விடுதலைப்புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலைப்புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 மே, 2011

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு மன்னிப்பு கோரினார் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர்!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை படுகொலை செய்தமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவரென கருதப்படும் குமரன் பத்மநாதன் ஐபிஎன் தொலைக்காட்சி ஊடாக இந்தியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

கே.பி. விசாரணைக்காக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்!

மலேசியா கோலாலம்பூரின் ஜலான் ரொங்கு அப்துல் ரகுமானில் உள்ள மஜீத் இந்தியா எனும் இடத்திலுள்ள ரியூன் ஹொட்டலின் அருகில் வைத்து ஆசிய பிராந்திய இன்ரபோலினால் கடந்த ஐந்தாம் திகதி கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே।பி குமரன் பத்மநாதன் எனப்படும் செல்வராஜா பத்மநாதன் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவரின் சில புனை பெயர்கள்:

கே.பி
செல்வராசா பத்மநாதன்
சண்முகம் குமரன் தர்மலிங்கம்
கே பத்மநாதன்
குட்டி மாஸ்ரர்
குட்டி சிறீ
தர்மலிங்கம் சண்முகம் குமரன்
தம்பையா செல்வராசா
கழுதை (பிரபாகரனால் வைக்கப்பட்ட செல்லப் பெயர்)
பெரியதுரை
கண்ணாடி பத்தன்
சதாசிவம் தர்மலிங்கம் ....

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

கே.பி. தாய்லாந்தில் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரும், புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஸ்ரீலங்கா படையினரால் கொல்லப்பட்ட பின் அவ் அமைப்புக்கு பொறுப்பாளர் தானே என உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தவரும், சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த கே.பி (குமரன் பத்மநாதன்) எனப்படும் செல்வராஜா பத்மநாதன் தாய்லாந்தின் பாங்கொக் நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா அரச தகவல்கள் கூறுகின்றன.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் ஜலான் ரொங்கு அப்துல் ரகுமான் Jalan Tuanku Abdul Rahman(வீதியில்), மஜீத் இந்தியா பகுதியில் உள்ள "ரியூன் ஹொட்டேல் Tune Hotels" எனும் இடத்தில் விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மகன் மற்றும் பா.நடேசனின் சகோதரருடன் உரையாடிக் கொண்டிருந்த கே.பி. எனப்படும் செல்வராசா பத்மநாதன் 2009.08.05 பிற்பகல் 2 மணியளவில் வெளியே சென்ற போது இன்ரபோலின் ஆசியப் பிரிவினரால் கடத்தப்பட்டு பாங்கொக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இணையத் தள செய்தியொன்று கூறுகின்றது.

கடந்த 2007 செப்டம்பர் காலப் பகுதியில் குமரன் பத்மநாதன் பாங்கொக் பொலிஸாரினால் கைதானதாக "பாங்கொக் போஸ்ட்" செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



2007 செப்டம்பரில் "பாங்கொக் போஸ்ட்" தளத்தில் வெளியான செய்தி:
Top Tamil Tiger arrested in Bangkok

(BangkokPost.com, Agencies)
Thailand has arrested the finance chief of the Tamil Tigers of Sri Lanka, allegedly the group's chief procurer of arms.

Kumaran Pathmanadan is reported to have been arrested by police in Bangkok on Monday evening. He is one of the top officials in the Liberation Tigers of Tamil Eelam, the formal name of the group.

Pathmanadan apparently had obtained Thai citizenship. He continued to run the global network of LTTE offices and its weapons procurement, logistics and money laundering operations.

He has been on Interpol's Most Wanted list for a number of years. He has also been implicated in several assassinations of political leaders.

The online newspaper Asian Tribune called him "the king pin of Tiger arms smuggling".

"He is a noted smuggler of arms and narcotics. Operating with bank accounts opened in London, Frankfurt, Denmark, Athens and Australia... he has had a free run so far," the newspaper alleged

His arrest followed the detention in Ranong province last month of three Tamil Tiger operatives trying to buy guns and 45,000 rounds of ammuntion.

All four were suspected of running a Tamil Tiger gun-running ring centered in Thailand.

