ஸ்ரீலங்கா அரசாங்க, படைத்தரப்பு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் மீது நடாத்திய போர்க் குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையின் முன்னோட்டம் கசிந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரச உயர்நிலையாளர்களும், அவர்களை ஒட்டி அரசியற்பிழைப்பு நடத்தும் சிலரும் கதிகலங்கிப் போயுள்ளமை அனைவரும் அறிந்ததே!
ஐ.நா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐ.நா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 23 ஏப்ரல், 2011
ஐநா நிபுணர் குழு அறிக்கையும் கருணாவின் முதலைக் கண்ணீரும்!
ஸ்ரீலங்கா அரசாங்க, படைத்தரப்பு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் மீது நடாத்திய போர்க் குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையின் முன்னோட்டம் கசிந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரச உயர்நிலையாளர்களும், அவர்களை ஒட்டி அரசியற்பிழைப்பு நடத்தும் சிலரும் கதிகலங்கிப் போயுள்ளமை அனைவரும் அறிந்ததே!வியாழன், 25 செப்டம்பர், 2008
ஐ.நா. சபையில் தமிழில் உரையாற்றிய மஹிந்த !
ஐக்கிய நாடுகள் சபையின் 63ஆவது கூட்டத்தொடரில் நேற்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியிலும் உரையாற்றினார். கடந்த தடவை தனிச் சிங்கள மொழியில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ இம்முறை தமிழையும் தனது உரையில் சேர்த்துக் கொண்டார்.அவர் தனதுரையில் எனது தாய்மொழி சிங்களம் ஆனாலும், சில எண்ணங்களை சகோதர தமிழ் மொழியில் சொல்ல விரும்புகின்றேன். சிங்களமும் தமிழும் இலங்கை மக்களின் இரண்டு மொழிகள். பல நூறு ஆண்டுகளாக பாவனையில் உள்ள இந்த இரண்டு மொழிகளும் இலக்கிய வளம் செறிந்தவை, இம்மொழிகள், அரசகரும மொழிகளாக அங்கீகாரம் பெற்று நம்நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஜனநாயகம் மேலும் வியாபிக்கப்படுவதைத் தொடர்ந்து இலங்கையின் சிங்கள, தமிழ் மக்களுக்கு இடையிலான உறவு பலமடையும். எதிர்கால அபிவிருத்திக்கு அது பாரிய சக்தியாக அமையும் ஒரு தேசம் என்ற வகையில் எமக்காகக் காத்திருக்கும் அர்த்தமுள்ள சுதந்திரம் நீடித்த ஐக்கியம் ஆகியவற்றை நோக்கி நாம் அணிவகுத்துச் செல்வோம், என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியில் உரையாற்றினார்.
63 வருட பாரம்பரியத்தைக் கொண்ட ஐ.நா.சபையில் தமிழ் மொழியில் உரையாற்றிய முதலாவது அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 16 செப்டம்பர், 2008
ஐநா வெளியேறுகின்றது !
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருந்து மனிதாபிமானப் பணிகளில் செயற்பட்டு வந்த ஐ.நா.பணியாளர்கள் அனைவரும் தங்களின் வாகனத் தொகுதிகளுடன் இன்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு திரும்புகின்றனர்.ஓமந்தை வரை பாதுகாப்பாகச் செல்வதற்கான உத்தரவாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்ததற்கமைய அனைத்து ஐ.நா. பணியாளர்களும் வன்னியில் இருந்து இன்றே வெளியேறி விடுவார்கள் எனச் செய்திகள் கூறுகின்றன.
திங்கள், 15 செப்டம்பர், 2008
வன்னியிலுள்ள ஐ.நா. அதிகாரிகள் விரைவில் வெளியேறுவர்!
யுத்தம் நடைபெறும் பிரதேசங்களில் நிவாரணப்பணிகளை அரச சார்பற்ற அமைப்புகளால் செய்ய முடியாதிருப்பதால் வன்னியில் தங்கியிருந்து செயற்படும் தன்னார்வ தொண்டூழியர்கள் அனைவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் வன்னியை விட்டு வெளியேறி விடுமாறு ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உத்தரவையும் மீறி வன்னியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டர் அமைப்புகள் வெளியேறாமல் தொடர்ந்தும் அங்கு இருந்தால், அதன் பணியாளர்களுக்கான பாதுகாப்பை ஸ்ரீலங்கா அரசாங்கம் பொறுப்பேற்க மாட்டாது.
அங்கிருந்து வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருந்து நிவாரணப்பணிகளை முன்னெடுக்குமாறு கோத்தபாய ராஜபக்ஷ் ஆங்கிலப் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
வன்னியில் பணியாற்றும் ஐ.நா. அதிகாரிகளின் பாதுகாப்பில் நாம் அதிக கவனம் செலுத்துவதால் தமது மனிதாபிமானப் பணிகளை அரச அதிபர்களிடம் ஒப்படைத்துவிட்டு வவுனியாவில் தங்களது அலுவலகத்தை அமைத்துச் செயற்படுமாறு அவர்களுக்கு அறிவுறித்தியுள்ளோம் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார் கோத்தபாய ராஜபக்ஷ்.
தற்போதைய சூழ்நிலையில் வன்னியில் இருந்து செயற்பட்டு வந்த அரசசார்பற்ற நிறுவனங்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. அமைப்புத் தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் வெளியேறி விட்டதாகவும், வன்னி மக்கள் ஐ.நா அதிகாரிகளை வெளியேற வேண்டாம் எனக் கோரி ஆர்ப்பாட்டம், வீதி மறிப்புப் போராட்டம் போன்றன நடாத்தி தடுத்ததால் தற்காலிகமாக தங்களது வெளியேற்றத்தை ஒத்திவைத்துள்ள ஐ.நா.அதிகாரிகளும் விரைவில் வெளியேறி விடுவார்களெனவும் தகவல்கள் கூறுகின்றன.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உத்தரவையும் மீறி வன்னியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டர் அமைப்புகள் வெளியேறாமல் தொடர்ந்தும் அங்கு இருந்தால், அதன் பணியாளர்களுக்கான பாதுகாப்பை ஸ்ரீலங்கா அரசாங்கம் பொறுப்பேற்க மாட்டாது.
அங்கிருந்து வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருந்து நிவாரணப்பணிகளை முன்னெடுக்குமாறு கோத்தபாய ராஜபக்ஷ் ஆங்கிலப் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
வன்னியில் பணியாற்றும் ஐ.நா. அதிகாரிகளின் பாதுகாப்பில் நாம் அதிக கவனம் செலுத்துவதால் தமது மனிதாபிமானப் பணிகளை அரச அதிபர்களிடம் ஒப்படைத்துவிட்டு வவுனியாவில் தங்களது அலுவலகத்தை அமைத்துச் செயற்படுமாறு அவர்களுக்கு அறிவுறித்தியுள்ளோம் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார் கோத்தபாய ராஜபக்ஷ்.
தற்போதைய சூழ்நிலையில் வன்னியில் இருந்து செயற்பட்டு வந்த அரசசார்பற்ற நிறுவனங்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. அமைப்புத் தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் வெளியேறி விட்டதாகவும், வன்னி மக்கள் ஐ.நா அதிகாரிகளை வெளியேற வேண்டாம் எனக் கோரி ஆர்ப்பாட்டம், வீதி மறிப்புப் போராட்டம் போன்றன நடாத்தி தடுத்ததால் தற்காலிகமாக தங்களது வெளியேற்றத்தை ஒத்திவைத்துள்ள ஐ.நா.அதிகாரிகளும் விரைவில் வெளியேறி விடுவார்களெனவும் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)