புதன், 18 ஏப்ரல், 2007

இரத்தத்தை உறைய வைக்கும் கோரச் சம்பவம்


அமெரிக்க வேர்ஜீனிய தொழிநுட்ப பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த மாணவர்கள் உட்பட 33 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்ற இரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம் இன்று பரவலாகப் பேசப்படும் செய்தியாகும்.


இக் கல்லூரியில் கல்வி கற்ற துப்பாக்கிதாரி 23 வயதான தென்கொரியரான யோ சுங் வி இறுதியில் தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவர்களை சுட்டுக் கொல்லும் நோக்கதில் செயற்பட்ட இக் கொலையாளி மனநோயாளியா அல்லது இவரின் பின்புலத்தில் வெறுயாராவது இருக்கின்றார்களா என்பது இன்னும் புலனாகவில்லை.


தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான பேராசிரியரான ஜி.எஸ்.லோகநாதன் கொல்லப்பட்டதுடன், கல்வி கற்று வந்த சில ஈழத்துத் தமிழ் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.


துப்பாக்கியை யார் வைத்திருக்க வேண்டும் யார் வைத்திருக்கக் கூடாது என்பதை சர்வதேச சமூகம் தீர்மானிக்க வேண்டிய தருணம் இது, உலகப் பொலிஸ்காரராக எல்லா நாட்டிற்குள்ளும் மூக்கை நுளைத்துக் கொள்ளும் அமெரிக்கா இச் சம்பவத்துக்கு சொல்லக் கூடிய காரணம் தான் என்ன? வருடாந்தம் அமெரிக்காவில் இடம் பெறும் துப்பாக்கி மூலமான கொலைகளுக்கு முடிவே இல்லையா?

பிறருடைய முதுகில் உள்ள அழுக்கை நீக்க முற்படுவதற்கு முன் தனது முதுகில் உள்ள அழுக்கை முதலில் அகற்றுவதே மிகவும் சிறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----