

























மேலதிக பழைய படங்களுக்கு அழுத்தவும்: http://www.saibabaofindia.com

ஸ்ரீலங்கா அரசாங்க, படைத்தரப்பு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் மீது நடாத்திய போர்க் குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையின் முன்னோட்டம் கசிந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரச உயர்நிலையாளர்களும், அவர்களை ஒட்டி அரசியற்பிழைப்பு நடத்தும் சிலரும் கதிகலங்கிப் போயுள்ளமை அனைவரும் அறிந்ததே!
இந்திய தொலைக்காட்சிகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழ் பேசும் மக்களிடையே மிகவும் நெருங்கிய உறைவைப் பேணி வருகின்றது என்றால் அதில் மிகையில்லை, அந்த தொலைக்காட்சியில் இடம்பெறும் "நீயா நானா", "நடந்தது என்ன" போன்ற நிகழ்ச்சிகள் பிரபல்யமானவை, இவற்றை திரு.சந்திரன் கோபிநாத் மிகவும் சிறப்பாகத் தொகுத்து வழங்கின்றார்.
காலம் காலமாக பிரிந்து அரசியற் பணி செய்த தமிழ் அரசியற் கட்சிகட்குள் இருந்து வந்த பேதங்கள் நீங்கி ஓரணியில் அனைவரும் இணைந்து தமிழர்களின் குரலாக ஒலிக்கும் தருணம் வந்துள்ளது.




ஈழ விடுதலைப் போராட்டம் எனக் கூறிப் புறப்பட்டவர்கள், இத் தேச மக்களின் விடுதலைக்காக செய்தவை என்ன, இதற்கான விடையை மனம் திறந்து உரத்துக் கூற முடியுமா? ஈழ விடுதலை என நாமமிட்ட இயக்கங்கள் முதற்கொண்டு தமிழீழ விடுதலை என பெயரிட்ட இயக்கங்கள் வரை துப்பாக்கி ஏந்திய போராட்டத்தை ஆரம்பித்து எமது இனத்தை அழித்ததே வரலாறு!
சிலி நாட்டின் நிலக் கீழ் கனிமச் சுரங்கத்தில் 69 நாட்களாக சிக்கித் தவித்த 33 பேரை இலாவகமாக துளை குழாய் உறை மூலம் வெளியே கொண்டு வந்து உலகுக்கு மீள் அவதாரம் கொடுத்தது சிலி அரசாங்கம்.








2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச இலக்கிய விருதுகள் மும்மொழிகளையும் சேர்ந்த 35 நூல்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் வைத்து 2010.09.30 ஆம் திகதி வழங்கப்பட்டன, இவ்விருதுகளை 11 தமிழ்மொழி நூல்களும், 18 சிங்கள மொழி நூல்களும், 06 ஆங்கில மொழி நூல்களும் பெற்றுக் கொள்ள நீண்ட காலமாகப் இலக்கியத் துறைக்கு பங்களிப்புச் செய்த கலாபூஷணம் ஏ. முஹம்மது சமீம், பேராசிரியர் டப்ளியு.எஸ். கருணாதிலக்க மற்றும் கலாநிதி லக்ஷ்மி டி சில்வா ஆகிய மூவருக்கும் “சாஹித்தியரத்ன” விருதுகள் வழங்கப்பட்டன.
இலங்கையின் சகல பாகங்களிலும் மழை பெய்கின்றது, இந்த மழையினால் வன்னிப் பிரதேசங்களில் மீள்குடியேறிய குடிசை, கூடாரங்களில் வாழும் மக்கள் சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள். மீளக்குடியேறிய இம் மக்களுக்கு அரசாங்கம் இன்னும் நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கவில்லை.
உலகிலே கெரில்லா தாக்குதலுக்கு தனித்துவம் வாய்ந்ததென கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பூண்டோடு சரிய காரணமாக இருந்தவருள் முதன்மையானவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் என்றால் அதில் மிகையில்லை.
இலங்கை கல்வி முறையில் ஐந்தாம் தர மாணாக்கர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முறையும் ஒன்றாகும், இத் திட்டம் பன்னெடுங் காலமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாடளாவிய ரீதியில் பரீட்சை நடாத்தப்பட்டு அப் பரீட்சையின் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் இலங்கையின் முதற் தர பாடசாலைகளில் கல்வி கற்க அனுமதியும், அத்துடன் ஏழை மாணவர்களுக்கு மாதாந்த கல்வி ஊக்குவிப்புப் பணமும் இலங்கை அரசாங்க கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டு வருகின்றது.