ஸ்ரீலங்கா இரத்மலானையை அண்டிய பகுதியில் இராணுவ வாகனத்தை இலக்கு வைத்து தற்போது பாரிய குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பெல்லக்கடச் சந்திக்கு அருகில் உள்ள துசிதா புத்தகக் கடைக்கு அருகில் சென்று கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் பயணித்த பேரூந்து மீதே குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதில் இருந்த 4 விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதாகவும், 15 விசேட அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாகவும் அத்துடன் அவ்வண்டியில் இருந்த ஆறு பொது மக்களும் காயமடைந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
ஊடகவியலாளர்கள் இப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படாததால் மேலதிக விபரங்கள் பெறப்படவில்லை.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.