ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

சாயிபாபா - அரிய படத் தொகுப்பு














































மேலதிக பழைய படங்களுக்கு அழுத்தவும்: http://www.saibabaofindia.com

சத்தியசாயி பாபா - அரிய படங்களுடன் ஒரு கண்ணோட்டம்


இந்திய ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தை தலைமையிடமாகக் கொண்டு உண்மை, அமைதி, அன்பு, அகிம்சை போன்ற போதனைகளை வலியுறுத்தி கல்வி, மற்றும் பொதுநல உதவிகளை மக்களுக்காகச் செய்து, ஒழுக்கமான அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் சத்தியசாயி பாபா.

சனி, 23 ஏப்ரல், 2011

ஐநா நிபுணர் குழு அறிக்கையும் கருணாவின் முதலைக் கண்ணீரும்!

ஸ்ரீலங்கா அரசாங்க, படைத்தரப்பு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் மீது நடாத்திய போர்க் குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையின் முன்னோட்டம் கசிந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரச உயர்நிலையாளர்களும், அவர்களை ஒட்டி அரசியற்பிழைப்பு நடத்தும் சிலரும் கதிகலங்கிப் போயுள்ளமை அனைவரும் அறிந்ததே!

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

"நீயா நானா" கோபிநாத்தும் தமிங்கில ஆதிக்கமும்!

இந்திய தொலைக்காட்சிகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழ் பேசும் மக்களிடையே மிகவும் நெருங்கிய உறைவைப் பேணி வருகின்றது என்றால் அதில் மிகையில்லை, அந்த தொலைக்காட்சியில் இடம்பெறும் "நீயா நானா", "நடந்தது என்ன" போன்ற நிகழ்ச்சிகள் பிரபல்யமானவை, இவற்றை திரு.சந்திரன் கோபிநாத் மிகவும் சிறப்பாகத் தொகுத்து வழங்கின்றார்.

திங்கள், 4 ஏப்ரல், 2011

தமிழும் ஒரு நாள் தெமல என்றாகுமா!


இலங்கையின் சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் இடம்பெற்றிருக்க வேண்டுமென தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உத்தரவு பிறப்பித்திருக்கும் செய்தியானது கல்லுக்குள்ளும் ஈரமிருக்கும் என்பதை தெளிவாக்குகின்றது.

சனி, 2 ஏப்ரல், 2011

கிரிக்கெட் உலகக் கிண்ணமும் தவற விட்ட இலங்கை அணியும்!

இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 2.30 மணிக்கு மும்பாய் வாங்கடே சர்வதேச விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகிய பத்தாவது உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய, இலங்கை அணிகள் பங்கேற்றன.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

தமிழுக்கான அங்கீகாரத்தை நிலைநிறுத்துவாரா டக்ளஸ் தேவானந்தா!

இலங்கையில் பயங்கரவாதம் முற்றுப்பெற்று மக்கள் அனைவரும் பீதியற்று நிம்மதியான வாழ்க்கை வாழ்கின்றார்களென ஊடகங்களின் வாயிலாக புளகாங்கிதம் அடைய ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர் முயற்சி எடுத்து வருகின்றமை அனைவருக்கும் தெரிந்ததே!

சனி, 29 ஜனவரி, 2011

ஈபிடிபி மௌனித்துள்ள வடமராட்சி உறுப்பினர் கொலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் துப்பாக்கிக் கலாசாரம் இலங்கையில் முற்றுப் பெற்றுவிட்டது என அரசாங்கம் மார்தட்டிக் கொள்ளும் இந்த 2011 ஆம் ஆண்டில் துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் தளிர்க்கின்றது என்பது போல யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள ஆனைவிழுந்தான் பகுதியில் ஓர் இளைஞன் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சனி, 11 டிசம்பர், 2010

ஓரணியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகள் அரங்கமும்!

காலம் காலமாக பிரிந்து அரசியற் பணி செய்த தமிழ் அரசியற் கட்சிகட்குள் இருந்து வந்த பேதங்கள் நீங்கி ஓரணியில் அனைவரும் இணைந்து தமிழர்களின் குரலாக ஒலிக்கும் தருணம் வந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் முள்ளிவாய்க்காலுடன் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர்கள் எடுப்பார் கைப்பிள்ளை எனும் நிலையிலே கவனிக்கப்படலாகினர், பெரும்பான்மை இனத்தவர்கள் தங்களின் பார்வைக்கேற்பவே தமிழர்கள் வாழ வேண்டுமென நினைக்கலாகினர், இவர்களின் பார்வைக் கோளாறை தீர்த்து வைக்க வேண்டுமெனில் தமிழர் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று தமிழர்களின் பிரச்சனைகளை உரத்துக் கூற வேண்டும், ஆயுதப் போராட்டம் ஒழிக்கப்பட்ட நிலையில் சாத்வீக அரசியற் போராட்டமே நிரந்தர உரிமைமைப் பெற்றுத் தரும்.

