செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

பிரபாகரனைக் கேலி செய்த கருணா - ஓர் ஆய்வு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய தளபதியும், தற்போதைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான கருணா ஸ்ரீலங்காவின் சிங்களப் பத்திரிகைகளின் ஒன்றான "லக்விம"வுக்கு செவ்வி வழங்கியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிரின் மேல் ஆசையுள்ளவர், சாவுக்குப் பயந்தவரென குறிப்பிட்டதனை எடுத்து நோக்கினால், இந்த உலகில் உயிரின் மேல் ஆசை இல்லாதவர்கள் எவருமிலர், அதற்கு பிரபாகரன் விதிவிலக்கானவரில்லை, ஆனால் அவர் சாவுக்குப் பயந்தவரென குறிப்பிடுவது பொருத்தமானதாக தெரியவில்லை. அவர் ஈழ விடுதலைப் போராட்டத்தை முனைப்படையச் செய்வதற்காக பல களங்களைக் கண்டவர், எதிரியை துரத்தித் துரத்திப் போர் புரிந்தவர், இன்றைய அவரது வயதானது வன்முறைப் போராட்ட சிந்தனையில் இருந்து வழுவிக் கொண்டிருக்கின்றது என்பது நிஜம் தான்.

ஆனால் பிரபாகரனைப் பற்றி விமர்சிப்பதற்கு கருணாவுக்கு தகுதி இருக்கின்றதா என்பதனை கவனத்தில் எடுக்க வேண்டும், அத்தோடு கருணாவும் தன்னை சுயவிமர்சனம் செய்து பார்க்க வேண்டும். இன்றைய நிலையில் கருணாவுக்கு உயிரில் ஆசையில்லையா?, சாவுக்குப் பயந்தவரில்லையா? இயக்கத்தவர்களின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளாமல் ஸ்ரீலங்கா படையினரின் பாதுகாப்பை மாத்திரமே நம்பி வாழ்வதன் மர்மம் என்ன? எல்லாவற்றுக்கும் ஒரே பதில் உயிரின் மேலுள்ள ஆசையே ஆகும்.

கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த கடைசி தருணத்தில் பணப் பொதிகளை பிக்கப் வாகனத்தில் ஏற்றும் போது மூலை கிழிந்து அதனுள் இருந்த பணம் வெளியே தெரிந்ததை அவரது வாகன சாரதி கண்டு விட்டார், எனும் காரணத்தினால் அந்த அப்பாவிச் சாரதிக்கு குளிர்பானத்தினுள் விசம் கலந்து குடிக்கக் கொடுத்துக் கொல்லவில்லையா? ஏன்! இச் செய்தி பரவினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமே எனும் பயமே!

இந்திய அமைதி காக்கும் படையினர் ஸ்ரீலங்காவில் தங்கி இருந்த காலத்தில் அவர்களின் எடுபிடிகளாக இருந்த ஈழ விடுதலை இயக்கங்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, ஏதுமறியாத அப்பாவி இளைஞர்களையும், பாடசாலை மாணவர்களையும் பலோத்காரமாகப் பிடித்து தமிழ் தேசிய இராணுவத்தினை உருவாக்கினார்கள், இந்திய இராணுவமும் அவர்களது எடுபிடி இயக்கங்களும் இந்தியாவுக்குத் திரும்பி ஓடிய போது இந்த தமிழ் தேசிய இராணுவத்தினரை நிர்க்கதியான நிலையில் விட்டுச் சென்றார்கள், கிழக்கில் கருணாவின் தலைமையில் இருந்த தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அவர்களைக் கைது செய்தார்கள், கஞ்சிகுடியாறு காட்டுப் பகுதிக்கு அணி அணியாக கைகள் கட்டப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டவர்கள் அனைவரும் என்னவானார்கள் என்பது அந்தப் பகுதி மக்களுக்கு மாத்திரம் தெரியும், அனைவரும் வரிசையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதுவே உண்மையானது.

அன்று மாற்றுக் கருத்துக் கொண்ட இயக்கத்தினரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய இராணுவம் தேவையற்றதென்றும், அப்பாவி மக்களைக் கடத்திச் சென்று இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு செய்கின்றார்கள் என்றெல்லாம் கூக்குரலிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளும் கருணாவும், இன்று அப்பாவிகளைக் கடத்தி இயக்கத்துக்குச் சேர்த்து ஆயுதப் பயிற்சி செய்வது வேடிக்கையாகத் தெரியவில்லையா?

