நடிகர் முரளியின் மரணச் செய்தி கவலையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக பதிவு செய்யாமல் விட்ட களத்துமேட்டின் பக்கம் தலையை நீட்டுகிறேன்.
தற்போதைய தமிழக நடிகர்களினுள் தன்னைத் தானே சுயவிமரிசனம் செய்து கொள்ளுமளவுக்கு பக்குவமுள்ளவர் தான் நடிகர் முரளி. சென்ற வாரம் நடிகை லக்ஷ்மி விஜய் தொலைக்காட்சிக்காகத் தொகுத்தளிக்கும் "கதையல்ல நிஜம்" நிகழ்ச்சிக்கு நடிகர் முரளியும் அவர் மகன் அகர்வாவும் வந்து சிறப்பித்தனர், இந் நிகழ்ச்சியில் நடிகர் முரளி அருமையாக தனது உளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்.
1964 வைகாசி 19 ஆம் திகதி பிறந்த முரளி 1984 ஆம் ஆண்டு சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரித்த பூவிலங்கு திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி புதுவசந்தம், இதயம், பொற்காலம், பகல் நிலவு, அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, வெற்றிக் கொடி கட்டு, சொன்னால்தான் காதலா, இரணியன், சுந்தரா டிராவல்ஸ் உட்பட 99 திரைப்படங்கள் நடித்து பல இரசிகர்களினதும் பாராட்டைப் பெற்றவர், இறுதியாக தனையன் அதர்வா கதாநாயகனாக நடித்த சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரித்த காணா காத்தாடி திரைப்படத்தில் சிறு பாத்திரமேற்று நடித்திருந்தார், இதுவே இவரின் இறுதித் திரைப்படமாகும்.
இயக்குநர் பாரதிராஜாவின் கடல் பூக்கள் படத்துக்காக, 2001 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றவர் முரளி.
தனது 46 வது வயதில் நூறாவது படத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகி நடிக்க முன்பாகவே இவ்வுலகத்தை விட்டு நடிகர் பிரிந்தது இரகசிகர்கட்கு துரதிஷ்டமே!
எனக்குப் பிடித்த நடிகரின் மறைவால் துயருறும் அன்னாரின் குடும்பத்துக்கும் இரசிகர்கட்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!
நடிகர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடிகர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 8 செப்டம்பர், 2010
ஞாயிறு, 9 நவம்பர், 2008
சென்னையில் சின்னத் திரை நட்சத்திரங்களின் உண்ணாவிரதம்!

உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று காலை நடாத்தினர்.
சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் திரு.விடுதலையின் தலைமையில் பாரதீய ஜனதாக் கட்சி தேசிய செயலர் திரு.திருநாவுக்கரசு உண்ணா விரதத்தினை ஆரம்பித்து வைத்தார், இதில் நடிகர்கள் அஜய் ரத்னம், ராஜ்காந்த், மோகன்ராம், கே.நடராஜன், வசந்த், மனோபாலா, தேவ் அஜய், சிவன் சீனிவாசன், ஜெயமணி, கமலேஷ், ரிஷி, நந்தகுமார், நடிகைகள் தேவயானி, தீபாவெங்கட், மஞ்சரி, பிருந்தாதாஸ், டாக்டர் சர்மிளா, நித்யா, மவுனிகா, வந்தனா, மோனிகா, ராணி, இயக்குனர்கள் சி.ஜே. பாஸ்கர், திருச்செல்வம், பாலாஜி, ரகுநாதன், ராஜ்பிரபு, மூவேந்தர், இ.ராமதாஸ், தேவேந்திரன், இராஜேந்திரன், இராமலிங்கம், அசோகன், இராதாகிருஷ்ணன், இரஞ்சித்குமார், தயாரிப்பாளர்கள் பி.வி. சங்கர், சக்திவேல், விஜயகுமார், எழுந்தாளர்கள் இதயசந்திரன், கென்னடி, நெல்லை சுந்தர்ராஜன், மோகன் மற்றும் ஏராளமான தொலைக்காட்சி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்தியா உடனடியாக தலையிட வேண்டுமென்றும், இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக சின்னத் திரைக் கலைஞர்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்குவதெனவும் இறுதியில் ஸ்ரீலங்கா அரசினைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இயக்குநர் திரு.மணிவண்ணன் உண்ணாவிரதிகளுக்கு குளிர்பானம் வழங்கி உண்ணா விரதத்தை முடித்து வைத்தார்.














