
ஸ்ரீலங்காவின் தலைநகரில் இருந்து 1992 ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டிந்த "சரிநிகர்" எனும் நடுநிலைப் பத்திரிகைக் குழுமத்தின் உறுப்பினராகவும், "உயிர்ப்பு" சஞ்சிகை குழுமத்தின் உறுப்பினருமாக இருந்த ஊடகவியலாளர் நடராஜா சரவணனை நோர்வேயின் ஒஸ்லோவில் வைத்து இன்னுமொரு தமிழரான பத்மநாதன் குட்டி என்பவர் மதுப் போத்தலினால் கன்னத்தில் தாக்கியுள்ளார்.கடந்த மாதம் 19 ஆம் திகதி கன்னத்தில் பலத்த காயத்துக்குள்ளான சரவணன் ஒஸ்லோ மருத்துவமனையின் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சரவணன் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் நோர்வே வெளிநாட்டு ஊடக அமைப்பின் உறுப்பினராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்காவில் ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, அதேபோல் நோர்வேயிலுமா?

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.