தொலைக்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொலைக்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

"நீயா நானா" கோபிநாத்தும் தமிங்கில ஆதிக்கமும்!

இந்திய தொலைக்காட்சிகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழ் பேசும் மக்களிடையே மிகவும் நெருங்கிய உறைவைப் பேணி வருகின்றது என்றால் அதில் மிகையில்லை, அந்த தொலைக்காட்சியில் இடம்பெறும் "நீயா நானா", "நடந்தது என்ன" போன்ற நிகழ்ச்சிகள் பிரபல்யமானவை, இவற்றை திரு.சந்திரன் கோபிநாத் மிகவும் சிறப்பாகத் தொகுத்து வழங்கின்றார்.

திங்கள், 13 செப்டம்பர், 2010

புலம்பெயர் தொலைக்காட்சி தொகுப்பாளினியின் கவனத்துக்கு!

புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் தனித்துவ அடையாளத்தை நிறுத்திக் கொள்வதற்கென தமிழ் தொலைக்காட்சிகள், வானொலிகளை அமைத்து செயற்படுத்தி வருகின்றனர்.

கட்டண மற்றும் இலவச சேவையென தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்கின்றன, இத் தொலைக்காட்சிகளில் சில கட்டண அட்டைகளின் மூலம் வாடிக்கையாளர்களை கைவசம் வைத்திருக்கின்றன, சில நூறு சத விகித இலவச சேவையாகவும் செயற்படுகின்றன, இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தொலைக்காட்சி இரண்டும் கெட்டான் நிலையில் இலவசம் எனக் கூறிக் கொண்டு பணம் தாருங்கள் எனும் யாசிப்பு மூலம் தொலைக்காட்சி நடாத்துகின்றார்கள், ஆனால் இவை அனைத்துக்கும் மேலாக விளம்பரக் கட்டணங்களின் மூலம் பெருமளவு யூரோக்களைப் திரட்டி ஒளிபரப்பு வியாபாரம் செய்து வருகின்றன இத் தொலைக்காட்சிகள்.

இதில் இலவசமெனக் கூறிக் கொள்ளும் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டுப் பிரிவு அவதானமில்லாமல் இருப்பதனால் செய்தி வேளைகளில் பல குறைபாடுகள் தினமும் முகம் காட்டியே செல்கின்றன.

காட்டப்படும் படத்துக்குச் சம்பந்தமில்லாமல் செய்தி ஒளிபரப்பப்படுவதுடன், படத்துக்குக் கீழே சம்பந்தமில்லாத வசனமும் பதிவாகின்றது, இவை ஏற்படக் காரணம் தயாரிப்புப் பிரிவு சிலவேளை இலங்கைத் தமிழரைச் சாராதவர்களாக இருக்கக் கூடும்.

சங்கீத பாரம்பரியத்தில் வந்தவர் தானென தன்னைத் தானே புகழ்ந்து அடிக்கடி பாடல்கள் பாடிக் கொள்ளும் நிகழ்ச்சித் தொகுப்பாளினி செய்தி வேளைகளில் தன்னை பிபிஸி ஆனந்தி என நினைத்து செய்து வாசிப்பது கொடுமை. இவர் ஆனந்தியிடம் கற்றுக் கொள்ள அதிகம் உள்ளன, விரைவாக செய்தியை வாசித்தால் மட்டும் ஆனந்தியாக முடியுமா, நிதானித்து வசனங்களைப் பிரிக்க வேண்டிய இடத்தில் பிரித்து, சொற்களைச் சேர்க்க வேண்டிய இடங்களில் சேர்த்து செய்தி வாசித்தலே பார்வையாளர்களுக்கு புரியக் கூடியதாக அமையும்.

"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தானாம் அனுமான்" நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கூடிய கவனம் செலுத்தினால் நல்ல நிகழ்ச்சிகளைப் படைக்கலாம்.

ஞாயிறு, 28 ஜூன், 2009

அடுத்த பிரபுதேவாவும் பிறேம் கோபாலும் !

இந்தியாவின் தமிழக தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் ரீவியில் வாராந்தம் ஒளிபரப்பாகி வரும் "அமுல் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" நடன நிகழ்வு இளையோரைக் கவந்த நிகழ்ச்சியாக உள்ளது, பல இளைஞர்கள், யுவதிகள் இந் நிகழ்வுக்காக அதிக நேரத்தினைச் செலவு செய்து ஒத்திகை பார்த்து மேடையேறி தங்களது திறமைகளை வெளிக்காட்டியும் நடுவர்களின் தீர்ப்பில் தெரிவாகாமல் கவலையுடன் வெளியேறுவது போட்டியாளர்களை மாத்திரமின்றி பார்வையாளர்களையும் கலங்க வைக்கின்றது.

