் திரு.கருணா அண்மையில் சிங்கள பத்திரிகைக்கு செவ்வி வழங்கியிருந்தார்.
அண்மையில் சர்வதேச வானொலியொன்று கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையானிடம் கட்சித் தலைமைக்கும் உங்களுக்கும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தலைவரைச் சந்தித்து, கருத்துப் பரிமாற்றம் செய்வதில்லையென கருத்து நிலவுவதாகவும் அது பற்றிய கருத்து என்னவெனக் கேட்டபோது அதற்குப் பதிலளித்த திரு.பிள்ளையான் அப்படிக்கூற முடியாது நான் மாகாண சபை வேலைகளில் ஈடுபடுவதால் அவரை அடிக்கடி சந்திக்க முடியாத நிலையில் உள்ளேன், ஆனாலும் தொலைபேசியில் அடிக்கடி பேசி வருகின்றோம், சில கருத்துப் பிரச்சினைகள் உள்ளன, ஆயுதப் போராளிகளை குறைப்பது சம்பந்தமாக சில பிரச்சினைகள் இருந்தாலும் அதைக் காலவோட்டத்தில் தீர்த்துக் கொள்வதற்கான சாத்தியம் இருக்கின்றது எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.