எமது அரசியற் தீர்வை நோக்கிய பயணத்தில் காலடி வைத்திருக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமது அணியுடன் இணைந்து கொள்ளுமாறு கடந்த ஜூன் 24 ஆம் திகதி முதல் பல தடவை கோரிக்கை விடுத்திருந்தது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் திட்டத்துக்கேற்ப செயற்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து செயற்படுவதில் இருவேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்ததால் பேச்சுவார்த்தைக்கான ஆரம்ப முயற்சியிலேயே இழுபறி ஏற்பட்டது, இந்த நிலையில் தமிழர்கள் இணைந்து ஒரு குடையின் கீழே என்னிடம் வாருங்கள் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார், மகிந்தவின் குரலை ஆமோதிப்பதாக அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா அவர்களும் இணைந்து செயற்படுமாறு இரு கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுத்தார்.

இதன் முதற் கட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புதிதாக உருவெடுத்த தமிழ்க் கட்சிகள் அரங்கமும் உத்தியோக பூர்வமாக 2010.12.11 ஆம் திகதியான இன்று பம்பலப்பிட்டியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பினை நடாத்தினர்.

இரு பிரதான அரசியல் அமைப்புக்களின் கட்சித் தலைவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் எம்.சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சிவசக்தி ஆனந்தன், பா.அரியநேத்திரன், எம்.சுமந்திரன், பொன்.செல்வராசா, எஸ்.வினோநோதாரலிங்கம் மேல்மாகாண சபை உறுப்பினர் குமரகுருபரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, எம்.கே.சிவாஜிலிங்கம், த.சித்தார்த்தன், அ.இராசமாணிக்கம், மற்றும் செ.சந்திரஹாசன், ரி.சிறிதரன், ப.உதயராசா ஜீ.சுரேந்திரன், கோபாலகிருஷ்ணன், ஆர்.ராகவன், எஸ்.சதானந்தம், டி.மாணிக்கவாசகர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம், வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள் போன்றனவுக்கான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகுறித்து அடுத்தடுத்த கட்டங்களில் இணைந்த கலந்துரையாடல்களை மேற்கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டதுடன் அரசியல் தீர்வு தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு இலகுவாக அதற்கான வரைபினை தயாரிப்பதற்கு ஏதுவாக ஆறு பேர் கொண்ட உபகுழுவினை எதிர்வரும் 2010.12.13 ஆம் திகதி திங்கட்கிழமை அமைப்பதென்றும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டதானது, தமிழர்களுக்கு பிரகாசமான ஒளி கிடைக்கவுள்ளது என்பதை எதிர்வு கூறுகின்றது.

இணைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் எனும் இரு துருவங்களும் எத்தகைய சவால்களையும் முறியடித்து தமிழ் மக்களுக்கான சுபீட்சமான வாழ்வுக்கு வழிவகுப்பார்களென எதிர்பார்ப்போம்.

வெள்ளி, 19 நவம்பர், 2010

ஸ்ரீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷ

ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இரண்டாம் தடவை பதிவியேற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷ ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே நீதி, ஒரே தேசியக்கொடி, இங்கு எல்லோரும் சம உரிமையோடு வாழவேண்டும் எனும் கோசத்தை மையப்படுத்தி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட விடயமானது பாராட்டத்தக்கதே, இதுவரை காலமும் பதவி வகித்த ஜனாதிபதிகளுள் எவரேனும் இதுவரை கூறிக் கொள்ளாத சொற்பிரயோகமானது மகிந்த ராஜபக்ஷ வாயினால் வந்திருப்பது ஒரு திருப்புமுனையே!

இதனை வார்த்தை ஜாலத்தில் மாத்திரம் நிறுத்தி விடாமல், இந்த நாட்டில் தமிழர்களும் மனிதர்கள், அவர்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என பிறர் மெச்சத்தக்க வகையில் எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்துவார் என எதிர்பார்ப்போம்.

இதனை தூர நோக்கோடு சிந்தித்து செயற்படும் பக்குவம் மகிந்த ராஜபக்ஷவிடம் இருப்பதாகவே அறிய முடிகின்றது, எதிர்பார்ப்போம்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ஈபிஆர்எல்எவ் நாபா அணியின் பாரிஸ் மாநாடு!

ஈழ விடுதலைப் போராட்டம் எனக் கூறிப் புறப்பட்டவர்கள், இத் தேச மக்களின் விடுதலைக்காக செய்தவை என்ன, இதற்கான விடையை மனம் திறந்து உரத்துக் கூற முடியுமா? ஈழ விடுதலை என நாமமிட்ட இயக்கங்கள் முதற்கொண்டு தமிழீழ விடுதலை என பெயரிட்ட இயக்கங்கள் வரை துப்பாக்கி ஏந்திய போராட்டத்தை ஆரம்பித்து எமது இனத்தை அழித்ததே வரலாறு!

ஒன்றும் அறியாத அப்பாவி இளைஞர்களை விடுதலைப் போராட்டம் எனும் பெயரில் அணி திரட்டி அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றது தான் இந்த விடுதலை இயக்கங்கள் செய்த காரியமாகும்.

ஈழப் புரட்சி அமைப்பு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனப் பெயரிட்டு இயக்கங்களை உருவாக்கியவர்கள் எமது மக்களின் வளர்ச்சிக்காக செய்த நல்ல காரியங்கள் எதுவுமே இல்லை.

