தீவகக் கடலோரத்தில் ஒதுங்கி வரும் பெண்களின் சடலங்கள் தொடர்பான செய்தியை "களத்துமேடு" கடந்த வாரம் பதிவு செய்திருந்தது தெரிந்ததே!
இராமேஸ்வரத்தில் இருந்து 2008.09.11 ஆம் திகதி இலங்கை திரும்பிய அகதிகளின் படகு விபத்துக்குள்ளானதில் பெண்கள் நால்வரும், ஆண் ஒருவரும், குழந்தைகள் இருவரும் உயிரிழந்தர் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
வவுனியாவைச் சேர்ந்த முருகையா சந்திரமோகன் தெரிவித்த தகவலின் அடிப்படையில் கரை ஒதுங்கிய சடலங்களில் மேலும் ஐந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவை தாய், தந்தை, பிள்ளைகள் மற்றும் மைத்துனி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதென ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் திருமதி ஜோய் மகாதேவன் தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்டவர்களின் விபரம்:
ரங்கன் முருகையா - வயது 52
இந்திராணி முருகையா - வயது 42
சந்திரமோகன் செந்தூரன் - வயது 06
சந்திரமோகன் கோபிகா - வயது 05
திவ்வியா - வயது 22

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.