திங்கள், 28 மே, 2007

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் தீர்வு யோசனைகள்

சர்வகட்சிக் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்(ரி.எம்.வி.பி) மும்மொழிகளில் அமைந்த தமது கட்சியின் அரசியல் தீர்வு யோசனைகளை இன்று சமர்ப்பித்துள்ளனர்.

இலக்கம் 408, காலிவீதி, கொழும்பு-03 இல் அமைந்துள்ள சர்வகட்சிக்குழுவின் தலைவர் காரியாலயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சிச் செயலாளர் திருமதி.எஸ்.பத்மினி, கட்சியின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் திரு.க.மகேஷ் இருவரும் சேர்ந்து இன்று 11.30 மணியளவில் சமர்ப்பித்துள்ளனர்.

..

..

..

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட (ரி.எம்.வி.பி) அரசியல் தீர்வு யோசனைகள் பின்வருமாறு:

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி)

இனப்பிரச்சினை தொடர்பில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் நிரந்தரமான தீர்வொன்றினைக் காண்பதற்கான விதந்துரைப்புக்கள்.

1987 ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து அன்றிலிருந்து எழுகின்ற அரசியல் யதார்த்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கென மேலதிக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் ஊடாக அரசியல் அமைப்பிற்கு கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தத்தின் மூலம் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டவாறான மாகாண சபைகள் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்தினை ரி.எம்.வி.பி சிபாரிசு செய்கின்றது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் மத்திய அரசாங்கத்திடமிருந்து மாகாண சபைகளுக்கான அரசியல் அதிகாரப் பகிர்வானது இலங்கையில் நிலவுகின்ற தற்போதைய பிரச்சினை தொடர்பில் தீர்வுத்திட்டமொன்றினை வகுப்பதற்கான முக்கியமான காரணியாகவும் அடிப்படையாகவும் அமைதல் வேண்டும் என ரி.எம்.வி.பி உறுதியாக நம்புகின்றது.

அறிமுகவுரை

மூன்று தசாப்தமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சிவில் யுத்தமும் அதன் விளைவான முட்டாள் தனமானதும் கொடூரமானதுமான வன்முறை, இன்றுவரை எண்பதாயிரம் பெறுமதியான உயிர்களை கொன்றுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்களை பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றி இருப்பதுடன் அதே தொகையான மக்களை உள்ளக இடம்பெயர்விற்குள்ளாக்கியிருக்கின்றது. இதன் விளைவாக எமது நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தி, ஸ்திரத்தன்மை மற்றும் சட்டம் என்பன கடுமையான பாதகமான விளைவுகளுக்கு உள்ளாகி இருப்பதுடன் இவ்விளைவுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றன. சிறுபான்மை மக்களின் விN~டமாக தமிழர்களினதும் தமிழ் பேசும் ஏனைய மக்களினதும் பிரச்சினைகள் தொடர்பில் நிரந்தரமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வொன்றினைக் காண்பதற்கான எமது இயலாமையானது எமது நாட்டை ஆட்டிப்படைக்கும் பிரச்சினைகளுக்கான அடிப்படையான ஓரே மூலகாரணமாக அமைகின்றது.

வரலாற்று ரீதியில் உற்றுநோக்கும்போது சில பல்லின, பல்தேசிய பல்மத மற்றும் பல்கலாசார நாடுகளில் சிறுபான்மையினர் எண்ணிக்கை அடிப்படையில் பிரதான பெரும்பான்மையினரின் அடக்கு முறைக்குள்ளாக்கப்படும் போது அது சிறுபான்மை மக்களின் எதிர்ப்பினை தோற்றுவிப்பதுடன் அவ்வெதிர்ப்பு கவனியாதுவிடப்படுமிடத்து அது வன்முறைசார் கிளர்ச்சிகளைத் தோற்றுவிக்கின்றது. சிறுபான்மை உரிமைகள், அவர்களின் பாதுகாப்பு, சட்டத்தில் சமத்துவம் மற்றும் அவர்களது கௌரவம் பாதுகாக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் அதே பல்லினத்தன்மை காணப்படும் சில நாடுகளில் தேசிய ஸ்திரத்தன்மை, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்கள் வீழ்ச்சியடையாது வளர்ச்சியடைந்து வருகின்றன. இன்று உலகத்தில் காணப்படும் மிகவும் முக்கியமான நாடுகள் இரண்டாவது வகையான நாடுகள் தொடர்பிலான உதாரணங்களாகும்.

ஓப்பீட்டளவில் ஒரு சிறிய நாடான நவீன இலங்கை, வரலாற்றிலும் கலாசாரத்திலும் வளமடைந்துள்ள போதிலும் துரதி~;டவசமாக அதற்கு அங்கு வாழும் பல்லின மக்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் மற்றும் ஏனைய இனத்தவர்களை ஒருமித்தவர்களாக ஒன்றிணைக்க முடியாமல் போயிருப்பதுடன் ஆறு தசாப்தங்களுக்கும் மேலதிகமாக தேசிய பிரிவு எனும் விதைகளை விதைத்திருக்கின்றது. பிரபலமான பௌத்த மதம் கற்பிக்கின்ற சகிப்புத்தன்மை, கருணை மற்றும் அனுதாபம் போன்ற நற்குணங்களைக் கொண்ட உதாரணபுருசராக விளங்குவதற்குப் பதிலாக இலங்கை இன்று உலகநாடுகளால் காட்டுமிராண்டி மற்றும் மிகவும் வன்முறையான நாடுகளின் பட்டியலுடன் இனங்காணப்பட வேண்டியுள்ளது.

