வெள்ளி, 25 மே, 2007

கருணா பிள்ளையான் பகை - திவயின

பிரபாகரன், கருணா பகை போன்றே கருணா, பிள்ளையான் பகையும்

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கருணா குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று விட்டதாக தகவல்கள் தெரிவித்திருந்தன. இவ்வாறு குறித்த போட்டிக் குழுவுக்குத் தலைமை தாங்கியவர் பிள்ளையானும் மற்றும் அவருடைய சகாவான சீலன் எனப்படுபவருமே ஆகும். பிள்ளையான் கருணா குழுவில் மிகவும் பலம்வாய்ந்த படையணியின் தலைவராக இருந்தவர். கருணாவின் நிழல்போல அவருடனேயே கூட இருந்து செயற்பட்டவர்.

கடந்த 2004 ஏப்ரல் 9 ஆம் திகதி விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் விசேட படையணியினர் வெருகல் ஆற்றங்கரைப் பிரதேசங்களில் வைத்து கருணாவின் குழுவினர் மீது தீவிர தாக்குதல்களைத் தொடுத்த வேளையில், அதனை எதிர்கொள்ள முடியாத நிலையில் பின்வாங்கிய கருணா தனது குழுவினரைக் கலைந்து செல்லும்படி கூறிவிட்டு, வெளிநாட்டுக்குத் தப்பியோடிய சந்தர்ப்பத்தில் கருணாவின் குழுவினருக்குத் தலைமைதாங்கி அவர்களை வழிநடத்தியவர் பிள்ளையான்தான்.

..

..

..

இத்தகைய பிள்ளையான் தற்போது கருணா குழுவிலிருந்து பிரிந்து தனிக்குழுவாக இயங்குவதற்கு காரணம் கருணா குழுவினரால் செய்யப்பட்ட கொள்ளையடித்தல், கப்பம் வாங்குதல் மற்றும் மோசடிகள், ஒழுக்கச் சீர்கேடுகள் என்றே கூறப்படுகிறது. கருணா குழுவினரின் இந்த நடவடிக்கைகளை விரும்பாது அதிருப்தியடைந்த பிள்ளையான் இதுபற்றி பல தடவைகள் கருணாவிடம் தெரிவித்தபோதும் கருணா அதுபற்றி அக்கறை எடுக்கவில்லை. தொடர்ந்து இந்தப் பிரச்சினை சம்பந்த மாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே ஏற்பட்ட வாய்ச் சண்டை பாரதூரமாகிவிட்ட நிலையிலேயே பிள்ளையானும் அவருடைய சகா சீலனும் தமக்குச் சார்பான படையணியினருடன் தனியான குழுவாகப் பிரிந்து சென்றனர். கருணாவும் இவர்கள் இருவரையும் மறுபடியும் தனது குழுவில் சேர்த்துக்கொள்வதற்கான எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அத்துடன், பிள்ளையானுக்குப் பணிந்துபோக கருணா சிறிதும் விரும்பவில்லை என்றும் தெரியவருகிறது.

இவ்வாறான பயங்கரவாத இயக்கங்களைப் பொறுத்தவரை ஒரு குழுவிலிருந்து அதன் உறுப்பினர்கள் பகைத்துக்கொண்டு வெளியேறும் சந்தர்ப்பங்களில் குறித்த குழுவின் தலைவருக்கு தனது உயிர் பாதுகாப்பு பற்றிய அச்சம் ஏற்படுகிறது. குறித்த குழுவின் உயர் மட்டத் தலைவர் பிள்ளையான் போன்று பிரிந்து செல்லும் உயர்மட்ட உறுப்பினருக்கு "மரண தண்டனை" வழங்குவதுபோன்ற நிலைப்பாட்டை எடுப்பார். இதுவே பயங்கரவாத இயக்கங்களின் நடைமுறையாக இருந்துவருகிறது. இவ்வாறான ஒரு நிலைப்பாட்டுடனேயே கருணா செயற்படுவதாகத் தெரிய வருகிறது. பிரபாகரன் கருணாவைக் கொலை செய்ய மேற்கொண்ட முயற்சிகளும் இவ்வாறு கருணா பிரிந்து சென்றதால் இயக்கத்தின் பலம் பிளவுபட்டுப்போனதாலேயே. சட்டவிரோதமான ஆயுதப் படையணிகளின் போக்கு இவ்வாறுதான். தற்போது கருணாவுக்கும் பிள்ளையானுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் பிளவுக்கும் பகைக்கும் இது பொருந்தும்.

நன்றி தினக்குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----