ஞாயிறு, 8 ஏப்ரல், 2007

இமயமலைக்கு ஆபத்து


2030-க்குள் உலகில் பேரழிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். உலகின் மிகப் பெரிய மலைத் தொடர்களுள் முக்கியமானது இமயமலை.
ஐக்கிய நாடுகள் சபையின் இண்டர் கவர்ன்மெண்டல் பானல் அன்ட் கிளைமேட் சேன்ஜ் (ஐ.பி.சி.சி.) தற்போது ஒரு அதிர்ச்சியினை ஆராய்ச்சி கட்டுரையாக வெளியிட்டுள்ளது. தற்போது உலகில் அதிகரித்து வரும் வெப்பத்தின் காரணமாக உலகில் பல மாற்றங்கள் வரவிருக்கின்றன. கால நிலை மாற்றங்கள் மனிதனின் வாழ்க்கையை பாதிக்கும் வகையில் அமைய கூடும்... பெருகி வரும் தட்ப வெப்பம் மற்றும் சுற்றுப்புற சூழல் மாசு பாட்டால் ஆசிய கண்டத்தில் உள்ள இமயமலையின் பாதிக்கும் மேற்பட்ட பனி சிகரங்கள் உருகி இமயமலையே பிளந்து விட கூடிய அபாயம் ஏற்பட போகிறது. வருகிற 2030க்குள் இந்த மாற்றம் நடக்கலாம்... மேலும் ஆப்பிரிக்கா கண்டத்தில் பல நாடுகளில் பட்டினி சாவுகள் ஏற்படும். அமெரிக்கா, லத்தீன் நாடுகளில் கடும் சூறாவளி, மற்றும் சுனாமி ஏற்பட்டு. கண்டமே அழியும் சூழல் ஏற்படும்... பங்களாதேஷ் மற்றும் 100க்கும் மேற்ப்பட்ட சிறு சிறு தீவுகள் காணாமல் போய் விடும் அபாயமும் உள்ளது. மேலும் விண்வெளியில் அதிகரித்து வரும் கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன்டை ஆக்சைடு வாயுக்களால் பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் ஏறி வருகிறது. இதனால் துருவ பகுதிகள் உருக தொடங்கி நீரின் பரப்பு உயரும் அபாயமும் உள்ளது. இப்போது இருக்கிற கடல் மட்டம் சிறிது உயர்ந்தாலும் இன்றிருக்கும் பல தீவுகள், நாடுகள் கடலுக்குள் மூழ்கும் அபாயமும் உள்ளது.

கடந்த 50ஆண்டுகளுக்கிடையே உயர்ந்த இந்த அதிக வெப்ப நிலைக்கு மனிதர்களாகிய நாமே காரணம்... இப்போது இமயமலையில் 5.லட்சம் கி.மீ. பனிமலை குன்றுகள் உறைந்து கிடக்கின்றன. வருகிற 2030க்குள் 4 லட்சம் பனிமலை குன்றுகள் உருகி விடுமாம் மீதி ஒரு லட்சம் குன்றுகள் பாக்கியிருக்குமாம். மேலும் இந்த அதிக வெப்பத்தால் மற்ற கண்டங்களை விட ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்கள் தான் அதிகளவு பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் சூரிய கதிர்கள் அதிகம் செங்குத்தாக இந்த கண்டங்களில் தான் விழுகின்றனவாம். சில நாடுகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட போவதில்லை என்றும் இதில் ஆறுதலாய் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா, ரஷியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் அதிக அளவு நன்மைகள் ஏற்பட கூடுமாம். இங்கு இயற்கையின் எந்த சீற்றமும் இருக்காது என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் இயற்கை தனது கோர முகத்தை காட்ட தயாராகி விட்டது என்பதையே இந்த பரபரப்பு ஆய்வறிக்கை நமக்கு உணர்த்துகிறது.

இந்த ஆய்வறிக்கை தயாரிப்பதில் 130 நாடுகளில்ë இருந்து 2.500 விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆய்வறிக்கை 1400 பக்கங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த அறிக்கையில் முதல் பாகம் தான் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் 2-ம் பாகம் வருகிற வெள்ளிக்கிழமை பிரான்சு நாட்டில் நடக்கும் விஞ்ஞானிகள் மாநாட்டில் வெளியிடப்படுகிறது.

நன்றி: விழிப்பு.நெற்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----