Pathmanadan, who also had a number of aliases, has recently been the subject of a manhunt that stretched to Johannesburg, Rangoon, Singapore and Bangkok. Police said they believed he had bank accounts in London, Frankfurt Denmark, Athens and Australia and has over 200 passports for his use.

He and his group are suspected of running weapons purchased Thailand and neighbouring countries to the Tamil Tigers in Sri Lanka. The Tigers have been desinated as a terrorist group by most western countries, but not Thailand.

A Jane's Intelligence report on the group stated that despite the cease-fire agreement in Sri Lanka, the LTTE continued to re-supply cadres. It said:

"While Cambodia is the hub of the LTTE East Asia Network, Thailand continues to serve as the most important country for trans-shipment of munitions and coordination of logistics... its excellent communications infrastructure, proximity to former war zones in both Cambodia and [Burma] and its western coastline facing the Bay of Bengal and Sri Lanka beyond have made Thailand the ancient interface between the LTTE's war zone."

வெள்ளி, 14 நவம்பர், 2008

பேய்முனை, வலைப்பாடு ஸ்ரீலங்கா படை வசம்!

ஸ்ரீலங்கா படை தரப்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் வன்னியில் நடைபெறும் யுத்தத்தில் மன்னார் - பூநகரி பிரதேசத்திலுள்ள டெவில் பொயின்ற் எனப்படும் பேய்முனை மற்றும் வலைப்பாடு ஆகிய பகுதிகளை 2008.11.13 ஆம் திகதி காலை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும், கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம், மடம், பண்டிவெட்டிக்குளம், அக்கராயன்குளம், கிராஞ்சி மற்றும் பாலாவி போன்ற பகுதிகளை ஏற்கனவே தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா படை தரப்பின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.

நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்கவெல, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார, கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணாயக்கார மற்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையப் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல போன்றோரும் கலந்து கொண்டனர்.

புதன், 12 நவம்பர், 2008

பாலாவி ஏ-32 வீதியில் 4 பெண் விடுதலைப்புலிகள் கைது!


வன்னியில் ஸ்ரீலங்கா படை தரப்புக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்று வரும் சண்டையில் ஏ - 32 வீதியில் பாலாவிக்கு அண்மித்துள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தினர் 7ஆம் மைல் கல் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நான்கு பெண் உறுப்பினர்களைக் கைது செய்துள்ளதாக ஸ்ரீலங்கா படைதரப்பு கூறுகின்றது.

கைது செய்யப்பட்டர்களில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 28 வயதுடைய நிலாவெளி, 18 வயதுடைய இளவேனி, 19 வயதுடைய துருவேனி ஆகியோர் மற்றைய மூவருமென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் நிலாவெளி கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயின்று கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் ஸ்ரீலங்கா கல்வியமைச்சின் ஆங்கில ஆசிரியையாகப் பணிபுரிந்து வருபவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

ஒளிப் பதிவு கோவை

வெள்ளி, 3 அக்டோபர், 2008

வன்னியில் விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்குகள் மீது குண்டுத் தாக்குதல்!

இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியில் ஸ்ரீலங்காவின் விமானப்படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழக் காவல்துறை நடுவப் பணியகத்தின் கட்டிடத் தொகுதிகளை பலத்த சேதமடைந்துள்ளன.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வன்னி செயலகத்தின் மீது ஸ்ரீலங்கா விமானப்படையினர் நடத்திய மற்றொரு தாக்குதலில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் களஞ்சியசாலை அழிவுக்குள்ளாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் கிளிநொச்சிக்கு 04 கி.மீ மேற்காக அமைந்த கனகபுரம் பாதையை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதாக விமானப்படைப் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வியாழன், 2 அக்டோபர், 2008

விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் 21648 பேர்!

2008 ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 1047 ஆண் போராளிகளும், 462 பெண் போராளிகளுமாக மொத்தம் 1509 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மரணித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் பணிமனை நேற்று அறிவித்துள்ளது.

1982.11.27 - 2008.08.31 வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 16953 ஆண் போராளிகளும் 4695 பெண் போராளிகளுமாக மொத்தம் 21648 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மரணித்துள்ளனர்.

