
இந்திய தென் கஷ்மீர் பகுதியிலுள்ள அனந்த்நாக் எனுமிடத்தில் உள்ள வைத்தியசாலையில் கடந்த 25 ஆம் திகதி ஒட்டிய இரண்டு முகங்களுடன் நான்கு கண்கள், இரு வாய்கள், இரு மூக்குகள் கொண்டதான குழந்தையொன்று பிறந்துள்ளது.


கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் கால் பதித்திருந்த வேளை யாழ். நல்லூரில் நீராகாரம் எதுவும் அருந்தாமல் உண்ணா விரதமிருந்தார் தியாகி திலீபன்.
ஸ்ரீலங்காவில் ஊடகவியலாளருக்கான 2009 ஆம் கல்வியாண்டுக்கான ஓராண்டு கால டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

கருணா அம்மான் தலைமையில் செயற்பட்டு வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்குள் மீண்டும் உட்பூசல் தலை தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிழக்கிலங்கை மாகாணசபை முதலமைச்சர் பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் இடையின் தோன்றிய முறுகல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 63ஆவது கூட்டத்தொடரில் நேற்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியிலும் உரையாற்றினார். கடந்த தடவை தனிச் சிங்கள மொழியில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ இம்முறை தமிழையும் தனது உரையில் சேர்த்துக் கொண்டார்.
ஸ்ரீலங்காவின் கிழக்கிலங்கை மாகாணசபையின் விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி அமைச்சர் திரு. துரையப்பா நவரெத்தினராஜா, மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான திரு. இனியபாரதி அவர்களை டான் தமிழ் ஒளி தொலைக்காட்சி சதுரங்கம் நிகழ்ச்சிக்காக அண்மையில் செவ்வி கண்டு ஒளிபரப்பி இருந்தது.









இலங்கையின் கல்வித் திட்டத்துக்கு அமைய நடாத்தப்படும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் தமிழ்மொழி மூல பரீட்சார்த்தியாகத் 2008.08.17 ஆம் திகதி நடைபெற்ற பரீட்சையில் தோற்றிய எழுதுமட்டுவாழ் வடக்கு, மாங்குளம் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலய மாணவன் தர்மலிங்கம் பாசுபதன் 176 புள்ளிகள் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தினை பெற்றுள்ளார்.
போர்கால சூழலில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளைச் செய்து வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வன்னியில் இரணைமடு சந்தியில் செயலகத்தைக் கொண்டு செயற்பட்டு வந்தது, ஆனால் இன்றைய யுத்த சூழல் மக்களை இடம்பெயர வைத்துள்ளதால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் புதுக்குடியிருப்பு பகுதிக்கு இடம்பெயருகின்றது.