ஞாயிறு, 27 மே, 2007

இலங்கையின் முதற் பெண் பத்திரிகையாசிரியர்

இலங்கை பத்திரிகைத்துறை வரலாற்றில் சிறிய பராயமான 31 வயதிலேயே முதற் பெண் பத்திரிகையாசிரியராக பிய சம்பிக லியனாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கள சமூகத்தைச் சேர்ந்த பிய சம்பிக இலங்கையின் தேசிய ஆங்கிலப் பத்திரிகையான டெயிலி மிரருக்கு 2007.01.01 முதல் பத்திரிகையாசிரியராக பதவி வகிக்கின்றார்.

1996 ஆம் ஆண்டில் பயிற்சிப் பத்திரிகையாளராக தெரிவாகி மூன்றாண்டுகளின் பின் பத்தி எழுத்தாளராக "மிரர் பொலிடிக்ஸ்" எனும் பத்தியை எழுதத் தொடங்கியது தொடக்கம் இன்று வரை அப் பத்தியின் ஆசிரியராக சம்பிகவே இருந்து வருகின்றார்.

2000 ஆம் ஆண்டில் கட்டுரைகள் உதவியாசிரியராக நியமனம் பெற்று 2003 ஆம் ஆண்டில் பிரதியாசிரியராகவும், 2006 ஆம் ஆண்டில் இணையாசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டார்.

தொடர்ச்சியாக ஒரே பத்திரிகையில் சிறப்பாகப் பணி புரிந்து முன்னிலைக்கு வந்து இலங்கை வரலாற்றிலே முதற் பெண் பத்திரிகையாளராக சிறிய வயதிலேயே தெரிவாகியுள்ள பிய சம்பிக லியனாராச்சியை களத்துமேடு பாராட்டி வாழ்த்துகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----