குறியீடு :
உண்ணாவிரதம்,
சின்னத்திரை,
சென்னை,
நடிகர்கள்
சனி, 1 நவம்பர், 2008
சென்னையில் ஈழத்தவருக்காக நடிகர் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டம்!

சென்னை தென்னிந்திய நடிகர்கள் சங்க வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்காக நடிகர்கள் ராதாரவி, நெப்போலியன், விஜயகுமார், கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, மணிவண்ணன், பிரகாஷ் ராஜ், சிவகுமார், சந்திரசேகர், எஸ்.வி.சேகர், சத்யராஜ், விஜய், அஜித், அர்ஜுன், சூர்யா, விக்ரம், கார்த்திக், சியாம், வடிவேல், விவேக், மனோரமா, சந்தியா, மும்தாஜ், மீனா, த்ரிஷா, நயன்தாரா மற்றும் ராதிகா உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
ஈழத் தமிழர்களின் இன்னல்களைத் துடைக்க பல நடிகர்கள் தங்களது அன்பளிப்புத் தொகைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள், இதற்கு மகுடமிட்டாற் போல் நடிகர் ரஜனிகாந்த் பத்து இலட்சம் ரூபாய் பணத்தினை நடிகர் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளார்.
நடிகர் எஸ்.வி.சேகர் தனது விசேட உரையில் ஸ்ரீலங்காவில் நடைபெறும் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வரவேண்டுமானால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இறுதியில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார்.
குறியீடு :
ஈழத்தவர்,
உண்ணாவிரதம்,
சென்னை,
நடிகர்கள்
ஞாயிறு, 19 அக்டோபர், 2008
வன்னியில் தொடரும் இராணுவத் தாக்குதலை நிறுத்தக் கோரி இராமேஸ்வரத்தில் தென்னிந்திய திரைபடத்துறையினர் ஆர்ப்பாட்டம்! (பட இணைப்பு)
ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் வன்னியில் தொடரும் இராணுவத் தாக்குதலை நிறுத்தக் கோரி டைரக்டர் திரு.பாரதிராஜா தலைமையில் தென்னிந்திய திரைப்படத் துறையினர் இந்திய மத்திய அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் முகமாக ஆர்ப்பாட்டமொன்றினை இராமேஸ்வரத்தில் நடத்த சென்னையிலிருந்து விசேட புகையிரதத்தில் இராமேஸ்வரம் சென்றுள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு உரையாற்றுகையில், ஆதி காலத்தில் கரிகால சோழன் இலங்கை மீது படையெடுத்து சிங்களர்களை வெற்றி கொண்டு அவர்களை அடிமை படுத்தி கல்லணையை கட்டினான்.
ஆதித் தமிழர்கள் பூமியாக "லேமுரிய கண்டம்" மூழ்கிய போது அதன் மேல் உள்ள மலைப் பங்கான பூமி எச்சமே இலங்கை ஆகும். மட்டகளப்பு மண்ணையும்,மதுரை மண்ணையும் ஆய்வு செய்ததில் இரண்டும் ஒரே மண்ணே என நிருபணம் ஆனது.
அந்த மண்ணின் மைந்தர்களை இன்று கொடுங்கோலன் ராஜபக்ஷ விரட்டி கொல்கிறான், அடுத்த வருடம் நடக்கும் தேர்தலில் வெற்றி பெற, தமிழனை கொன்று குவித்து அந்த பிணத்தின் மீது அரியாசனம் ஏற முயல்கிறான்.