இவ் வருடம் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையான காலப் பகுதியில் 6500 விடுதலைப் புலிகளைக் கொன்றுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


1982.01.01 - 2008.08.31

ஆண் மாவீரர்கள்: 16953 பேர்
பெண் மாவீரர்கள்: 4695 பேர்
மொத்த மாவீரர்கள்: 21648 பேர்

வியாழன், 18 செப்டம்பர், 2008

இரசாயன விஷ வாயு தாக்குதலும் மூச்சுத் திணறலும்!

வன்னி கிளிநொச்சியின் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதிகளில் தொடரும் ஸ்ரீலங்கா படைத்தரப்பினருடனான மூர்க்கத் தனமான சண்டையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சிஎஸ் இரசாயன விஷ வாயு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவும் இதனால் அக்கராயன் மோதலில் பங்குபற்றிய 6 இராணுவத்தினர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவ தரப்பு பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இரசாயன விஷ வாயுக்களைப் போரில் பாவிப்பது ஐ.நா. சட்ட போரியல் விதிகளுக்கு முரணானது என்பதால் இதனை முறியடிப்பதற்கு தேவையான சகல வழி முறைகளையும் பின்பற்ற ஸ்ரீலங்கா இராணுவம் தயாராக இருப்பதாக பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவ தரப்புப் பேச்சாளர் உதய நாணயக்கார கூறிய கருத்துக்களை எடுத்து நோக்கினால், விஷ வாயு தாக்குதலை முறியடிக்கக் கூடிய வகையில் ஸ்ரீலங்கா படை தரப்பும் விஷ வாயுத் தாக்குதலை நடத்த தயாராகி விட்டது என்பது புலனாகின்றது.

சாட்சியமே இருக்க முடியாத அளவுக்கு வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்புக்களை வன்னியில் இருந்து அகற்றிய நிலையில் ஸ்ரீலங்கா படைதரப்பு இரசாயன விஷ வாயு தாக்குதலுக்கு முகம் கொடுக்கத் தயாராகி விட்டோமென கூறுவது சிந்திக்கத் தோன்றுகின்றது.

விடுதலைப் புலிகள் இரசாயன விஷ வாயு ஆயுதத் தாக்குதலை நடாத்தினார்களா இல்லையா என்பது வெளிவராத நிலையில் இராணுவத்தினரின் இந்த திடீர் அறிவிப்பு பொது மக்களைக் கவலை கொள்ள வைக்கின்றது.

ஸ்ரீலங்கா இராணுவம் இரசாயன விஷ வாயு ஆயுதங்களை இப் போரில் பாவிக்கத் தொடங்கினால் இதில் அதிகமாகப் பாதிக்கப்படப் போவது அப்பாவிப் பொதுமக்களே என்பது உறுதி.

செவ்வாய், 9 செப்டம்பர், 2008

வவுனியா தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலிகள் !


வவுனியா ஜோசப் இராணுவத் தலைமையகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளும், கிட்டு பீரங்கிப் படையணியும் மற்றும் கரும்புலிகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் இந்திரா ராடர் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தாக்குதலை மேற்கொண்ட வான்புலிகளும் வானூர்திகளும் தளம் திரும்பி விட்டதாகவும், கொல்லப்பட்ட கரும்புலிகளினது விபரத்தினையும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

  1. கரும்புலி லெப்டினன்ட் கேணல் வினோதன்
  2. கரும்புலி லெப்டினன்ட் கேணல் மதியழகி
  3. கரும்புலி மேஜர் நிலாகரன்
  4. கரும்புலி மேஜர் ஆனந்தி
  5. கரும்புலி கப்டன் கனிமதி
  6. கரும்புலி கப்டன் முத்துநகை
  7. கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ்
  8. கரும்புலி கப்டன் எழிலகன்
  9. கரும்புலி கப்டன் அகிலன்
  10. கரும்புலி கப்டன் நிமலன்

திங்கள், 8 செப்டம்பர், 2008

யாழ்.முன்னாள் மேயர்களின் நினைவு தினம் !

தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் மேயர்களான திருமதி சரோஜினி யோகேஸ்வரன், பொன்னுத்துரை சிவபாலன் ஆகியோரின் நினைவு தின அஞ்சலி நிகழ்வு நேற்று 2008.07.09 ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் திரு.ச.முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

பொன்னுத்துரை சிவபாலனின் பத்தாவது நினைவு தினம் செப்ரம்பர் 14ஆம் திகதி பிரித்தானியாவில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

மேலதிக விபரங்களை தங்க முகுந்தனின் வலைப்பூவில் எதிர் பார்ப்போம்.

மேலதிக தகவலுக்கு:
தமிழ் நியூஸ்வேப்
தேசம் நெற்
தேனீ இணையத்தளம்

சனி, 6 செப்டம்பர், 2008

விடுதலைப்புலிகளின் விமானக் கொள்வனவாளரான சிங்களவர் தாய்லாந்தில் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைக்குத் தேவையான ஸ்லின் 143 ரக விமானங்களை கொள்வனவு செய்தவரான சுஜி குணபால தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்கா கொண்டு வரப்பட்டுள்ளார். சுஜி குணபாலவின் அம்மாவின் தாய்மொழி தமிழும், அப்பா தாய்மொழியாக சிங்களமும் முன்னாள் பொலிஸ் அதிகாரியும் ஆகும்.

ஒரு வருடத்திற்கு முன்னர் விடுதலைப்புலிகளுக்குத் தேவையான ஸ்லோக் மற்றும் ஹெல்னர் என்டிகோச் கைத்துப்பாக்கி மற்றும் 45 ஆயிரம் தோட்டாக்களை கொள்வனவு செய்ய முயன்ற போது தாய்லாந்து மெரைன் பொலிஸாரினால் சுஜி குணபால கைதாகி, ஆயுதக் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு உட்பட்டிருந்தார்.

2002 பெப்ரவரியில் தமிழீழ விடுதலைப் புலிகளும், ஸ்ரீலங்கா அரசாங்கமும் இணைந்து யுத்தநிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்தி ஒன்றரை வருட காலத்தின் பின்னர் மூன்று இலகுரக விமானங்கள் கப்பல் மூலம் முல்லைத்தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக குணபால வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதன், 3 செப்டம்பர், 2008

வன்னிப் போர்முனையில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் !

ஸ்ரீலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் வன்னிப் போர்முனையில் உக்கிர மோதல் இடம்பெற்று வருகின்றது, அம் மோதலில் ஸ்ரீலங்கா படையினரிடமிருந்து பெருந் தொகையான இராணுவ தளபாடங்களைக் கைப்பற்றியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
















நன்றி தமிழ்வின்

திங்கள், 25 ஆகஸ்ட், 2008

விடுதலைப் புலிகள் தலைவருக்கு கொழும்பு நீதிமன்றத்தின் அழைப்பாணை !

ஸ்ரீலங்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை வழக்குத் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் எனப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரன் மற்றும் சாள்ஸ் மாஸ்டர் ஆகியோருக்கு முல்லைத்தீவு பிரதேச செயலர் ஊடாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரச தரப்பு சட்டத்தரணி சுனில் குலரட்ண தெரிவித்தார்.

முன்னர் அனுப்பிய அணைப்பாணை கிடைத்தது பற்றிய தகவல்கள் இல்லாததால் மீண்டும் அழைப்பாணை அனுப்புமாறு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க காவற்துறையினருக்கு உத்தரவிட்டதுடன் விசாரணையை செப்டெம்பர் 18 திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

சனி, 16 ஆகஸ்ட், 2008

அமிரைத் தமிழர் தலைவராக ஏற்றுக் கொண்ட விடுதலைப்புலிகள் !


விமானக் குண்டு வீச்சில் செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட 53 மாணவிகளின் 2 ஆம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் கலந்து சிறப்புரையாற்றினார்.

50 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பயங்கரவாதம் தமிழினப் படுகொலையைத் திட்டமிட்டு நடாத்தி வருகின்றது, அறவழியில் போராடிய தமிழர் தலைவர்கள் இப் பயங்கரவாதத்துக்குப் பலியாகி உள்ளனர், 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்துக்கு எதிராக காலிமுகத் திடலில் அகிம்சை வழியில் போராட்டம் நடத்திய தமிழ் தலைவர்கள், தொண்டர்கள் தாக்கப்பட்டனர் என்றும் திரு.பா.நடேசன் சிறப்புரையில் குறிப்பிட்டிருந்தார்.