இந்த விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்களுக்காவது குறைந்த பட்சம் எதாவது செய்து கொடுக்க இவர்களால் முடிந்ததா, இயக்க இலட்சியத்துக்காக உழைத்து மரணித்துப் போன போராளிகளின் குடும்பங்கள் நாளாந்த உணவுக்காகப் போராட வேண்டிய சூழ்நிலை இன்றும் உள்ளது, இயக்கத் தலைமையோ தங்களையும் தங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொண்டதுடன் வழங்களையும் சுருட்டிக் கொண்டதே வரலாறு, இதில் சற்று வித்தியாசமாக விடுதலைப் புலிகள் தாங்களும் அழிந்து தம்மைச் சார்ந்த சமூகத்தையும் அழித்துச் சென்றது.

பாரிஸில் மாநாடு நடத்தும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மக்களுக்காக இது வரை செய்த நல்ல காரியம் எதுவும் இல்லை, இயக்கச் சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து கொண்ட சுரேஸ் முதல் வரதர் வரை தங்களது சட்டைப் பைகளை நிரப்பிக் கொண்டார்களே தவிர மக்களின் நலனுக்காக எதுவுமே செய்யவில்லை.

வடக்கு கிழக்கில் இருந்து இந்திய இராணுவம் பின்வாங்கிச் சென்ற போது அவர்களின் பின்னால் ஓடிய வரதராஜப்பெருமாள் வட இந்தியாவில் சொத்துக்களை வாங்கி மனைவி, பிள்ளைகளுடன் சுகபோகம் அனுபவித்தார், இவர் சார்ந்த இயக்கத்தின் இலட்சியத்துக்காகப் போராடிய போராளிகள் விடுதலைப் புலிகளால் துரோகிகளாக்கப்பட்டு தெருத் தெருவாகச் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்தகனாக வாழ்ந்த வரதருக்கு இன்று எதற்காக மீண்டும் இயக்கப் புனரமைப்பு.

சந்தற்பவாத தலைமைத்துவம் நடாத்தும் நாடகங்களுக்கு முகம் கொடுக்காமலும், இன்னும் இன்னும் எமது இனத்தை அழிவு பாதைக்குக் கொண்டு செல்ல வரதராஜப்பெருமாள் போன்றோர் எடுக்கும் முயற்சிக்கு விலை போகாமலும் புலம் பெயர்ந்த சமூகம் இருப்பதே எஞ்சியுள்ள தமிழினத்தைப் பாதுக்காக்கச் சிறந்த வழியாகும்.

வியாழன், 14 அக்டோபர், 2010

சிலியின் மெய் சிலிப்பு!

சிலி நாட்டின் நிலக் கீழ் கனிமச் சுரங்கத்தில் 69 நாட்களாக சிக்கித் தவித்த 33 பேரை இலாவகமாக துளை குழாய் உறை மூலம் வெளியே கொண்டு வந்து உலகுக்கு மீள் அவதாரம் கொடுத்தது சிலி அரசாங்கம்.

2010.08.10 ஆம் நாள் 700 மீட்டருக்கும் ஆளமான சுரங்கத்தினுள் கனிமத் தொழிலாளர்கள் 33 பேர் அடைபட்டுக் கொண்டிருந்த போது அவர்களை வெளியே கொண்டு வர அந் நாட்டு அதிபர் செபஸ்டின் பினேரா அரும்பாடு பட்டார், சிறு சிறு துளைகள் மூலம் 17 ஆம் நாள் சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் ஆரோக்கிய தகவல் கிடைத்ததும் வெளியே கொண்டு வர தொடர் முயற்சியில் இறங்கினார் அதிபர் செபஸ்டின்.

2010.10.13 ஆம் திகதி சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, துளை குழாய் உறை மூலம் முதலாவதாக சுரங்கத் தொழிலாளர் ஃபிளோரன்சியா அவலோஸ் வெளியே கொண்டு வரப்பட, நேடியாகவே ஸ்தலத்துக்கு வந்து வெளியே கொண்டு வரப்பட்ட தொழிலாளரைக் கட்டியணைத்து ஆரத்தழுவி தனது சந்தோசத்தை வெளிக்காட்டினார் அதிபர். சின்னஞ் சிறிய நாடான சிலி தனது நாட்டு குடி மக்களை கண்ணியமாக கவனித்து வருவது சிறப்பு மிக்கதாகும்.

இலங்கையைப் போன்ற நாட்டில் இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்திருப்பின் விடயம் வெளியே கசிவதற்கு முன்பாகவே உள்ளே சிக்கிய அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள், அல்லது அழிக்கப்பட்டிருப்பார்கள்.

2010.10.14 ஆம் திகதி சிலி நாட்டு நேரம் 20.15 மணி வரை 29 பேர் எந்தவித இடையூறுமின்றி வெளியே கொண்டு வரப்பட்டு உடல் ஆரோக்கியத்துக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். முப்பதாம் தொழிலாளி இரவு மணி 08.40 க்கு வெளியே கொண்டு வரப்பட்டார், வெளியே கொண்டு வரப்படும் நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது, இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு பல்லாயிரம் மக்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தி வருவதுடன், அதிபர் செபஸ்டிருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சிலி நாட்டு அதிபர் செபஸ்டின் தனது குடிமக்கள் மீது வைத்திருக்கும் அன்பைப் போன்று இலங்கையிலும் ஏற்படுமா? தமிழ் மக்கள் மீது ஜனாதிபதி கருணை காட்டுவாரா!

