

சார்க் மாநாட்டு வேளையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ்வுக்கும் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்குக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பையடுத்து தங்குவிடுதிக்குச் செல்ல மன்மோகன் சிங் வந்த போது அவரது காருக்கு பாதுகாப்பளிக்க வந்த பாதுகாவலர்கள் காணப்படவில்லை, இதனால் இந்திய பாதுகாவலர்களினாலேயே காரைச் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
...
...

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கே.என்.நாராயணன் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் இடம்பெற்ற சார்க் உச்சி மாநாட்டின் முதல் நாள் அமர்வில் கலந்து விட்டு தங்குவிடுதிக்குத் திரும்பவென மாநாட்டு மண்டபத்தின் பிரதான வாயிலுக்குச் சென்ற போது அவருக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக காரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அங்கு காணப்படவில்லை, அங்கு நீண்ட நேரம் காத்து நின்ற நாராயணன் இறுதியில் காரொன்றை வாடகைக்கு அமர்த்தி விடுதி சென்றார்.
அரச தலைவர்களின் வாகனப் பவனிக்கு முன்பாகச் செல்ல வேண்டிய மோட்டார் சைக்கிள் தொடரணியைச் சேர்ந்தவர்களில் இருவர் ஒரு அரச தலைவரின் அணியில் காணப்படவில்லை, இவர்கள் இருவரும் உணவு உண்பதற்காகச் சென்றிருந்ததாகவும் அறியக் கூடியதாக இருந்தது.
சார்க் மாநாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பிலும் இவ்வாறே பலத்த குளறுபடிகள் ஏற்பட்டு இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
எது எப்படியோ பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நாடான ஸ்ரீலங்காவில் 15 வது சார்க் உச்சி மாநாடு நடந்து முடிந்து விட்டது.
அரச தலைவர்களின் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.