ஆறு தசாப்பதங்களுக்கு முன்னர் காலணித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற இலங்கை, விN~டமாக நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் சுதந்திரத்தின் பலனை சமமான அடிப்படையில் அனுபவிப்பதற்கான வழிகளை செய்யத்தவறியுள்ளது. காலணித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள முன்னனியிலிருந்து போராடிய தமிழர்களுக்கு புதிதாக சுதந்திரம் அடைந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் சமாதானமும், மரியாதையும், கௌரவமும், பாதுகாப்பும் மற்றும் சமஉரிமையுடன் வாழ்வதற்கு சுதந்திரம் தேவைப்பட்டது. இருப்பினும் யதார்தம் அவ்வாறு இருக்கவில்லை. சுதந்திர இலங்கைக்குள் இடம்பெற்ற அரசியல் செயற்பாடானது, சிறுபான்மை மக்களின் விN~டமாக தமிழ் மக்களின்; உரிமைகள், பாதுகாப்பு மற்றும் மரியாதை போன்றன பரிதாபகரமாக நசுக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை மக்களை ஓரங்கட்டும் நடவடிக்கையினை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இலங்கைக்கான சுதந்திரத்தின் விடிவானது உயிரோட்டத்துடன்கூடிய தமிழ் மக்களை ஓரங்கட்டி வலுவிழக்கச்செய்யும் முற்போக்கு குணவியல்புகளினால் அவர்களின் வரலாற்று ஏட்டில் இருள்சூழ்ந்த அத்தியாயம் ஒன்றினை தோற்றுவித்தது.

தமிழ் மக்கள் நிரந்தர தடைகளின் கீழ், அவர்களின் எண்ணிக்கை, மொழி, கலாசாரம், வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையினை நிர்ணயிக்கும் அவர்கள் வாழும் பிரதேசங்களின் அடிப்படையில் தனிப்பட்ட மக்கள் என்ற வகையில்; அழிவின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களாக ஆகியுள்ளார்கள். சுதந்திர இலங்கைக்குள் காணப்படும் பெரும்பான்மைசார் மற்றும் வெகுவாக மையப்படுத்தப்பட்ட ஆட்சிமுறைமை சிறுபான்மை மக்களின் விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றத்தவறியமையின் காரணமான அது அடக்குமுறையினையும் ஒடுக்குமுறையினையும் தோற்றுவித்துள்ளது. இவ்வாக்கிரமிப்பின் மிகமோசமான பலனை தமிழ் மக்கள் அனுபவித்திருக்கின்றார்கள்.

நாட்டில் தமிழர்கள் ஓரங்கட்டப்படுவதனை தடுப்பதற்கு மாறி மாறி வந்த இலங்கை அரசாங்கங்களுடன் தமிழ் தலைவர்களும் அரசியல் கட்சிகளும் சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தது. பின்னர் அந்நடவடிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. அவர்களது முயற்சிகள் குறைத்து மதிப்பிடப்பட்டதுடன் அம்முயற்சிகள் பல அரசாங்கங்களினது ஜனநாயகமற்ற அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டன. படிப்படியாக வளர்ந்துகொண்டு வந்த தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகக் கலந்துரையாடப்பட்ட 1956 ஆம் ஆண்டின் பண்டா-செல்வா ஒப்பந்தமும் 1965 ஆம் ஆண்டின் டட்லி–செல்வா ஒப்பந்தமும் அவ்வொப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட மறுவினாடியே இலங்கை அரசாங்கங்களினால் தட்டிக்;கழிக்கப்பட்டன.

மாறி மாறிவந்த சிங்கள ஆதிக்க இலங்கை அரசாங்கங்கள் பெரும்பான்மையினரான சிங்கள மக்களின் விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றுவதில் அதிக அக்கறை காட்டியதுடன் சிறுபான்மையினரின் விN~டமாக தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புக்கள் தொடர்பில் அக்கறை காட்டுவதற்கு அவர்களுக்கு ஞானமோ தூரநோக்கு சிந்தனையோ இருக்கவில்லை. இக்குறுகிய எண்ணத்துடனான, ஆதிக்க மற்றும் குறுகிய அணுகுமுறை ஆட்சியானது மிகவும் மோசமான சிவில் யுத்தத்திற்கு வழிகோரியதுடன் இலங்கை ஓரே தனிநாடாகவிருப்பதற்கும் சவாலாக அமைந்தது.

