புதன், 18 ஏப்ரல், 2007

உலகக் கிண்ண கிரிகெட் மைதானத்தில் தமிழீழ தேசியக்கொடி


ஸ்ரீலங்காவுக்கு எதிராக அவுஸ்ரேலியா கிரிகெட் அணியினர் நேற்று மேற்கிந்தியதீவு பிரிஜ்ரவுன் மைதானத்தில் களமிறங்கி விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ தேசியக் கொடியுடன் ஒரு இளைஞன் வலம் வந்தார்.

உலகக் கிண்ண கிரிகெட் மைதானத்தில் சர்வதேச விளையாட்டு இரசிகர்கள் ஸ்ரீலங்கா அணியினரின் பந்து வீச்சு மற்றும் களத் தடுப்பு முறையையும் அவுஸ்திரேலியா அணியினரின் ஓட்ட எண்ணிக்கையையும் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தவேளையில் இடம் பெற்ற இச்சம்பவம் சர்வதேச முக்கியத்தைப் பெற்ற நிகழ்வாகி விட்டது.


அனுமதியின்றி முறைகேடாக இடம் பெற்ற இந்தச் சம்பவம் பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகியது, புலிக்கொடியுடன் ஓடிய இந்த நபர் இறுதியில் பாதுகாப்புப் பிரிவினரால் கைதாகிய போதிலும் அவர் சர்வதேச சமூகத்துக்கு சொல்ல முற்பட்ட விடையம் தான் என்ன?

இந்த இளைஞன் மனோநிலை பாதிப்புக்குள்ளானவரா அல்லது ஸ்ரீலங்காவும் ஈழமும் ஒன்றென அர்த்தப்பட இலங்கை அணிக்கு வலுச் சேர்க்க முற்பட்டாரா இல்லையேல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான விளம்பரம் நிகழ்வா என பார்வையாளர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----