2010.10.14 சர்வதேச நேரம் அதிகாலை 02.05 மணிக்கு உள்ளூர் நேரம் இரவு மணி 21.05 க்கு 31 வது தொழிலாளி வெளியே கொண்டு வரப்பட்டார். உள்ளூர் நேரம் 21.56 மணிக்கு இறுதியாக இருந்த 33 வது சுரங்கத் தொழிலாளியான லுஸ் உர்ஷாவும் வெளிக் கொணரப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.



















சனி, 2 அக்டோபர், 2010

இலங்கை அரச இலக்கிய விருதுகள்.

2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச இலக்கிய விருதுகள் மும்மொழிகளையும் சேர்ந்த 35 நூல்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் வைத்து 2010.09.30 ஆம் திகதி வழங்கப்பட்டன, இவ்விருதுகளை 11 தமிழ்மொழி நூல்களும், 18 சிங்கள மொழி நூல்களும், 06 ஆங்கில மொழி நூல்களும் பெற்றுக் கொள்ள நீண்ட காலமாகப் இலக்கியத் துறைக்கு பங்களிப்புச் செய்த கலாபூஷணம் ஏ. முஹம்மது சமீம், பேராசிரியர் டப்ளியு.எஸ். கருணாதிலக்க மற்றும் கலாநிதி லக்ஷ்மி டி சில்வா ஆகிய மூவருக்கும் “சாஹித்தியரத்ன” விருதுகள் வழங்கப்பட்டன.

2009 ஆம் ஆண்டு வெளியீடு செய்யப்பட்ட 1332 நூல்களில் மும்மொழிகளையும் சேர்ந்த 77 நூல்கள் அரச இலக்கிய விருதுக்காக சிபாரிசு செய்யப்பட்டிருந்தும், 35 நூல்களே அரச இலக்கிய விருதுகளை பெற்றுக் கொள்ள தகுதி பெற்றன.

தமிழ் மொழியில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான விருதை ஒ.கே. குணநாதன் எழுதிய "குறும்புக்கார ஆமையார்", சிறந்த சிறுவர் மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான விருதை சரோஜினி அருணாசலம் எழுதிய "என்றும் உங்கள்", சிறந்த நாடக இலக்கியத்திற்கான விருதை கலையார்வன் எழுதிய "கூத்துக்கள் ஐந்து" போன்ற நூல்கள் பெற்றுக் கொண்டன.

மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான விருதை, மடுல்கிரியே விஜேரத்ன எழுதிய "தீச்சுடர்", திக்குவல்லை கமால் எழுதிய "தொடரும் உறவுகள்", கெக்கிராவ சுலைஹா எழுதிய "பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும்", ஆய்வு இலக்கியத்திற்கான விருதை கலாநிதி எஸ். ஜெபநேசன் எழுதிய “இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன்”, கவிதை இலக்கியத்திற்கான விருதை மு.பொ. எழுதிய "கவிதையில் துடிக்கும் காலம்" போன்ற நூல்களும் பெற்றுக்கொண்டன.

அறிவியல் இலக்கியத்திற்கான விருதை ச. அருளானந்தம் எழுதிய "அற்புதமான வானம்", சிறுகதை இலக்கியத்திற்கான விருதை சுதாராஜ் எழுதிய "மனைவி மகாத்மியம்", சிறந்த நாவல் இலக்கியத்திற்கான விருதை நீ.பி. அருளானந்தம் எழுதிய "துயரம் சுமப்பவர்கள்" போன்ற நூல்களும் பெற்றுக்கொண்டன.

விருதுக்குத் தகுதியான நூல்களைப் படைத்த ஆசான்களுக்கு களத்துமேட்டின் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

புதன், 29 செப்டம்பர், 2010

கிழக்கில் முஸ்லிம் ஆயுததாரிகளின் ஆயுதக் களைவு?

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்திய அமைதி காக்கும் படையும் அதனோடு இணைந்து செயற்பட்டு வந்த ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, ஈ.என்.டி.எல்.எவ் போன்ற அமைப்புக்களும், விடுதலைப் புலிகள் பிரேமதாஸ உடன்படிக்கையைத் தொடர்ந்து பின்வாங்கினர்.

பின்வாங்கிய மேற்படி இயக்கங்கள் தங்களின் கைவசமிருந்த ஆயுதங்களை குறைந்த விலையில் முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டு இந்தியாவுக்குத் தப்பி ஓடினர், இந்த ஆயுதங்களைக் கையில் எடுத்த முஸ்லிம்களின் ஆயுதப் பாவனையாளர்கள் கிழக்கில் பிட்டும் தேங்காய்ப்பூவுமென வாழ்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் மீது கொடுஞ் செயல்கள் செய்ய முனைந்தனர்.