இலங்கையில் காணப்படும் அரசியல் முறைமையினால் எந்தவொரு நாகரீகமான வழிமுறைக்குமான உபாயங்கள் மறுக்கப்பட்டமையினால் தமது சொந்த உரிமைகளுக்காக தமிழ் மக்கள் போராடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஏகாதிபத்திய சிங்கள பெரும்பான்மையினரின் ஆட்சியினைக் கவிழ்ப்பதன் மூலம் மட்டுமே தமிழர்கள் முழுப் பிரஜா உரிமை, கௌரவம் மற்றும் மரியாதையுடன் வாழமுடியும் எனும் யதார்த்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். 1970 களின் இறுதியாகும்போது சிங்கள ஆட்சியிலிருந்தான விடுதலையும் சுயாட்சியுமே தமது உரிமைகள் என தமிழர்கள் நம்பவைக்கப்பட்டார்கள்.

இலங்கை அரசாங்கத்தின் இராணுவப் பலத்தினைக்கொண்டு தமிழ் எதிர்ப்பின் ஜனநாயக மற்றும் சமாதான வெளிப்பாடு அடக்கி ஒடுக்கப்பட்டபோது 1980 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்திலிருந்து தமிழ் எதிர்ப்பானது அதிகரிக்கப்பட்ட அளவிலான வன்முறையினை நாடிச்சென்றது. அவ்வெதிர்ப்பினை அடக்கி ஒடுக்குவதற்காக இலங்கை அரசாங்கம் இராணுவம், பொலீஸ் மற்றும் குண்டர்களைப் பயன்படுத்தி பாரிய அளவிலான வன்முறையினைப் பயன்படுத்தியது. இலங்கை அரசாங்கத்தின் இச்சிறுபிள்ளைத்தனமானதும் விவேகமற்றதுமான செயற்பாடானது அரசாங்க மற்றும் தமிழ் வன்முறைச் சுழற்சியினை அதிகரிக்கச்செய்து தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தினை மேலும் இராணுவரீதியில் பலப்படுத்தியது.

தமிழர் தனித்துவத்தினையும் தமிழர் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் மட்டும் ஆரம்பித்த ஆயுதப்போராட்டமானது சுயநல மற்றும் செயல்நோக்கற்ற குழுவொன்றினால் படிப்படியாக மாற்றப்பட்டதுடன் அக்குழு வன்முறையினை தனது அடிப்படைத்தத்துவமாக்கிக் கொண்டிருப்பதுடன் போராட்டத்தினை பலவீனப்படுத்தி மதிப்பிழக்கச் செய்துள்ளது. தமிழ் மக்கள் மீது தமக்கு பாரிய அக்கறை இருப்பதாகக் கூறிக்கொள்ளும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தூரநோக்கற்ற சிந்தனையானது போராட்டத்தின் பின்னால் காணப்படும் முக்கியமான பலமாகக்காணப்படுவதனால் தமிழ் மக்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றார்கள். தமிழ்களின் தமது உரிமைக்கான புனிதப்போராட்டமானது, சகல விழுமிய எல்லைகளும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளினால் தாண்டிச்செல்லப்பட்டு பயங்கரவாதமாக மாறியிருப்பதுடன் அது தமிழ் மக்களுக்கே பாரிய க~;டங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் போராட்டத்;தில் விடுதலைப் புலிகளின் தலைமையின் முக்கியத்துவத்தினை உணர்த்தியிருக்கின்ற வன்முறைத்தத்துவத்தின் மூலம் தமிழ் மக்களின் தனித்துவம் தொடர்பில் பங்களிப்புச்செய்த அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கின்றது.

தற்காலிக இராணுவ அடைவுகள்; நிரந்தர அரசியல் வெற்றிகள் என கௌரவிக்கப்ட்டன. அதர்ம பயங்கரவாத நடவடிக்கைகள் தமிழ் உரிமைகளை வென்றுதரும் போராட்டம் எனக் காட்டப்பட்டன. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினதும் அதன் தலைவரினதும் அணுகுமுறையானது தமிழ் மக்களின் பிரச்சினைகளை மேலும் வலுவடையச்செய்துள்ளதுடன் தமிழர்களை இலங்கைக்குள் மேலும் ஒதுக்கப்பட்ட இனமாக்குவதற்கு துணைபுரிந்துள்ளது.

இலங்கையின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு அத்தியாவசியமான ஸ்திரத்தன்மையினையும் சமாதானத்தினையும் ஏற்படுத்தல் தொடர்பில் மோசமடைந்து கொண்டுசெல்லும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றிற்கான அவசர முயற்றியுடன் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தினை தோற்கடிக்கும் செயற்பாடானது இணைக்கப்படுதல் வேண்டும். இவ்விருமுனை அணுகுமுறையானது அத்தியாவசியமானதும் தவிர்க்கமுடியாததுமாகும். யுத்தத்தினால் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை தோல்வியடையச் செய்வதன்மூலம் தற்காலிக ஓய்வொன்று கிடைக்குமே தவிர ஒரு நிரந்தரத் தீர்வொன்றினை வழங்காது. தமிழர்களுக்கும் மற்றும் ஏனைய சிறுபான்மையினருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்று இலங்கை அரசாங்கத்தினால் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இது புலிப் பயங்கரவாதிகளின் அரசியல் தோல்வியினையும் உறுதிப்படுத்தும்.

