
ஸ்ரீலங்காவுக்கு எதிராக அவுஸ்ரேலியா கிரிகெட் அணியினர் நேற்று மேற்கிந்தியதீவு பிரிஜ்ரவுன் மைதானத்தில் களமிறங்கி விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ தேசியக் கொடியுடன் ஒரு இளைஞன் வலம் வந்தார்.
உலகக் கிண்ண கிரிகெட் மைதானத்தில் சர்வதேச விளையாட்டு இரசிகர்கள் ஸ்ரீலங்கா அணியினரின் பந்து வீச்சு மற்றும் களத் தடுப்பு முறையையும் அவுஸ்திரேலியா அணியினரின் ஓட்ட எண்ணிக்கையையும் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தவேளையில் இடம் பெற்ற இச்சம்பவம் சர்வதேச முக்கியத்தைப் பெற்ற நிகழ்வாகி விட்டது.


அனுமதியின்றி முறைகேடாக இடம் பெற்ற இந்தச் சம்பவம் பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகியது, புலிக்கொடியுடன் ஓடிய இந்த நபர் இறுதியில் பாதுகாப்புப் பிரிவினரால் கைதாகிய போதிலும் அவர் சர்வதேச சமூகத்துக்கு சொல்ல முற்பட்ட விடையம் தான் என்ன?



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.