இவ் ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு உரையாற்றுகையில், ஆதி காலத்தில் கரிகால சோழன் இலங்கை மீது படையெடுத்து சிங்களர்களை வெற்றி கொண்டு அவர்களை அடிமை படுத்தி கல்லணையை கட்டினான்.
ஆதித் தமிழர்கள் பூமியாக "லேமுரிய கண்டம்" மூழ்கிய போது அதன் மேல் உள்ள மலைப் பங்கான பூமி எச்சமே இலங்கை ஆகும். மட்டகளப்பு மண்ணையும்,மதுரை மண்ணையும் ஆய்வு செய்ததில் இரண்டும் ஒரே மண்ணே என நிருபணம் ஆனது.
அந்த மண்ணின் மைந்தர்களை இன்று கொடுங்கோலன் ராஜபக்ஷ விரட்டி கொல்கிறான், அடுத்த வருடம் நடக்கும் தேர்தலில் வெற்றி பெற, தமிழனை கொன்று குவித்து அந்த பிணத்தின் மீது அரியாசனம் ஏற முயல்கிறான்.
விடுதலை புலிகள் தமிழனை கேடயமாக பயன்படுத்து வதாக கூசாமல் பொய் சொல்கிறான், தமிழனை முன் நிறுத்தி அவர்களை கொன்றொழித்து, இவன்தான் வெற்றி பெற துடிக்கிறான்.
தமிழ் இனம் மானம் மிகுந்தது, வீரம் செறிந்தது, தமிழன் இறுதியில் வென்றே தீருவான், மட்டக்களப்பில் தமிழ் பெண்ணின் பிறப்பு உறுப்பில் வெடிகுண்டு வைத்து கொல்லும் கேடுகெட்ட ஈனத்தனமான வீரம் சிங்களனுடையது, அப்பாவி பிஞ்சுகள் மீது ரசாயன குண்டுகளை வீசி அழிக்கும் வீரம் இவனுடையது.
இந்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள், உடனே ராடார் கருவிகளை திரும்ப பெற வேண்டும், அக்கருவிகளை இயக்க கூட தெரியாத அந்த முட்டாள்கள் இரண்டு இந்தியரை வைத்து இயக்கி கொண்டுள்ளனர் அவர்களையும் திரும்ப அழைக்க வேண்டும்.
இப் போராட்டத்துக்கு ஆதரவு செய்து எதிர்வரும் நவம்பர் முதலாம் நாள் சென்னையில் காலை முதல் மாலை வரை கமலஹாசன், ரஜனிகாந்த் உட்பட தென்னிந்திய நடிகர்கள் பலரும் உண்ணாவிரததப் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளதாக நடிகர்கள் சங்க தலைவர் திரு.சரத்குமார் தெரிவித்துள்ளார்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.