நாட்டின் ஜனநாயக அரசியல் வாதிகளுக்கிடையே நோக்கடிப்படையிலானதும் நேர்மையானதுமான கலந்துரையாடல்களை நடாத்துவதன் ஊடாக தமி;ழ் மக்களும் ஏனைய சிறுபான்மையினரும் முகம்கொடுக்கும் பிரச்சினைகளின் அடிப்படைக்காரணங்கள் இனங்காணப்படுதல் வேண்டும். சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் அமைப்புக்களினால் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத்திலிருந்து வேறுபடுத்தி நோக்கப்படுதல் வேண்டும். தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டு அவர்களின் உண்மையான பிரச்சினைகள் தீர்க்கப்படாதவிடத்து அதன் விளைவுகள் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மற்றும் அதனைத் தொடர்ந்துவரும் அமைப்புக்கள் போன்ற அமைப்புக்களுக்கு சாதகமாக அமைந்துவிடும். தற்போது அரசியல் மேடையில் இருக்கும் முக்கிய பங்கினை வகிக்கும் சில அரசியல் அங்கத்தவர்கள் அவ்வாறான அழிவுகள் தொடர்பில் வருந்துவதற்கு வாழலாம். இலங்கை அரசாங்கமும் சிங்களவர்களும் எமது வரலாற்றின் மிகவும் பாரதூரமான சந்தர்ப்பத்தில் அத்தவறு தொடர்பில் குறைகூறப்படுவார்கள்.

சிங்கள மக்களும், அவர்களுடைய அரசியல் தலைவர்களும் திறந்த மனதுடன் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் நிரந்தர தீர்வொன்றினைக் காண்பதற்காக அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். இது புத்த பெருமானின் இலங்கை வருகையை போலவே முக்கியத்துவம் பெறுவதோடு தீயனவற்றை தோழ்வியுறச் செய்து என்றுமே அகிம்சையினை போதிக்கக் கூடியதாக இருப்பதுடன், இலங்கையில் சமூக அரசியல் வாழ்க்கையினை உண்மையாக ஏற்படுத்துவது தொடர்பில் பௌத்த மதத்தின் கொள்கைகளை அங்கீகரிக்கும்.

எமது தேசிய பிரச்சினை தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறையினை நாம் வரவேற்கின்றோம். முன்னைய அரசாங்கங்களைப் போலல்லாது ‘தமிழ் பிரச்சினை’ என அழைக்கப்படும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தற்போதைய அரசாங்கம் தெளிவானதும், தெளிவுடன் கூடியதுமான செயல்நோக்கொன்றைக் கொண்ட அணுகுமுறையொன்றினை நாடியிருக்கின்றது. இவ்வரசாங்கம் அரசியல் தீர்வுகளைக் காண்பதற்காக சர்வகட்சி மாநாட்டு செயன்முறையொன்றினை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் அதேவேளை எமது நாட்டின் இறைமையினையும், ஒருமைப்பாட்டினையும் உறுதிசெய்வதற்காக பயங்கரவாதத்தினை தோற்கடிப்பதற்கான தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகிய நாங்கள் சுமார் 30 வருடங்களாக தமிழ் ஆயுதப் போராட்டத்தின் முன்னனியிலிருந்தோம். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் யுத்த நடவடிக்கைகளைப் போன்று நாங்கள் மேற்கொண்டிருக்கின்ற ஆயுதப் போராட்டத்தினால் மட்டும் அரசாங்கம் எமது மக்களின் பிரச்சினையை தீர்க்க மாட்டாது என நாங்கள் புரிந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் ஆயுதப் போராட்டத்திலிருந்து விலகி எமது மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் அவற்றிற்கு தீர்வு காணும் பொருட்டு ஐனநாயக வழியில் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானித்திருக்கிறோம். இன்நோக்கில் நாம் எமது விதந்துரைப்புக்களை சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கின்றோம்.

விதந்துரைப்புக்கள் :

மத்திய அரசாங்கத்திலிருந்து ஆட்சியின் ஏனைய பிரிவுகளுக்கு அரசியல், நிருவாக மற்றும் நிதி அதிகாரங்களை வெகுவாகப் பகிர்ந்தளிப்பதன் மூலம் பிரிக்கப்படாத ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்குள் ‘தமிழ் பிரச்சினை’ என்றழைக்கப்படும் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்பதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு நம்பிக்கை இருக்கிறது. சர்வகட்சி மாநாட்டின் போது கருத்திற் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படை பிரச்சினைகளுக்கு எமது விதந்துரைப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

