2008.10.02 ஆம் திகதி மட்டக்களப்பு, வலம்புரி வியாபார நிலையத்தில் வைத்து ஸ்ரீலங்கா காவற்துறையினரால் 18 வயதுடைய கந்தசாமி குகதாஸ் மற்றும் 26 வயதுடைய ஏ.குணசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்கா காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர், இவர்களை உறவினர்கள் சென்று பார்வையிட்டும் வந்திருந்தனர்.
இவ் இருவருடைய உடலங்களும் காத்தான்குடி கடற்பகுதியில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அடிக்கடி காணாமற் போதலும் ஆட்கடத்தலும், ஆட் கொலையும் கிழக்கிலங்கையில் சர்வ சாதாரணமாக நிகழ்வதால் இதற்குரிய முழுப் பொறுப்பையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கேட்டுள்ளார்.
















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.