பிள்ளையான் குழுவினருக்கு மகிந்த ராஜபக்ஷ் அரசினால் கிழக்கிலங்கையின் ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பிள்ளையான் குழுவினரின அடாவடித்தனங்கள் தினம் தினம் அதிகரித்து வருவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.
மட்டு. ஏறாவூர் மூன்றாம் பிரிவில் கடத்திச் செல்லப்பட்ட முஸ்லிம்கள் ஐவரில் நான்கு பேர் விடுவிக்கப் பட்டனர், ஒருவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்த இரவு வேளையில் ஆயுதங்களுடன் வந்த பிள்ளையான் குழுவினர் மட்டு. கல்லடி அலுவலகத்தில் இவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்துள்ளனர்.
கொண்டு செல்லப்பட்ட ஐவரில் 42 வயதுடைய ஏறாவூர் கடற்தொழிலாளர் சங்கத் தலைவரான எஸ்.எஸ். ஸமத் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
பிள்ளையான் குழுவினரின் அடாவடித்தனத்தால் தினமும் இப்பகுதி மக்கள் நொந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனை கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையானும், அக்கட்சியின் தலைவர் கருணாவும் கவனம் எடுப்பார்களா?

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.