1. ‘தமிழ் பிரச்சினை’ என்றழைக்கப்படும் பிரச்சினைக்கான மூல காரணங்கள் இனங்காணப்பட்டு வரலாற்று யதார்த்தங்களைக் கருத்திற் கொண்டு அப்பிரச்சினைகள் தொடர்பில் பொருத்தமான தீர்வுகளைக் காணுதல் வேண்டும். தீர்வுகளைக் காணும் போது தமிழ் தனி நபர்களுக்கும், அரசியலமைப்புக்களுக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்று தொடர்பில் ஆராயப்பட வேண்டியதுடன் அவர்களது கருத்துக்களும் கவனத்திற் கொள்ளப்படுதல் வேண்டும். சிங்கள மக்களும் அவர்களது அரசியல் வாதிகளும் தமிழ் மக்கள் முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்காக திறந்த மனதுடனும், சிறந்த ஞானத்துடனும் முன்வர வேண்டும். அத்துடன் அவர்களுடன் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளவும் வேண்டும். 2. தமிழர்களுக்கும் ஏனைய சிறு பான்மையினருக்கும் பொருத்தமான வகையிலும், போதுமான அளவிலும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான புதிய அரசியல் அமைப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். இந்நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு தேவையான (தெற்கு) சிங்கள மக்களின் இணக்கப்பாட்டினை அரசாங்கம் நாடவேண்டும். இதனை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் தெற்கில் வாழும் குறுகிய மனமுடைய சுயநல மற்றும் மிதவாதிகளாகிய ஒரு சிறு தொகையினரின் எதிர்ப்பினை வெற்றி கொள்வதற்கான ஞானமும் பலமும் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். இலங்கையின் சிறந்த நலன் கருதி சகல அரசியல் கட்சிகளும் தமது குறுகிய எண்ணத்தினையும், குறுகிய அக்கறைகளையும் கைவிட்டு நடந்து கொண்டிருக்கும் யுத்தத்திற்கு நிரந்தர தீர்வொன்றினைக் காண்பதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது மிகவும் முக்கியமானதாகும். 3. இத் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகளைக் காண்பதற்காக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முக்கியமாக தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினை சமாதானப்படுத்தும் முயற்சிகளாக இருந்ததுடன் அதன் தலைவரின் அதிகாரத்தினை பலப்படுத்தும் முயற்சிகளாக அமைந்ததனால் அம்முயற்சிகள் தோழ்வியடைந்தன. ஆகவே தமிழ் மக்களினதும், ஏனைய சிறுபான்மையினரதும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய தீர்வுகளைக் காண்பது அத்தியாவசியமானதாகும். அவ்வாறான தீர்வொன்றைக் காணும் நடவடிக்கையில் இலங்கையின் சகல சமூகங்களும் உயிரோட்டத்துடன் பங்கு பற்றல் வேண்டும். 4. ஏனைய மொழிகளைப் பேசும் குழுக்களைச் சேர்ந்தவர்களை ஆக்கிரமிப்பதற்கான அக்கறை சிங்கள பிரிவுகளிடம் மட்டும் காணப்படும் ஒரு மனோநிலையல்ல. அது தமிழ் பிரிவுகளிடையேயும் புரையோடிக் காணப்படும் ஒரு மனோநிலையாகும். சிங்களவர்களும் தமிழர்களும் அவ்வாறான குழுக்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்கு முன்வர வேண்டும். அவ்வாறான மக்கள் மற்றும் குழுக்களின் நடவடிக்கைகள் காரணமாக இலங்கையினை பயங்கரவாதம் ஆக்கிரமித்துள்ளது. 5. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தினை தோற்கடிப்பதற்காக தேவைப்படுகின்ற தெற்கு சிங்கள மக்களின் ஒற்றுமையானது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகளை முன்வைப்பதிலும், வழங்குவதிலும் சாதகமான போக்காக மாற்றப்படுதல் வேண்டும். இலங்கையின் பயங்கரவாதத்திற்கு நிரந்தரமான தீர்வொன்றினைக் மேற்கொள்வதற்கு இவ்விருமுனை அனுகுமுறையால் மட்டுமே முடியுமென்பது தொடர்பில் சகல மக்களுக்கும் விளழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 6. இராணுவ ரீதியில் பலமிழக்கச் செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் மீதான தமது பிடியினை பலாத்காரத்தினூடாகவும், மரண அச்சுறுத்தலினூடாகவும் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக இருப்பதற்கான விருப்பத்தை தற்போது கொண்டிருப்பதில்லை. ‘தமிழ் பிரச்சினை’ தொடர்பில் நியாயமானதும், ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான தீர்வொன்றைக் காண்பதில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தடையாக இருந்தால் தமிழ் மக்கள் உற்பட அனைத்து சமூகங்களும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும். 7. நாட்டு மக்களின் அரசியல் வாழ்க்கையில் இன மற்றும் மதத்தின் பங்களிப்பானது குறைக்கப்பட வேண்டியதுடன் தனி மனிதனுக்கும், மனித உரிமைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுதல் வேண்டும். இலங்கையின் பிரஜா உரிமையானது சகல பிரஜைகளும் அவர்கள் நாட்டில் எப்பகுதியில் வாழ்கின்றார்கள் மற்றும் அவர்களது எண்ணிக்கை போன்ற விடயங்கள் கருத்திற் கொள்ளப்படாது அவர்களுக்கு சம உரிமைகளையும், சம சிறப்புரிமைகளையும் வழங்குதல் வேண்டும். 8. அரசியல் அமைப்பில் தமிழ் ஒரு தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இவ்வரசியல் அமைப்பின் அங்கீகாரமானது இன்னும் நிருவாக யதார்த்தமாகவில்லை. அரசாங்கத்துடனான நடவடிக்கைகளின் போதும் அதன் நிறுவனங்களுடனான நடவடிக்கைகளின் போதும் தமிழ் பேசும் மக்கள் தமிழை உபயோகிக்கக் கூடிய யதார்த்தநிலை உருவாக வேண்டும். 9. திறமை அடிப்படையில் தமிழர்கள் அரசாங்கத்தில் சேவை செய்வதற்காகவும் அதன் பலதரப்பட்ட சேவைகள் தொடர்பிலும் தெரிவு செய்யப்படுதல் வேண்டும். திறமை அடிப்படையில் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கிணங்க அவர்களுடைய சேவைகளுக்காக அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுதலும் வேண்டும். ஒருவர் தமிழன் என்ற அடிப்படையில் அவர் அரசாங்கத்தின் எச்சேவையிலிருந்தும் நீக்கப்படலாகாது. 10. இலங்கையின் எப்பகுதியிலும் சுதந்திரமாகவும் தடையின்றியும் மக்கள் நடமாடுவதற்கான சுதந்திரத்தினை வழங்கும் அதே வேளை வடக்கு கிழக்கில் அரச உதவியுடன் மேற்கொள்ளப்படும் குடியேற்றத்திட்டங்களுக்கு முடிவுகட்டப்படுதல் வேண்டும். 11. அரசியல் அமைப்பின்மீதான மாற்றங்களை தொடர்ந்து வடக்கையும் கிழக்கையும் மீள் கட்டமைப்பு செய்வதற்குத் தேவையான நிதி மற்றும் நிருவாக வளங்களையும் வழங்குவதற்கும் அபிவிருத்தி மற்றும் மேம்பாடு தொடர்பில் இழந்த நேரத்தினை ஈடுசெய்வதற்கும் விN~ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 12. அரசியல் அமைப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ள விN~ட நீதித்துறைசார் வரம்புகளின் கீழ் அன்றி மாகாண அரசாங்கங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டிய அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தினால் தெளிவாகவும் வரம்புகள் இன்றியும் வரைவிலக்கணப்படுத்தப் படவேண்டும். 13. தத்தமது மாகாணங்களை சுயாதீனமாக அபிவிருத்தி செய்துகொள்வதற்கும் நிருவகிப்பதற்கும் மாகாண அரசாங்கங்களுக்கு இயலுமை இருக்க வேண்டும். ஆனால் இது மத்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படுதல் வேண்;டும். 14. ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுகள் தொடர்பில் அரசாங்கம் பொது மக்களின் அபிப்பிராயத்தினைத் தூண்டுவதற்கும் நாடுவதற்கும் அக்கறை காட்டாதவிடத்து அது பயங்கரவாதத்திற்கு புத்துயிரினை வழங்கும் என அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். 15. பிரேரிக்கப்படும் ஏதேனும் தீர்வுகள் அரசியல் அமைப்பினால் பாதுகாக்கப்படுதல் வேண்டும். அதனை அடைந்து கொள்வதற்கு பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளின் ஆதரவு அரசாங்கத்திற்குத் தேவையாகவுள்ளது. அவ்வாறான அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்களை சகல அரசியல் கட்சிகளும் நாட்டின் நலன் கருதி முழுமனதுடன் ஆதரிக்க வேண்டும் என்பது அவசியமானதாகும். 16. ‘தமிழ் பிரச்சினைக்கு’ தீர்வு காண்பதற்குத் தேவையான அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பங்கேற்பதுடன் இங்கு குறித்துரைக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு கலந்துரையாடப்பட்டு ஏற்புடைய வகையில் கவனம் செலுத்தப்படுகின்றதாவென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கண்காணிக்கும்.