அதன் விளைவே 1990 ஆம் ஆண்டு கால நடுப் பகுதியில் ஸ்ரீலங்கா அரசு விடுதலைப் புலிகள் உடைவை அடுத்து வீச்சம் கொண்ட முஸ்லிம் ஆயுததாரிகள் ஸ்ரீலங்கா அரச படைகளின் துணையுடன் அருகிலுள்ள தமிழர்களின் கிராமங்களின் மீது தாக்குதலை மேற்கொண்டு தமிழர்களை அழித்ததுடன், சொத்துக்களையும் அபகரித்தனர், இதில் எஞ்சிய தமிழர்கள் உடுத்த உடையுடன் அகதிகளாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த சம்பவம் கிழக்கில் பரவலாக நடைபெற்றது, இதனை உலகம் அறிந்தும் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது எனும் பெறுபேற்றைப் பெற்றுக் கொடுக்க இன்று வரை எதுவித விசாரணைகளும் இடம்பெறவில்லை என்பது கசப்பான உண்மை.

இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட இயக்கங்களின் ஆயுத விற்பனையைப் போல், விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து வந்த கருணா அணி, பிள்ளையான அணி போன்றோரும் ஆயுத விற்பனையை முஸ்லிம்களுக்கு செய்துள்ளார்களென ஊடகச் செய்திகள் அண்மையில் தெரிவித்திருந்தன.

கிழக்கில் காத்தான்குடி முஸ்லிம் ஆயுததாரிகளால் அருகிலுள்ள ஆரையம்பதி தமிழ் கிராமம், மருதமுனை முஸ்லிம் ஆயுததாரிகளால் நீலாவணை தமிழ் கிராமம், கல்முனை முஸ்லிம் ஆயுததாரிகளினால் பாண்டிருப்பு தமிழ்க் கிராமம், நற்பிட்டிமுனை முஸ்லிம் ஆயுததாரிகளினால் சேனைக்குடியிருப்பு தமிழ் கிராமம், சவளக்கடை முஸ்லிம் ஆயுததாரிகளினால் சொறிக்கல்முனை தமிழ்க்கிராமம், சாய்ந்தமருது முஸ்லிம் ஆயுததாரிகளினால் காரைதீவு தமிழ் கிராமம், சம்மாந்துறை முஸ்லிம் ஆயுததாரிகளினால் வீரமுனை தமிழ் கிராமம், ஒலுவில் முஸ்லிம் ஆயுததாரிகளினால் அட்டப்பள்ளம், திராய்க்கேணி தமிழ்க் கிராமம், அக்கரைப்பற்று முஸ்லிம் ஆயுததாரிகளினால் ஆலயடிவேம்பு தமிழ்க் கிராமம், இறக்காமம் முஸ்லிம் ஆயுததாரிகளினால் அம்பாறை தமிழ்க் கிராமம், பொத்துவில் முஸ்லிம் ஆயுததாரிகளினால் இன்ஸ்பெக்டர் ஏற்றம், பொத்துவில் தமிழ்மக்கள் போன்று இன்னும் பல முஸ்லிம் ஆயுததாரிகளினால் பல தமிழ்க் கிராமங்கள் தொடர்ச்சியாகப் பாதிப்படைந்து வந்திருக்கிறார்கள், முஸ்லிம் ஆயுததாரிகளின் சட்ட விரோத ஆயுதப் பாவைனையால் முஸ்லிம் சமூகத்தினுள்ளேயும் சொந்தப் பகையின் காரணமான ஆட்கொலைகளும், கடத்தல்களும் அதிகரித்து வருகின்றன.

இவ் அத்துமீறிய சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் பகுதிகளில் சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருப்போர், அவற்றை எதிர்வரும் 2010.09.30 ஆம் திகதிக்கு முன்னர் தங்களின் பகுதியிலுள்ள பள்ளிவாயல்களில் ஒப்படைக்குமாறு கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2010.09.24 ஆம் திகதி கல்முனை பிரதேச பள்ளிவாயல் மௌலவிகளுடன் பேசிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், 30ஆம் திகதிக்கு முன்னர் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுவோர் குற்றம் சுமத்தப்பட்டு 20 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு உள்ளாவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

காவற்துறையின் கல்முனைப் பகுதியினர் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையினைப் போன்று கிழக்கின் ஏனைய பாகங்களிலும் இருக்கும் முஸ்லிம் ஆயுததாரிகளின் ஆயுதங்களும் களையப்பட வேண்டும், இதனால் முஸ்லிம், தமிழ் மக்கள் மீண்டும் ஐக்கியமாக வாழ வழி வகுக்கலாம்.

இவ் ஆயுததாரிகளினால் தமிழ் மக்கள் மட்டுமல்லாது, முஸ்லிம்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர், இச் சம்பவங்கள் பீதியின் நிமித்தம் வெளிவருவதில்லை, ஆகவே காவற்துறை வாயளவில் மாத்திரம் ஆயுதக் களைவு பற்றி கருத்துரைப்பதுடன், நின்று விடாமல், தொடர் நடவடிக்கையை இறுக்கமாக்குவதனால் ஆயுதங்களை நிச்சயம் களையலாம்.

