
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொகுபண்டார முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ததைத் தொடர்ந்து சபையில் கருணா அம்மான் கன்னி உரையாற்றினார்."பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்தப் பதவியை எனக்குத் தந்தமைக்கு ஜனாதிபதிக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இப்பதவி எனக்கு மட்டும் வழங்கப்பட்ட ஒன்றாக நான் கருதவில்லை. தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள கௌரவத்தையே இப்பதவி பிரதிபலிக்கிறது. தமிழ் மக்கள் பயங்கரவாதத்தை நிராகரித்து பாராளுமன்ற ஜனநாயகம் தொடர்பில் நம்பிக்கை வைத்துள்ளனர்.
கடந்த காலங்களில் நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளார். இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து இன மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்"

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.