இலங்கை கல்வி முறையில் ஐந்தாம் தர மாணாக்கர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முறையும் ஒன்றாகும், இத் திட்டம் பன்னெடுங் காலமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாடளாவிய ரீதியில் பரீட்சை நடாத்தப்பட்டு அப் பரீட்சையின் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் இலங்கையின் முதற் தர பாடசாலைகளில் கல்வி கற்க அனுமதியும், அத்துடன் ஏழை மாணவர்களுக்கு மாதாந்த கல்வி ஊக்குவிப்புப் பணமும் இலங்கை அரசாங்க கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டு வருகின்றது.ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரினதும் பெற்றோர்கள் தனது குழந்தையும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து விட வேண்டுமென்பதை இலட்சியமாகக் கொண்டு செயற்படுவதை அண்மைக் காலமாக அவதானிக்க முடிகின்றது.
2010.08.22 ஆம் திகதி நாடளாவ 3500 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்காக இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்த 5300 மாணவர்கள் அடங்கலாக 3,14,000 மாணவர்கள் தோற்றினர்.
தமிழ் மொழி மூலமாகத் தோற்றிய மாணவர்களுள் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்தைச் சேர்ந்த தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலவன் சுபதா 193 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் திகழ்கின்றார், கண்டி கல்வி வலயம், கலஹா இராமகிருஸ்ண மத்திய கல்லூரி மாணவன் என்.எஸ்.என்.ஸபீர் 192 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும், மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஜெனிஸ் ஜீட் விதுசன் பிஃகுராடோ 190 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவக் குழந்தைகளை "களத்துமேடு" வாழ்த்துவதில் பெருமை கொள்கின்றது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.