திங்கள், 16 ஏப்ரல், 2007

நோர்வேக்கும் விடுதலைப்புலிகளுக்குமான இரகசியத் தொடர்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நோர்வே நாட்டுக்குமான தொடர்புகள் பற்றிய கருத்துக்கள் பலவேறுபட்டதாக வெளிவந்து கொண்டிருந்த போதிலும் இப்போது திடீரென நோர்வே தீவிரவாத ஒழிப்புக் குழுவின் முக்கியஸ்தரான போல்க் ஆர் ரோவிக் என்பவர் சாட்சியமாக உள்ளே பொசிந்திருக்கும் இரகசியமெனக் கூறவிருப்பது தான் என்ன?

ஒடுக்கப்படும் மனித ஜீவன்களுக்காக மானுட நேயங்கொண்டவர்கள் பங்களிப்புச் செய்வதில் எவ்வித தவறும் இல்லை, இதற்கு ஆதரவுக்கரம் பாரத்தின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது, இதற்கு இந்தியாவின் சுயநலன் காரணமாக இருந்த போதிலும் ஒடுக்கப்படும் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு உதவி கிடைத்ததை இலகுவாக மறந்து விட முடியாது. அதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல சர்வதேச அமைப்புக்கள் உதவி புரிகின்றன.

காலங்காலமாக மாறி மாறி வரும் ஸ்ரீலங்காவின் அரசாங்கங்கள் தமிழர்கள் மீது கோலோச்சும் அடக்குமுறை முற்றுப்பெறுவதற்கான சைகை எதுவும் இன்னும் தென்படவில்லை, 2002ம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையைத் தொடர்ந்து ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்ட தமிழ் மக்கள் மீண்டும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் வதைக்கப்படும் நிலைக்குத் திரும்பி விட்டனர்.

எங்கு பார்த்தாலும் ஆட்கொலைகளும், அப்பாவிப் பொதுமக்கள் கைது செய்யப்படுதலும், குண்டுத் தாக்குதலும், அகதி முகாம் வாழ்க்கையுமென தமிழரின் அவலவாழ்வு தொடர்கின்றது, இதனைத் தடுத்து நிறுத்த முன்வருபவர்கள் தான் யார்?

30 கோடி ரூபா பணத்தினை புலிகளுடன் தொடர்புடைய இரு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட நோர்வேயுடனான புலிகளின் தொடர்புகள் பற்றி இலங்கை அரசாங்கத்திற்கு வெளி ப்படுத்த அந்நாட்டு தீவிரவாத ஒழிப்புக் குழுவின் முக்கியஸ்தர் போல்க் ஆர் ரோவிக் இன்று (16 ஆம் திகதி) இலங்கை வரவுள்ளார். நோர்வே நாட்டு அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்திடம் உரிய சாட்சியங்களுடன் பல இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாக ரோவிக் ஒஸ்லோ நகரிலிருந்து தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். நோர்வே அரசுடனான தொடர்பு குறித்து வெளிப்படுத்தல் மற்றும் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென புலிகள் இயக்கம் ரோவிக்குக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதால் அவர் இலங்கையில் இருக்கும் காலத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது. புலிகளுடன் தொடர்புடைய இரு நிறுவனங்களுக்கு நோர்வே மாநகர சபை நிதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கும் மேற்படி தீவிரவாத ஒழிப்புக் குழுவின் முக்கியஸ்தர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு 15 மில்லியன் குரோன்களும் புலிகளின் சமாதான செயலகத்திற்கு 5.6 மில்லியன் குரோன்களும் நோர்வே அரசினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் புலிகளுடன் மேற்கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தையின் போது புலிகள் இயக்கத்தின் முன்னாள் படைத்தளபதி கருணா அம்மான் நோர்வேயின் ஆயுத நிறுவனங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டமை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்திற்கு நிதி வழங்கியமை மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் குழுவொன்றிற்கு நோர்வேயின் ரேன் மாநில விஷேட அதிரடிப்படை முகாமில் பயிற்சி வழங்கப்பட்டமை உள்ளிட்ட பல இரகசியங்கள் ரோவிக்கினால் வெளியிடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக் கப்படுகிறது.

15.4.2005 திவயின

நன்றி வீரகேசரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----