சனி, 23 ஏப்ரல், 2011

ஐநா நிபுணர் குழு அறிக்கையும் கருணாவின் முதலைக் கண்ணீரும்!

ஸ்ரீலங்கா அரசாங்க, படைத்தரப்பு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் மீது நடாத்திய போர்க் குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையின் முன்னோட்டம் கசிந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரச உயர்நிலையாளர்களும், அவர்களை ஒட்டி அரசியற்பிழைப்பு நடத்தும் சிலரும் கதிகலங்கிப் போயுள்ளமை அனைவரும் அறிந்ததே!


மின்சார நாற்காலிக்குப் பயமில்லையென மகிந்த ராஜபக்ஷவும், ஐநா எம்மை ஏற்காவிட்டால் ரஷ்யா, சீனாவின் பக்கம் சார்ந்து விடுவோமென கோத்தபாய ராஜபக்ஷவும், இவ்வறிக்கையானது உண்மைத் தன்மையை அறியாது தயாரிக்கப்பட்டுள்ளதென சிங்களப் பேரினவாதிகளில் பலரும் கூக்குரலிட்டுக் கொண்டே இருக்கின்றனர், இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் விதி விலக்கின்றி படை தரப்பை பாதுகாக்க முயன்றதைச் செய்வோமென அறிக்கை விட்டுள்ளனர்.


நிபுணர் குழு அறிக்கையானது போரில் ஈடுபட்ட இரு தரப்பும் தமிழ் மக்கள் மீது அளவற்ற கொடுமைகளைச் செய்தது என்பதை தெளிவாக்கியுள்ளது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்தவரான கருணா அம்மான் எனப்படும் ஸ்ரீலங்கா அமைச்சரவையில் பிரதி அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளிதரன், ஸ்ரீலங்கா படை தரப்பு வன்னி மக்களுக்குச் செய்த கோரத் தாண்டவத்தினை நன்கு அறிந்திருந்தும் தனது அரசியற் கதிரையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டி முதலைக் கண்ணீர் வடித்திருப்பது வேடிக்கையாக இருக்கின்றது, சிங்களப் புத்திஜீவிகளில் பலர் இவ் அறிக்கையின் உண்மைத் தன்மைகளை அறிந்து கொள்ள வேண்டுமென கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கும் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிழக்கு மாகாண ஆதரவாளர்களைத் திரட்டி ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடாத்த முனைந்து கொண்டிருப்பதாக கூறுவது வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவது போலத் தெரிகின்றது.

படைகளின் அச்சுறுத்தலில் அணி திரட்டப்படும் அப்பாவி கிழக்கு மக்களின் கரங்களில் எதிப்பு கோசங்களை ஏந்த வைத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களின் பேரணி எனக் கூறி, ஊடகங்களுக்கு சாட்சி சொல்ல நினைப்பது கருணாவுக்கு இது புதிதல்ல, விடுதலைப் புலிகளுடன் இருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் துப்பாக்கிக் குழாய் வழியாக மக்களை ஒன்று திரட்டி அரசாங்கத்துக்கு எதிரான சாத்வீகப் போராட்டமென போலியாக மக்களை அடக்கி, ஊடகங்களுக்குக் காட்டுவதில் வெற்றி கண்டவர் கருணா அம்மான், அப்படியானவருக்கு தனது நாற்காலி தொடர வேண்டுமானால் தமிழ் மக்களை வேரோடு சிங்களப் பேரினவாதம் அழித்தாலும் கவலையில்லை என்பது வெளிப்படை.

வன்னி யுத்தத்தில் தமிழ் மக்களை ஸ்ரீலங்கா அரச படை தாக்கி அழிக்கவில்லை எனவும், வைத்தியசாலை ஈறாக அகதிகள் முகாம்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லையெனவும், உலகுக்குப் பொய் கூறி வந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உண்மைத் தன்மையினை அல்.ஜஸீரா தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் தெளிவாக்கியுள்ளார்.

இவ்வளவு கொடுமையும் நடந்து முடிந்து விட்ட பின்பாவது, தமிழர்களை நேர்கண் கொண்டு பார்க்க ஸ்ரீலங்கா அரசாங்கம் தவறுவதை சர்வதேசமே ஏற்றுக் கொண்டுள்ள இன்றைய நிலையில் கருணா உணரத் தவறி அரசாங்கத்துக்காக முதலைக் கண்ணீர் வடிப்பது வேதனையாகவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----