
எனது பதிவுகள் அனைத்தும் தேன்கூட்டின் இடுகைகள் http://www.thenkoodu.com/ பகுதியில் தடம் பதிக்காமல் அடம் பிடித்து தூர நிற்கின்றது, வாசகர்களின் பார்வைக்கு எட்டுவவில்லை, ஆனால் தேன்கூட்டின் திரட்டி'ஜி' http://www.thenkoodu.com/?mode=google பகுதியில் உடனடியாக அரங்கேறுகின்றது, இதற்கான காரணம் என்னவென்று அறிய முடியாமல் இருக்கின்றது, தேன்கூட்டு தாபனத்தாருக்கு இரண்டு மடல்கள் அனுப்பியுள்ளேன். விபரம் தெரிந்தோர் அறியத்தந்தால் உதவியாக இருக்கும்.
ஈழத்து வலைப்பதிவுகளுக்கு தேன்கூட்டில் அதிமுக்கியத்துவம் காட்டப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு சில வலைஞர்களிடம் இருக்கின்றது, ஆனால் இது எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை நான் அறியேன்.
களத்துமேட்டின் பதிவுகள் ஈழம்சார்புடையதாக இருக்கப் போவதில்லை, ஊடகப் புதினங்களைத் திறனாய்வு செய்வதே இதன் நோக்கம், நேர்மையான செய்திகள் மக்களின் புலன்களுக்கு எட்ட வேண்டும் அல்லவா. ஊடகங்கள் அனைத்தும் ஒவ்வொரு தளத்தில் இருந்து தம் பக்கம்சார் கருத்துக்களை எழுதுவதையே தற்போதைய நிலையில் காணக்கூடியதாக இருக்கின்றது, இதில் மாற்றங்காண வேண்டும் என்பதனால் களத்துமேட்டில் நக்கீரக் கருத்துக்களை பதிவு செய்ய விளைகின்றேன்.
சாகரன் கல்யாண் அவர்களின் இழப்பின் பின் தேன்கூடு வலைப்பதிவுகள் மீது அதிக சிரத்தை எடுப்பதில்லையோவென எண்ணத் தோன்றுகின்றது.
எது எப்படி இருப்பினும் தேன்கூடு தமிழ் வலைப்பதிவுகளுக்கு செய்யும் சேவை அளப்பரியது, அதன் சேவை இன்னும் விரிவு செய்யப்பட்டு எல்லோருக்கும் தாயாக இருக்க வேண்டும்.
















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.