 வடக்கு கிழக்கிற்கு கையளிக்கப்பட வேண்டிய விசேட அதிகாரங்கள்.

1. கல்வி

கல்வி முறைமைகளையும் நடபடிமுறைகளையும் ஆரம்பமட்டக் கல்வியிருந்து உயர்மட்டக் கல்வி வரைத்திட்டமிடுவதற்கும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் அதனை அமுல்படுத்துவதற்கும் பரந்தளவிலான அதிகாரங்கள் கையளிக்கப்படுதல் வேண்டும்.

2. பொருளாதார அபிவிருத்தி

பொருளாதார மேம்பாடு தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணப்படும் பொருளாதார வளங்களின் பயன்பாட்டினை தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரங்களுடனும் முடியுமான மிகச்சிறந்த முறையில் முழுமையான அமுலாக்கல் அதிகாரங்களுடனும்; மேம்படுத்துவதற்கு போதுமான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுதல் வேண்டும்.

பின்வரும் விடயங்கள் தொடர்பில் அதிகாரங்கள் கையளிக்கப்படவேண்டும்

அ. விவசாயம், மிருகவளர்ப்பு, மீன்பிடி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுளாத்துறை போன்றனவற்றை சுயாதீனமாக அபிவிருத்தி செய்வதல் ஆ. சுயதொழில் மற்றும் கிராமியக் கைத்தொழிலினை மேம்படுத்;தல்

3. பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் சுயாதீனமாக நிதியினைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரங்கள்

மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு புறம்பாக மேலதிக நிதிகளை தேசிய மற்றும் சர்வதேச அடிப்படையில் சுயாதீனமாகப் பெற்றுக்கொள்ளும் அதிகாரங்கள் சபைகளுக்கு வழங்கப்படுதல் வேண்டும். தேசிய அதிகார சபைகளிடமிருந்தும் மாகாண சபைகளின் கீழ் வரும் அதிகார சபைகளிடமிருந்தும் நிதியினை சேகரித்துக்கொள்ளுதல் தொடர்பில் சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும்.