1956ஆம் ஆண்டு ஆனி மாதம் 5ஆம்திகதி பதவியேற்ற பிரதமர் பண்டாரநாயக்கா "சிங்களம் மட்டும் மொழி" என்னும் மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போது ஐக்கிய தேசியக் கட்சியும் இம் மசோதாவை ஆதரித்தது.

இம் மசோதாவை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், யோகேஸ்வரன் இன்னோரன்ன 300 பேர் நாடாளுமன்றத்திற்கு முன்பாகவுள்ள காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தனர். அவ்விடத்துக்கு ஊர்வலமாக வந்த பிக்குகள் முன்னணியினர் சத்தியாக்கிரகத்தில் இருந்த தமிழர் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்தியதுடன் சிலரைத் தூக்கி அருகில் இருந்த ஏரியில் வீசி தங்களது துவேசத்தை வெளிப்படுத்தினர்.

நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழர்களின் தலைவர்களாக தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் யோகேஸ்வரன் போன்றோரையெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் நினைத்துப் பார்ப்பது ஆரோக்கியமான செய்தியாகவுள்ளது.

அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்றோர் 1989.ஆடி.13 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளாலே சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, 1956 ஆனி 05 ஆம் திகதி சத்தியாக்கிரகத்தின் போது சிங்களக் காடையர்கள் தாக்குதலுக்கு இலக்கான தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் தலையிலுள்ள காயத்துடனேயே அன்றைய பாராளுமன்ற அமர்வுக்கு பிரசன்னமாகி இருந்தார்.

இவர்களை 19 வருடங்களின் பின்னர் தமிழர்களின் தலைவர்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டமையானது வரவேற்கத்தக்கதே!

செவ்வாய், 11 செப்டம்பர், 2007

விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆயுத முகவர் கேபி கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத முகவர் கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தாய்லாந்து நாட்டின் பாங்கோக் நகரில் கைதானதாக "பாங்கோக் போஸ்ட்" பத்திரிகைச் செய்தி பிரசுரித்துள்ளது.

இவர் இன்ரபோல் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Top Tamil Tiger arrested in Bangkok

(BangkokPost.com, Agencies)
Thailand has arrested the finance chief of the Tamil Tigers of Sri Lanka, allegedly the group's chief procurer of arms.

Kumaran Pathmanadan is reported to have been arrested by police in Bangkok on Monday evening. He is one of the top officials in the Liberation Tigers of Tamil Eelam, the formal name of the group.

Pathmanadan apparently had obtained Thai citizenship. He continued to run the global network of LTTE offices and its weapons procurement, logistics and money laundering operations.

He has been on Interpol's Most Wanted list for a number of years. He has also been implicated in several assassinations of political leaders.

The online newspaper Asian Tribune called him "the king pin of Tiger arms smuggling".

"He is a noted smuggler of arms and narcotics. Operating with bank accounts opened in London, Frankfurt, Denmark, Athens and Australia... he has had a free run so far," the newspaper alleged

His arrest followed the detention in Ranong province last month of three Tamil Tiger operatives trying to buy guns and 45,000 rounds of ammuntion.

All four were suspected of running a Tamil Tiger gun-running ring centered in Thailand.

Pathmanadan, who also had a number of aliases, has recently been the subject of a manhunt that stretched to Johannesburg, Rangoon, Singapore and Bangkok. Police said they believed he had bank accounts in London, Frankfurt Denmark, Athens and Australia and has over 200 passports for his use.

He and his group are suspected of running weapons purchased Thailand and neighbouring countries to the Tamil Tigers in Sri Lanka. The Tigers have been desinated as a terrorist group by most western countries, but not Thailand.

A Jane's Intelligence report on the group stated that despite the cease-fire agreement in Sri Lanka, the LTTE continued to re-supply cadres. It said:

"While Cambodia is the hub of the LTTE East Asia Network, Thailand continues to serve as the most important country for trans-shipment of munitions and coordination of logistics... its excellent communications infrastructure, proximity to former war zones in both Cambodia and [Burma] and its western coastline facing the Bay of Bengal and Sri Lanka beyond have made Thailand the ancient interface between the LTTE's war zone."