சனி, 25 செப்டம்பர், 2010

அடைமழையும், மீள்குடியேற்ற மக்களும்!

இலங்கையின் சகல பாகங்களிலும் மழை பெய்கின்றது, இந்த மழையினால் வன்னிப் பிரதேசங்களில் மீள்குடியேறிய குடிசை, கூடாரங்களில் வாழும் மக்கள் சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள். மீளக்குடியேறிய இம் மக்களுக்கு அரசாங்கம் இன்னும் நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கவில்லை.

தொடராகப் பெய்து வரும் மழையினால் குடிசை, கூடாரங்கள் சேதமடைந்துள்ளதுடன் மழை நீரும் உட்புகுந்துள்ளதால் 33 வருடங்களின் பின்னர் வவுனியாவின் மீள்குடியேறியுள்ள வீமன்கல் கிராமம் அடங்கலாக குடாகச்சகொடி, பாவற்குளம், ரன்கெட்கம போன்ற பல மீள்குடியேற்றக் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று வன்னியில் மீள்குடியேற்றம் எனும் போர்வையில் அனுப்பி வைக்கப்பட்ட மக்களும் பல இன்னல்களைத் தொடர்ந்து அனுபவித்து வருகின்றார்கள், ஆகவே அடைமழை தொடங்குவதற்கு முன்னர் இம் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்து முடிக்க வேண்டும்.

தென் பகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வரும் அரசாங்கம், மழைக்குள் சிக்கியுள்ள தமிழ் மக்களின் இன்றைய அவல நிலையை கவனத்தில் எடுத்து உடனடியாக நிவாரணத்துடன் கூடிய உதவிகளைச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

அழிவுக்கு வழி வகுத்த எழிலனும், தூக்கிப் பிடிக்கும் ஊடகங்களும்!

உலகிலே கெரில்லா தாக்குதலுக்கு தனித்துவம் வாய்ந்ததென கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பூண்டோடு சரிய காரணமாக இருந்தவருள் முதன்மையானவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் என்றால் அதில் மிகையில்லை.

சிங்கள மக்களின் விவசாயப் பாவனைக்குத் தேவையான நீரை செல்லவிடாமல் மாவிலாறு அணைக்கட்டை பூட்டி நீரைத் தடுத்து நிறுத்தி சிங்களப் பெரும்பான்மை மக்களிடம், அத்தியாவசியத் தேவையான தண்ணீரைத் தடுத்து நிறுத்திய தமிழர்கள் மனிதாபிமானமற்றவர்கள் எனும் அவப் பெயரை அண்மைக் காலத்தில் ஏற்படுத்தியவர் எழிலன்.

இவரின் முறைகேடான நடவடிக்கையைத் தொடர்ந்தே தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மூதூர், சம்பூர், புலிபாய்ந்தகல், கஞ்சிகுடியாறு, குடும்பிமலை.... போன்றன தொடராக சிங்களப் படையினர் வசமாகி இறுதியாக மன்னாரின் சகல பகுதிகளையும் இழந்து பூநகரி அடங்கலாக விடுதலைப் புலிகளின் இதயப் பகுதியான வன்னியும் பறிபோனது.

எதிர்காலத்தைச் சரியாக எடை போடாது குறுகிய நோக்கத்துடன் செயற்பட்டதாலே மாவிலாறில் தொடங்கிய அழிவு முள்ளிவாய்க்காலில் சென்று முடிந்தது, இந்த அழிவு யுத்தத்தில் சொல்லொணா துன்பங்களை, அவலங்களை எமது இனம் அனுபவித்து விட்டது.

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சரணடைந்த எழிலனை மறைமுகமான இடத்தில் படையினர் தடுத்து வைத்துள்ளதாக எழிலனின் மனைவி ஆனந்தி சசிகரன் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இந்த அழிவு யுத்தம் பல அறிவுஜீவிகளை கொன்றொழித்து விட்டது, தமிழர்களின் எதிர்காலத்தை திட்டமிட்டு நகர்த்தக் கூடிய எத்தனையோ புத்திமான்கள் இல்லாமல் போய் விட்டார்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினுள்ளும் அழிவு யுத்தத்தை விரும்பாத பல உறுப்பினர்கள் மௌனியாக இருந்துள்ளார்கள், இவ்வாறு மக்களின் நலன் கருதி வாழ்ந்த மக்கள் பலர் இருக்க அழிவுக்காக செயற்பட்ட எழிலனை இப்போது ஊடகங்கள் தூக்கிப் பிடிப்பதன் மர்மம் என்ன!

வியாழன், 23 செப்டம்பர், 2010

ஐந்தாம் தரம் புலமைப் பரிசில் பரீட்சையும், மாணவக் குழந்தைகளும்!

இலங்கை கல்வி முறையில் ஐந்தாம் தர மாணாக்கர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முறையும் ஒன்றாகும், இத் திட்டம் பன்னெடுங் காலமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாடளாவிய ரீதியில் பரீட்சை நடாத்தப்பட்டு அப் பரீட்சையின் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் இலங்கையின் முதற் தர பாடசாலைகளில் கல்வி கற்க அனுமதியும், அத்துடன் ஏழை மாணவர்களுக்கு மாதாந்த கல்வி ஊக்குவிப்புப் பணமும் இலங்கை அரசாங்க கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டு வருகின்றது.

ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரினதும் பெற்றோர்கள் தனது குழந்தையும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து விட வேண்டுமென்பதை இலட்சியமாகக் கொண்டு செயற்படுவதை அண்மைக் காலமாக அவதானிக்க முடிகின்றது.

2010.08.22 ஆம் திகதி நாடளாவ 3500 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்காக இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்த 5300 மாணவர்கள் அடங்கலாக 3,14,000 மாணவர்கள் தோற்றினர்.

தமிழ் மொழி மூலமாகத் தோற்றிய மாணவர்களுள் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்தைச் சேர்ந்த தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலவன் சுபதா 193 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் திகழ்கின்றார், கண்டி கல்வி வலயம், கலஹா இராமகிருஸ்ண மத்திய கல்லூரி மாணவன் என்.எஸ்.என்.ஸபீர் 192 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும், மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஜெனிஸ் ஜீட் விதுசன் பிஃகுராடோ 190 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சாதனை படைத்த மாணவக் குழந்தைகளை "களத்துமேடு" வாழ்த்துவதில் பெருமை கொள்கின்றது.

புதன், 22 செப்டம்பர், 2010

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்!

உலகளாவிய ரீதியில் வீதி விபத்துக்கள் குறைந்து கொண்டு வருகின்றன, ஆனால் ஆசிய நாட்டில் வீதி விபத்துக்கள் குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை, அதிலும் இலங்கையில் இப்போது வீதி விபத்துக்கள் அடிக்கடி இடம்பெற்றுக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல.

இவ் வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கு பல காரணங்களை எடுத்துக் கூறலாம், அவற்றில் பிரதானமானது வீதிப் பிரயாண ஒழுங்குக் கட்டுப்பாட்டை ஏற்று நடக்காமையாகும்.

சாரதிப் பயிற்சியை முறைப்படி பெற்றுக் கொள்ளாமல் ஓட்டுநர் சான்றிதழ் பெற்றவர்களினால் எட்டப்படும் வீதி விபத்துக்களே பலவென ஆய்வுகள் கூறுகின்றன, அதிலும் இலஞ்சம் கொடுத்து ஓட்டுநர் சான்றிதழ் பெற்று வாகனம் ஓட்டுபவர்களினாலேயே அதிக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

வேகமாக வாகனம் ஓட்டுதலினால் ஏற்படும் விளைவுகளை ஓட்டுநர்கள் சிந்தித்துப் பார்க்கத் தவறுவதும் வீதி விபத்துக்குக் காரணமாகும். இலங்கையில் வாகனம் ஓடக்கூடிய அதி கூடிய வேகம் என்னவெனும் சைகைப் பலகை அனேகமான வீதிகளில் காணப்படாமையும் ஒரு குறையாகும்.

வீதிச் சட்ட திட்டங்களை தவறாகப் பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு அரசாங்கம் கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலம் விபத்துக்களை பெருமளவு குறைக்கலாம்.

இவை அனைத்துக்கும் மேலாக பாதசாரிகள் தெருவை அவதானித்தும், வீதிக் கட்டுப்பாட்டுச் சட்ட திட்டங்களை மதித்து நடந்தால் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிக்கலாம்.

பின் இணைப்பு:

நாட்டின் பல பாகங்களிலும் கடந்த ஒருவாரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளினால் 15 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இலங்கையில் அதிகரித்த வாகன எண்ணிக்கையும் வீதி விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத சாரதிகளுமே விபத்துகளுக்குக் காரணமெனக் குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது சாரதிகளில் பலர் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்துவதே விபத்துகள் அதிகரிப்பதற்குக் காரணமெனக் கூறப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை நகர அபிவிருத்தி அமைச்சரும் அரச தரப்பு பிரதம கொரடாவுமான தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் அளித்த வாகன விபத்துகள் தொடர்பான விளக்கத்திலும் இதனை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற 33,339 வாகன விபத்துகளில் 2,065 விபத்துகள் மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற 32,458 வாகன விபத்துகளில் 2,176 விபத்துகள் மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற 30,420 வாகன விபத்துகளில் 2,157 விபத்துகள் மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. 20090930 ஆம் திகதி வரை இடம்பெற்ற 23,903 விபத்துகளில் 1,661 விபத்துகள் மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்துகளில் 1,205 விபத்துகள் சாரதிகள் மதுபோதையில் இருந்தமையால் ஏற்பட்டுள்ளன. அதேபோல் 2007 இல் 1,461 விபத்துகளும் 2008 இல் 1,522 விபத்துகளும் 20090930 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,047 விபத்துகளும் சாரதிகள் மதுபோதையில் இருந்தமையால் ஏற்பட்டதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சர் குணவர்தனவின் கூற்றுப்படி கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற 1,20,120 வாகன விபத்துகளில் 8,059 விபத்துகள் மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. இவற்றில் சாரதிகளின் மதுபாவனையால் 5,235 விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் நாள் ஒன்றுக்கு 150 வீதி விபத்துகள் இடம்பெறுகின்றன. இவ்விபத்துகளினால் ஒரு நாளைக்கு 6 வீதி விபத்து மரணங்கள் நிகழ்வதுடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர். 2 கோடியே 11 இலட்சம் மக்கள் தொகை கொண்ட எமது நாட்டில் இத் தொகை மிக அதிகமென்றே கூற வேண்டும். இலங்கையில் வாகன விபத்துக்கள் அதிகரிப்பதற்கு வாகன எண்ணிக்கை அதிகரிப்பு, விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத சாரதிகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் இடம்பெறும் ஊழல் மோசடிகள், வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கான சரியான திட்டமிடல் இன்மைபோன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கையில் உள்ள சாரதிகளில் இரண்டு இலட்சம் பேருக்குச் சாரதி ஆசனத்திற்குப் பின்னால் நிற்கக் கூடத் தகுதியில்லையெனப் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஒரு தடவை பகிரங்கமாகவே கூறிச் சாரதிகளின் லட்சணத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது சாரதிகள் பலர் மதுபோதையிலேயே வாகனங்களைச் செலுத்தி வருவது அமைச்சர் குணவர்த்தனவின் பதில் மூலம் வெளிப்பட்டுள்ளது.

