
ஸ்ரீலங்காவில் கடந்த எட்டு மாதங்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த படைதரப்பினரதும் பொது மக்களினதும் விபரங்களைப் பாராளுமன்றத்தில் பிரதமரும் பாதுகாப்புப் பிரதியமைச்சருமான ரத்னஸ்ரீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் பொலிஸ், இராணுவ படை தரப்பிலிருந்து 896 பேர் கொல்லப்பட்டும், 5908 பேர் காயமடைந்தும் உள்ளனர். பொதுமக்களில் 381 பேர் கொல்லப்பட்டும், 621 பேர் காயமடைந்தும் உள்ளதாக அத்தகவல் கூறுகின்றது.
இவை அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் ஆகும், இவை தவிர்த்து பதிவு செய்யப்படாத கொலை மற்றும் காயப்பட்டவர்களினையும் சேர்த்தால் இப்பட்டியல் நீளக் கூடுமென அறிய முடிகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.