ஒருவர் இறந்து விட்டால் அல்லது ஓய்வு பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே இன்னுமொருவரைத் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும், ஆனால் தமிழக நடன கலைஞரும், நடிகருமான சுந்தரம் பிரபுதேவாவுக்கு அப்படியேதும் நிகழ்ந்ததாக தெரியவில்லை, எதற்காக இந்த தேர்வு நிகழ்வு என்று விஜய் ரீவிக்கும், அதனை நடாத்துபவர்களுக்குமே நன்கு தெரியும். விறுவிறுப்பான நடனங்களை வருங்கால பிரபுதேவாக்களும், பிரபுதேவிக்களும் அழகாக அரங்கேற்றி வருகின்றனர்.

எப்படி இருப்பினும் இலங்கையர்கள் சிலருக்கும் இந் நிகழ்ச்சி களம் அமைத்துக் கொடுத்துள்ளது, அதை சாதகமாக பயன்படுத்த நமது இளையோர்கள் முயன்று வருவது பாராட்டத்தக்கது. அந்த வரிசையில் அடுத்த பிரபுதேவா எனும் மகுடத்தை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் பிறேம் கோபால் எனும் இளவல் அருமையாக நடனத்தை நடாத்தி நடுவர்களினதும், சபையோரினதும் மற்றும் பார்வையாளர்களினதும் பாராட்டினைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இலங்கையில் சிங்கள அரசாங்கத்தினாலும், அதன் படை பலத்தினாலும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அண்மையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் தத்துரூபமாக பிறேம் கோபால் அவர்தம் குடும்பத்துடன் இணைந்து அரங்கேற்றிக் காட்டினார்.

பிறேம் கோபாலில் குடும்ப நடனம் தமது தாயக இன்னல்களை உலகுக்கு உரத்துக் கூற அருமையான சந்தற்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது, அவர்களும் அதனைத் திறமையாக நடாத்தி சபையோர்களையும், பார்வையாளர்களையும் அத்துடன் நடுவர்களையும் கண் கலங்க வைத்து நல்ல பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டனர்.

பிறேம் கோபால் உணர்ச்சி வசப்பட்டு உணர்வு பூர்வமாக நடாத்திக் காட்டிய நடனத்தின் இறுதியில் சுய விமர்சனமாக கோபால் தன்னைப் பற்றியும் தனது நாடு பற்றியதுமான முகவுரையுடன் தனது பத்தாவது வயதில் குடும்பத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பேரூந்தில் பயணிக்கையில் கண்டியில் வைத்து அப் பேரூந்தை வழி மறித்த இராணுவத்தினரால் அதில் பயணித்த 30 பேரையும் தெருவுக்கு இறக்கி அரை மணித்தியாலத்துக்கும் மேலாக கைகளை உயரத் தூக்கி நிற்குமாறு பணிக்கப்பட்டனர், இதனால் தனக்கு ஏற்பட்ட விரக்தியில் படிமமே இந்த நடனம் என வர்ணனை செய்தார்.

இவருக்கு பத்து வயதாக இருந்ததால் கிளிநொச்சியைக் கண்டியாக நினைத்தாரோ தெரியவில்லை, யாழ்ப்பாணம் - கொழும்பு பாதையில் கண்டி நகரம் இல்லை, கண்டி என்பது இலங்கையின் மத்தியில், மலையகத்தில் இருக்கும் பிரதான நகரமே கண்டியாகும்.

தொலைக்காட்சிகள் நடாத்தும் பிரபல்யமான நிகழ்ச்சிகளில் கருத்துக்கள் தெரிவிக்கும் போது கவனமாக, நேர்மையாக பதிலிறுக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

இறுதியாக இலங்கை வாழ் தமிழர்களுக்காக உதவி செய்யுங்கள் இந்திய மக்களே என அழுதழுது கண்ணீருடன் பிறேம் கோபாலின் தாயும், சகோதரியும் கெஞ்சி மன்றாடிக் கேட்டதுடன் சிறுவர்களின் அசைவும் இறுகிய கல் மனதையும் கரைய வைத்தது.



வியாழன், 11 ஜூன், 2009

தீபம் தொலைக்காட்சி நடுநிலை தவறிய ஊடகம் !