மது அருந்திய பின் வாகனம் செலுத்திய சாரதிகளினால் 2006 ஆம் ஆண்டு 99 பேர் உயிரிழந்ததுடன் 183 பேர் ஊனமுற்றனர். 2007 ஆம் ஆண்டு 110 பேர் உயிரிழந்ததுடன் 299 பேர் ஊனமுற்றனர். 2008 ஆம் ஆண்டு 153 பேர் உயிரிழந்ததுடன் 308 பேர் ஊனமுற்றனர். 2009 ஆம் ஆண்டு (20090930 வரை) 79 பேர் உயிரிழந்ததுடன் 368 பேர் ஊனமுற்றனர். அரசாங்கம் "மதுவுக்கு முற்றுப்புள்ளி%27 (மத்தட்டதித்த) என்ற திட்டத்தை முனைப்புடன் முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே மது போதையால் ஏற்படும் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

"மதுவுக்கு முற்றுப்புள்ளி%27 திட்டத்தினால் பெரும் பயன் ஏற்பட்டுள்ளதாக அரசு கூறி வருகின்ற நிலையிலேயே இந்தளவு தொகையான மக்கள் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளினால் பலியெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் மதுவுக்கு முற்றுப்புள்ளி எந்தளவுக்கு வெற்றியடைந்துள்ளது என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகின்றது. எனவே அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் முதலில் மது அருந்தி விட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய வேண்டும். அத்துடன் சிறைத்தண்டனையும் பெருமளவான தண்டப்பணமும் விதிக்கப்படவேண்டும். இவ்வாறான கடும் நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில் விபத்துகளும் உயிரிழப்புகளும் இலங்கையில் அன்றாட நிகழ்வுகளாகி விடும்.

நன்றி. தினக்குரல்

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

விநாயகர் கரைப்புக்கான தத்துவ விளக்கம் என்ன, தெரிந்தவர்கள் கூறுங்கள்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமாகச் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து வருகின்றார்கள் இந்து சமயத்தவர்கள். இந்தியாவில் இவ்வளவு காலமும் இருந்து வந்த பிள்ளையாரைக் கரைக்கும் பாரம்பரியம் இப்போது ஐரோப்பாவுக்கும் தாவி விட்டது, இந்த வருடம் முதன் முதலாக பிரித்தானியாவின் வோல்த்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தினால் 2010.09.19 ஆம் திகதியன்று பெரிய விநாயகர் சிலை செய்யப்பட்டு நீர் நிலைக்குக் கொண்டு வரப்பட்டு நீரில் கரைக்கப்பட்டது, இதில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர்.

விநாயகர் சிலையைக் கடலில் கரைப்பதற்குரிய காரணத்தை இந்து சமயம் எடுத்துக் கூறுகின்றது, ஆனால் வோல்த்தம்ஸ்ரோ விநாயகர் சிலை கரைக்கக் கொண்டு செல்லப்பட்ட போது, அச் சிலையைக் கரைப்பதற்கான முழுப் பொறுப்பையும் கொண்ட அர்ச்சகர், களிமண்ணும், நீரும் கலந்து செய்யப்பட்ட இந்த விநாயகர் சிலையைக் கரைப்பதற்கான தத்துவமானது நீரும், மண்ணும் இந்த உலகத்தில் அழிக்க முடியாதது என்பதால் விநாயகர் சிலையைக் கரைக்கின்றோம் என கருத்துரைத்தார்.

விநாயகர் கரைப்புக்கான தத்துவ விளக்கத்தினை மக்களுடன் சரியாகப் பகிர்ந்து கொள்ளத் தெரியாமல் அர்ச்சகர் இருந்திருக்கலாம், அவரின் கருத்தில் அனேகமானோருக்கு உடன்பாடில்லை என்பதால் இது பற்றிய விடயங்கள் தெரிந்தவர்கள் விநாயகர் சிலை கரைப்புக்கான காரணத்தினை அறியத் தாருங்கள்.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----