திருகோணமலைப் பகுதியில் ஆட்கடத்தல், கப்பம் பெறுதல், கொலை செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டுவந்த திருகோணமலை, வவுனியா, நுவரெலியா, மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 12 பேர் கொண்ட இரண்டு குழுவினரைப் பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும் சந்தேகத்தின் பேரில் கைதாகிய மேலும் இரு பெண்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்திற்கான பொலிஸ் அத்தியட்சகர் ஏ. பி.ஜி.லால் குணவர்த்தன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கிருபராஜா தலைமையில் ஒரு குழுவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (பிள்ளையான் குழு) உறுப்பினர் நகுலனின் தலைமையில் ஒரு குழுவும் புத்தளத்தைச் சேர்ந்த ஈழமாறனின் வழிநடத்தலில் இயங்கிய இவர்களுக்கு, இடம்பெற்ற 14 ஆட்கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதாக அறியமுடிகின்றது.
இச் சந்தேக நபர்களிடம் இருந்து ஆறு கையடக்கத் தொலைபேசிகள், சிம் காட்கள், இரு கணினிகள், ஒரு தற்கொலைக் குண்டு அங்கி உட்பட பெருமளவு பொருட்கள் மீட்கப்பட்டன.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.