ஐரோப்பாவில் இருந்து பல தொலைக்காட்சிகள் தமிழில் பல சேவைகளை நடாத்தி வருகின்றது, அவற்றில் தீபம் தொலைக்காட்சி பிரித்தானியாவில் இருந்து ஒளி பரப்பினை நடாத்தி வருகின்றது, தீபம் தொலைக்காட்சியானது தனது சேவையைத் தொடங்கி இன்றுடன் பத்து ஆண்டுகளை எட்டுகின்றது எனக்கூறும் தொலைக்காட்சி நிறுவனத்தினர் நேர்மை, பக்கச்சார்பின்மை, எப்போதும் நடுநிலமைச் செய்திகளை மக்களுக்கு கொணர்வது போன்ற மேதாவித்தன அறிவித்தல்களை விடுத்து வருகின்றனர்.

இவர்கள் நடுநிலமை எனக் கூறுவது எது என்பது அனேகமானவர்களுக்குத் தெரியாமல் இருக்கின்றது, ஸ்ரீலங்காவில் நடக்கும் நிகழ்வுகளை அரங்கேற்றுவது ஊடகங்களின் தார்மீகப் பணி, அதிலும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உள் வீட்டு அந்தரங்கங்க விடயங்கள் மட்டும் தான் நடுநிலைச் செய்திகள் அல்ல, மாறாக விடுதலைப் புலிகளின் அசைவுகளில் ஏற்படும் பிழைகளையும் சுட்டிக்காட்டுவது தான் நடுநிலைச் செய்தி, ஆரோக்கியமானதும் கூட, ஆனால் தீபம் தொலைக்காட்சி என்றும் அவ்வாறு நடந்து கொள்ளவில்லையே!

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தீபம் தொலைக்காட்சிக்கு தெரியாமல் போனதற்குக் காரணமென்ன, அல்லது ஏன் போய் வீண் பிரச்சனைகளுக்குள் மாட்டிக் கொள்ள வேண்டுமென தவிர்த்து ஒரு தலைப் பட்ச செய்திகளை மட்டும் பதிவு செய்ததா?

ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழினத்துக்குச் செய்யும் அராஜகம் கொஞ்சநஞ்சமல்ல, அளவுக்கு அதிகமானது தான், ஆனால் அதற்கு எதிர் தரப்பு எனக் கூறப்பட்ட விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகளை ஏன் தீபம் தொலைக்காட்சி பதிவேற்றம் செய்ய மறந்து விட்டது.

ஜனநாயக நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோர்கள் துரோகியாக வர்ணிக்கப்பட்டு கொல்லப்பட்டார்களே, இது பிழையான வாதம் என தீபம் குரல் கொடுக்கத் தவறிவிட்டதே!

வீட்டுக்கு ஒருவர் போராட்டத்துக்கு வரவேண்டும் எனக்கூறி பலவந்தமாக பதின்ம வயதுக்குள்ளானவர்கள் அனைவரையும் ஆயுத முனையில் யுத்த களத்துக்கு அனுப்பி கொன்றதுடன், எஞ்சிய சிலராக ஊனமுற்ற சமுதாயமொன்றை விடுதலைப் புலிகள் பிரசவித்து விட்டு காணாமல் போனார்களே இது தீபம் தொலைக்காட்சிக்குத் தெரியவில்லையா?

வன்னியில் முன்னூறு ஆயிரம் பேருக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை துப்பாக்கி முனையில் தடுத்து வைத்து யுத்தம் நடத்தினார்களே, அந்தவேளை எதிரி பாரிய ஆயுத தளபாடங்களுடன் யுத்தத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றான் மக்களை விடுவியுங்கள் என ஒரு நாளிகையாவது விடுதலைப் புலிகளுக்கு உங்களின் ஊடகத்தின் மூலமாக அறிவித்தல் விடுத்தீர்களா முடியவில்லையே ஏன்?

இன்னும் அதிகம் குறிப்பிடலாம் இனிமேலாவது நடுநிலை தவறிய ஊடகம் தீபம் எனப் பதிவு செய்யுங்கள், அரசியல் ஞானமுள்ள ஊடகவியலாளர் திரு.அனஸ் முகமட் எனும் இளைய அப்துல்லாஹ் கூட தீபம் சார்பாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாரே தவிர விடுதலைப் புலிகளினால் ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் பற்றி குரல் கொடுக்கத் தவறி விட்டாரே !

ஆகவே மொத்தத்தில் தீபம் தொலைக்காட்சி நடுநிலை தவறிய ஊடகமென்பதே நிஜம்.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----