4. சமூக மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி

அ. போக்குவரத்து, பாதை வலையமைப்பு, மின்சாரம் போன்றனவற்றை அபிவிருத்தி செய்வதற்கான விசேட அதிகாரங்களை வழங்குதல். ஆ. புனர்நிர்மான, மீளமைப்பு வேலைகளை மேற்கொள்வதற்கு போதுமான அதிகாரங்களை வழங்குதல். இ. காணி மற்றும் காணி அபிவிருத்தியினை முகாமை செய்வதற்காக பரந்தளவிலான அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும். ஈ. மத்திய அரசாங்கத்தினால், அதன் முகவர்களால் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட அதன் அதிகாரிகளால் திட்டமிடப்பட்ட வகையிலும் பலாத்காரமாகவும் மேற்கொள்ளப்படும் குடியேற்றத்திட்டங்களை நிறுத்துவதற்கான அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும். உ. சுகாதாரம் மற்றும் சுகாதாரத்துடன் தொடர்புற்ற நலன்புரி செயற்றிட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கும் முகாமை செய்வதற்கும் சமூக மாநகர சேவைகளை மேம்படுத்துவதற்கும் போதுமானதும் பரந்தளவிலானதுமான அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும்.

ஊ. பெண்கள் மற்றும் பிள்ளைகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தல் தொடர்பில் போதுமான அதிகாரங்களைக் கையளித்தல்.

5. அ. தமிழ் இளைஞர்கள் விரும்பும் பட்சத்தில் பொலிஸ், முப்படைகளில் அவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப உரிய இடமும் முக்கியத்துவமும் வழங்கப்படுதல் வேண்டும்.

i. வடக்கிலும் கிழக்கிலும் வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் தொடர்பானது.

1. நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்திற்கான தீர்வுகள் முஸ்லிம் மக்களின் அரசியில் அபிலாசைகளையும் அவர்களின் உரிமைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும். ஏற்புடைய தீர்வுகளைக் மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்களின் போது முஸ்லிம் தலைமைத்துவமும் சம்பந்தப்படுதல் வேண்டும். 2. வடக்கு கிழக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அவர்களுடைய வீடுகளுக்கும் காணிகளுக்கும் திரும்புவதற்கான இயலுமையினை ஏற்படுத்தல் வேண்டும். இந்த வெட்கக்கேடான செயலுக்கு பொறுப்பானவர்கள் முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும். 3. வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டு மதிப்பளிக்கின்றது. யுத்தத்திற்கான தீர்வுகளைக் காண்பதில் அவர்களும் பங்காளிகளாக இருக்கவேண்டும். மதம், மொழி அல்லது இனம் இவற்றின் அடிப்படையில் வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கான எவையேனும் முயற்சிகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எதிர்க்கின்றது. வடக்கிலும் கிழக்கிலும் வாழும் சகல மக்களினதும் சமாதான சகவாழ்வினை இயலச்செய்து அவர்களை முன்னேற்ற வேண்டும். 4. ஏனைய குழுக்களின் அரசியல் மற்றும் பிரஜா உரிமைகள் தொடர்பில் ஏதேனும் ஒரு இன அல்லது மதக்குழுவினர் தலையிடுவதற்கு அனுமதித்தல் ஆகாது. இலங்கையில் வாழும் சகல வௌ;வேறான மக்களுக்கும் சுய நிர்ணய உரிமை இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுதியாகக் கூறுகின்றது. 5. தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் காணிகள் தொடர்பான சச்சரவுகள் விரைவாகவும் சிநேகபூர்வமாகவும் தீர்த்துவைக்கப்படுதல் வேண்டும். அவ்வாறான சச்சரவுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக வடக்கிலும் கிழக்கிலும் காணப்படும் பலதரப்பட்ட பிரதேசங்களின் சம்பந்தப்பட்ட சமூகங்களை சம்பந்தப்படுத்தி ஏற்புடையதோர் முறைமையினை ஏற்படுத்த வேண்டும். 6. நாட்டின் சமூகங்களுக்கிடையேயான உறவைப் பலப்படுத்துவதற்காக பல்லினச் சங்கங்கள் ஸ்தாபிக்கப்படுதல் வேண்டும். இச்சங்கங்களில் மாவட்டத்தில் வாழும் சகல சமூகங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியதுடன் அவைகளுக்கு சட்ட அந்தஸ்தும் தீர்மானம் மேற்கொள்ளக்கூடிய அதிகாரங்களும் இருக்க வேண்டும். இனங்களுக்கிடையேயான உறவுகள் மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான விடயங்களின் போது முதலமைச்சர் இச்சங்கங்களின்; ஆலோசனையினைப் பெற்றுக்கொள்தல் வேண்டும்.

ii. வடக்கு கிழக்கு மகாணசபைத் தேர்தல் மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பானது.

1. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்கின்றது. அரசியல் அமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தின் மூலம் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டவாறான இவ்விணக்கப்பாடானது மேலும் செய்யப்பட வேண்டிய அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கான ஆரம்பமாக இருக்க வேண்டும். 2. தற்போதைய சூழ்நிலையின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய யதார்தமாக இந்த பிரிவினை ஏற்றுக்கொண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின் வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பாக கிழக்கு மாகாண மக்களிடம் சர்வஜனவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கோருகின்றது. 3. வடக்கின் அரசாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்தளவு விரைவில் நடாத்தப்பட்டு சபை ஏதேனும் தடையோ தடங்கலோ இன்றி செயற்படுவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும். 4. அகதிகளாக இந்தியாவிலும் உள்ளக அகதிகளாகவும் வாழும் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் வந்து தமது வழமையான வாழ்க்கையினை நடாத்தக்கூடிய சூழல் வடக்கிலும் கிழக்கிலும் உருவாக்கப்படுதல் வேண்டும். அவ்வாறான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்ட பின்னரே மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடாத்தப்படுதல் வேண்டும்.

iii. மலையக தமிழர்கள் தொடர்பானது.

1. பல தலைமுறைகளாக ‘மலைநாட்டு தமிழர்கள்’ என்றழைக்கப்படுபவர்கள் செய்திருக்கும் சேவைக்காக அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுடன் சம பிரஜா உரிமை தொடர்பில் அவர்களின் உரிமைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனால் ஏற்படக்கூடிய சிறப்புரிமைகளும் பாதுகாக்கப்படுதல் வேண்டும்.

iஎ. வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாழும் சிறுபான்மை இன மக்கள் தொடர்பானது

1. வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாழும் சிறுபான்மை இன மக்கள் தமது பிரஜா உரிமை தொடர்பான உரிமைகளை ஏதேனும் வரையறைகள் இன்றிப் பிரயோகிப்பதற்கும் ஏதேனும் தலையீடுகள் இன்றி தமது கலாசார மத வாழ்க்கையினை பின்பற்றுவதற்கும் அனுமதிக்கப்படுதல் வேண்டும்.

எ. மத்திய அரசாங்கம் தொடர்பானது

1. மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் அரசியல் அமைப்பில் குறித்தொதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையினை விஞ்ஞக்கூடாது. 2. ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் பாராளுமன்றத்திற்கு வகை சொல்லக்கூடியவர்களாவர். 3. ஜனாதிபதி பொலீஸ், இராணுவம், கடற்படை, மற்றும் விமானப் படைகளின் தலைவராக இருப்பார். அத்துடன் விதந்துரைப்புக்களை மேற்கொள்ளல் அதிகாரிகளை நியமித்தல், நடவடிக்கைகளைக் கண்காணித்தல் மற்றும்; முறைப்பாடுகளை விசாரித்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சுயாதீன முறைப்படுத்தல் அமைப்புக்கள் ஸ்தாபிக்கப்படுதல் வேண்டும். 4. அரசாங்க அதிகாரிகளும் அரச படைகளும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வகை சொல்லக்கூடியவர்களாக்க வேண்டும்.சிபாரிசகளையும் அறிக்கைகளையும் பிரசுரித்தல். குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தல், அவர்களை விசாரிப்பதற்கான பரந்தகன்ற அதிகாரகாரங்களுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவினை நியமித்தலானது அரசியலமைப்பின் ஏற்பாடொன்றாக அமைதல் வேண்டும்;. 5. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் ஜனாதிபதி மாகாண சபைகளின் முதலமைச்சர்களுடன் செயலாற்ற வேண்டும். 6. மத்திய அரசாங்கத்தின் அதிகாரிகளை மாகாணங்களுக்கு நியமித்தலானது சம்பந்தப்பட்ட மாகாண சபை அரசாங்களைக் கலந்தாலோசித்த பின்னரே அமுல்படுத்தப்படுதல் வேண்டும். 7. தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட இரண்டாவது சபை போன்றனவற்றை கூட்டிணைப்பு செய்வதற்கு தற்போதைய பாராளுமன்ற முறைமை மாற்றப்படுதல் வேண்டும். இரண்டாவது சபைக்கு நியமிக்கப்பட்ட அங்கத்தவர்கள் மாகாண சபைகளினால் பெயர் குறிப்பீடு செய்யப்பட்ட அங்கத்தவர்களாக இருத்தல் வேண்டும். 8. சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்ச்சித்திட்டங்களில் பெண்களின் பரந்தளவிலான பங்கேற்பினை அரசியல் அமைப்பு ஊக்குவிக்க வேண்டும். தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறையின் போது பெண்களின் பரந்தளவிலான பங்கேற்பினை ஊக்குவிப்பதற்கு மாகாண சபை அரசாங்கங்களினதும் பாராளுமன்றத்தினதும் தெரிவு செய்யப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட அங்கத்துவத்திலிருந்து 35 சதவீதத்தினை ஒதுக்கீடு செய்வதற்கு இடைக்கால ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----