வெள்ளி, 7 செப்டம்பர், 2007

விடுதலைப் புலிகளில் 19539 மாவீரர்கள் பதிவாகியுள்ளனர்!




தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1982.11.27 - 2007.08.31 வரையான காலப்பகுதியில் மரணித்த மாவீரர்களின் மொத்த எண்ணிக்கை 19539 பேர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு ஏடான "விரிப்பு" தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டம் 7041 பேர்
மட்டக்களப்பு-அம்பாறை 4966 பேர்
வன்னி மாவட்டம் 2879 பேர்
திருகோணமலை மாவட்டம் 1763 பேர்
முல்லைத்தீவு மாவட்டம் 1449 பேர்
மன்னார் மாவட்டம் 1110 பேர்
வெளி மாவட்டம் 331 பேர்

திங்கள், 3 செப்டம்பர், 2007

விடுதலைப் புலிகளின் கனரகவாகனம் மோதியதில் கணவனும் மனைவியும் பலி!

கிளிநொச்சி் இரத்திரனபுரம் பகுதியில் 2ஆம் திகதி பிற்பகல் தமிழீழ விடுதலைப் புலிகளின் கனரக வாகனம் மோதியதால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பச்சிலைப்பள்ளி புலோப்பளையைச் சேர்ந்த 58 வயதுடைய யாக்கோப் சந்தியாப்பிள்ளையும் அவரது மனைவியான 51 வயதுடைய திரேசம்மாவும் கொல்லப்பட்டனர்.

ஞாயிறு, 2 செப்டம்பர், 2007

விடுதலைப் புலிகளிடம் ஆளணி பற்றாக்குறை.





தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பினுள் ஆளணி பற்றாக்குறை நிலவுவதால் வன்னிப் பகுதியில் பலாத்காரமாக மக்களை தமது இயக்கத்தில் சேர்த்து வருவதாக வோய்ஸ் ஒவ் அமெரிக்கா தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

இந்த சுட்டியில் செய்தியைக் கேட்கலாம்.
http://www.voanews.com/mediaassets/uspolicy/2007_08/Audio/mp3/13722.mp3

சனி, 1 செப்டம்பர், 2007

கைதாகிய சிறுவர்கள் மீது ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினர் விசாரணை


திருக்கோவில் சங்குமன்கண்டி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியினருடன் ஸ்ரீலங்கா விசேட அதிரடிப் படையினர் தாக்குதல் நடாத்திய போது எண்மர் கைதாகியுள்ளதுடன் இவர்களிடமிருந்து வெடிபொருட்களையும் கைப்பற்றியதாக ஸ்ரீலங்கா படை தரப்பு செய்திகள் கூறுகின்றன.

இவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டோர் பெயர் விபரம்
1.ஜீவராசா சுதன் - வயது 15
2.சாமுத் நாடன் திரவுல் - வயது 19
3.பெருமாள் சின்னத்தம்பி - வயது 15
4.தர்மரதம் ரமேஷ் - வயது 16
5.செல்வராசா சுவராஜினி - வயது 15
6.துரைசிங்கம் சுமன் நமீனா - வயது 14
7.விக்னேஷ்வரன் வினோதினி - வயது 16
8.தவராசா ரசீனா - வயது 14

யுனிசெப் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்காக சிறுவர்களை அழைத்து வந்த போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இவ்விடயம் சம்பந்தமாக விடுதலைப் புலிகள் எதுவும் தமக்குத் தெரிவிக்கவில்லையென யுனிசெப் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2007

கிளிநொச்சியில் எண்மருக்கு மரண தண்டனை?

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வரி பெறும் சுங்கப் பணியில் ஈடுபட்டு வந்த எட்டு உறுப்பினர்கள் அவ் அமைப்பினாலேயே கடந்த இரு வாரங்களுக்கு முன் மரண தண்டனைக்கு இலக்காகி உள்ளனர்.

சேகரிக்கப்பட்ட வரிப்பணத்தை தமது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தினார்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கிளிநொச்சி, வட்டக்கச்சி விளையாட்டு மைதானத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மரண தண்டனை வழங்கியதாக ஸ்ரீலங்கா தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் செய்தி தெரிவித்துள்ளது.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----