பல சகோதரக் கொலைகளை நடாத்தி முடித்த கருணா இப்போது எதுவும் தெரியாத அப்பாவி மாதிரி பாசாங்கு செய்வதால் புனிதனாகி விட முடியாது, துரதிஸ்டம் அவரது கட்சியே அவரைத் தூக்கி எறிந்து விட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தாபகர் கருணா இப்போது பிள்ளையானின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சுயமாக எதனையும் செயற்படுத்த முடியாமல் திண்டாடுவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது, உயிரின் மேலுள்ள ஆசையே பிரித்தானியாவுக்கு ஓட வைத்தது, ஆனால் அங்கும் நிம்மதியாக இருக்க முடியாமல் சிறைவாசம் அனுபவித்து ஆங்கிலேயர்களால் நாடு கடத்தப்பட்டு ஸ்ரீலங்கா திரும்பி ஸ்ரீலங்கா படைகளின் பாதுகாப்பில் இருந்து கொண்டு மீண்டும் காட்டிக் கொடுப்பையும், தமிழின அழிப்பையும் செய்து வரும் கருணா எப்படி பிரபாகரனை மாத்திரம் குற்றம் சாட்ட முடியும், தயவு செய்து சுய விமர்சனம் செய்து பாருங்கள்.

கருணா கடந்த வாரம் மட்டக்களப்புக்குச் சென்ற போது, அங்கு பொது மக்கள் சந்திப்பு மட்டுப்படுத்தப்பட்டு அதிலும் சுத்திகரிப்பு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது, இந்த சுத்திகரிப்பு எதற்காக ஏன் இவ்வளவு பயம். மக்களுக்குச் சேவை செய்யப் புறப்பட்ட உங்களுக்கு ஏன் பயம், உங்களுக்கும் உயிர் மேல் ஆசை இருக்கின்றது தானே, சாவுக்குப் பயந்து தானே வாழ்கின்றீர்கள்!

லக்விம செய்தியின் தமிழாக்கம்:
பிரபாகரன் உயிரின் மேல் ஆசையுள்ளவர் சாவுக்கு பயந்த கோழை.புலி உறுப்பினர்கள் அரச படையினரிடம் சரணடையவேண்டும்.- கருணா அம்மான் கோரிக்கை


யாராகினும் பிரபாகரனை உயிருடன் பிடிக்க முடியாது எனக்கூறினால் அது முற்றிலும் தவறானதாகும் அவர் தனது உயிரின் மேல் அபார ஆசை கொண்டவர், சாவுக்கு பயந்த கோழை அதனாலேயே தன்னை சூழ பலரையும் வைத்துக்கொண்டுள்ளார் என தமிழ் மக்கள் விடுதலை முன்னனி தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் ஒருபோதும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை புலிகளால் காப்பாற்றிக்கொள்ள முடியாது எனவும் பிரபாகரன் இந்தோனேசியா அல்லது காம்போடியாவிற்கு பாய்ந்து செல்ல ஏற்பாடுகள் நடப்பதாக தனக்கு செய்திகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது இறுதி போராட்டத்தின் போது புலிகள் இரசாயன ஆயுதங்களை பாவிக்கக் கூடும் எனவும், தான் புலிகளோடு இருந்தபோது இராசயன ஆயுதங்கள் பல இருந்ததாகவும் இதுவரை புலிகள் அவற்றைப் பயன்படுத்தவில்லை எனவும் லக்பிம ஊடகவிலயலாளரை சந்தித்து பேசிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


புலிகளின் இரண்டாம், மூன்றாம் நிலை சிறந்த தலைவர்களை இழந்துள்ளமையால் அரசின் தொடர் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் வடக்கில் பல சமர்களில் தோல்விகண்டு வருகிறது எனவும் இவர்கள் படையினரின் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.

பித்துபிடித்துப் போயுள்ள பிரபாகரனின் அறிவுரைகளை கேளாமல் அரச படையினரிடம் சரணடைந்து விடுமாறு புலி உறுப்பினர்களை தான் கேட்டுக்கொள்வதாக கருணா கூறியுள்ளார்.

3 கருத்துகள்:

  1. வணக்கம் களத்துமேடு.உங்கள் தளம் அதனூடாக நீங்கள் வெளிப்படுத்தும் செய்திகள் அனத்துமே அருமை.
    எப்போதும் கவனிக்கிறேன்.ஆனால் கருத்துச் சொல்லும் அளவிற்கு அரசியல் அறிவு போதாது எனக்கு.
    அதனாலேயே என் தளத்தில் உங்கள் தளத்தை இணைத்திருக்கிறேன்.

    இப்போதைய பதிவு கூட மறைந்து கிடக்கும் சில விஷயங்களைச் சொல்லி நிற்கிறது.ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் காட்டிக் கொடுப்பதை விட்டு எம் தமிழர்கள் முதலில் ஒற்றுமைப் பட வேண்டும்.அதுவே இப்போதைய தேவை எங்களுக்கு.அதுவரை எமக்கு விமோசனமே இல்லை.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஹேமா,
    களத்துமேட்டுக்கு வந்து கருத்திட்டமைக்கு முதலில் நன்றி.

    உங்களின் "வானம் வெளித்த பின்னும்" வலைப்பதிவு எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

    அதன் பிரதிபலிப்பே http://kalamm2.blogspot.com/ ஆகும், முடியுமானால் ஒரு தடவை இலக்கிய மேட்டுக்கு உலாப் போய் பாருங்கோ, அத்துடன் களத்துமேட்டை உங்கள் தளத்தில் இணைத்தமைக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----