





ஸ்ரீலங்காவின் மேல் மாகாணத்தில் கடந்த ஐந்து ஆண்டு காலமாக வாழும் வட பகுதி மக்கள் அனைவரும் நேற்று அதற்கென அமைக்கப்பட்ட பிரத்தியேக இடங்களிலும் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் தங்களின் பெயர் விபரங்களைப் பதிவு செய்தார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் பதிவுக்கென 108 நிலையங்கள் அமைக்கப்பட்டு பதிவு நடவடிக்கை நேற்று காலை முதல் மாலை வரை இடம் பெற்றது, 10820 குடும்பங்களைச் சேர்ந்த 36370 பேர் தங்களின் பெயர்களைப் பதிவு செய்துள்ளார்கள். இவர்களின் 2241 பேர் புதிதாக தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளவர்கள் ஆகும்.
எப்படியாவது தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் முதியோர்கள், குழந்தைகளை ஏந்திய தாய்மார்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.