விடுதலை புலிகள் தமிழனை கேடயமாக பயன்படுத்து வதாக கூசாமல் பொய் சொல்கிறான், தமிழனை முன் நிறுத்தி அவர்களை கொன்றொழித்து, இவன்தான் வெற்றி பெற துடிக்கிறான்.
தமிழ் இனம் மானம் மிகுந்தது, வீரம் செறிந்தது, தமிழன் இறுதியில் வென்றே தீருவான், மட்டக்களப்பில் தமிழ் பெண்ணின் பிறப்பு உறுப்பில் வெடிகுண்டு வைத்து கொல்லும் கேடுகெட்ட ஈனத்தனமான வீரம் சிங்களனுடையது, அப்பாவி பிஞ்சுகள் மீது ரசாயன குண்டுகளை வீசி அழிக்கும் வீரம் இவனுடையது.
இந்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள், உடனே ராடார் கருவிகளை திரும்ப பெற வேண்டும், அக்கருவிகளை இயக்க கூட தெரியாத அந்த முட்டாள்கள் இரண்டு இந்தியரை வைத்து இயக்கி கொண்டுள்ளனர் அவர்களையும் திரும்ப அழைக்க வேண்டும்.
இப் போராட்டத்துக்கு ஆதரவு செய்து எதிர்வரும் நவம்பர் முதலாம் நாள் சென்னையில் காலை முதல் மாலை வரை கமலஹாசன், ரஜனிகாந்த் உட்பட தென்னிந்திய நடிகர்கள் பலரும் உண்ணாவிரததப் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளதாக நடிகர்கள் சங்க தலைவர் திரு.சரத்குமார் தெரிவித்துள்ளார்.




இவ் ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு உரையாற்றுகையில், ஆதி காலத்தில் கரிகால சோழன் இலங்கை மீது படையெடுத்து சிங்களர்களை வெற்றி கொண்டு அவர்களை அடிமை படுத்தி கல்லணையை கட்டினான்.
ஆதித் தமிழர்கள் பூமியாக "லேமுரிய கண்டம்" மூழ்கிய போது அதன் மேல் உள்ள மலைப் பங்கான பூமி எச்சமே இலங்கை ஆகும். மட்டகளப்பு மண்ணையும்,மதுரை மண்ணையும் ஆய்வு செய்ததில் இரண்டும் ஒரே மண்ணே என நிருபணம் ஆனது.
அந்த மண்ணின் மைந்தர்களை இன்று கொடுங்கோலன் ராஜபக்ஷ விரட்டி கொல்கிறான், அடுத்த வருடம் நடக்கும் தேர்தலில் வெற்றி பெற, தமிழனை கொன்று குவித்து அந்த பிணத்தின் மீது அரியாசனம் ஏற முயல்கிறான்.
விடுதலை புலிகள் தமிழனை கேடயமாக பயன்படுத்து வதாக கூசாமல் பொய் சொல்கிறான், தமிழனை முன் நிறுத்தி அவர்களை கொன்றொழித்து, இவன்தான் வெற்றி பெற துடிக்கிறான்.
தமிழ் இனம் மானம் மிகுந்தது, வீரம் செறிந்தது, தமிழன் இறுதியில் வென்றே தீருவான், மட்டக்களப்பில் தமிழ் பெண்ணின் பிறப்பு உறுப்பில் வெடிகுண்டு வைத்து கொல்லும் கேடுகெட்ட ஈனத்தனமான வீரம் சிங்களனுடையது, அப்பாவி பிஞ்சுகள் மீது ரசாயன குண்டுகளை வீசி அழிக்கும் வீரம் இவனுடையது.
இந்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள், உடனே ராடார் கருவிகளை திரும்ப பெற வேண்டும், அக்கருவிகளை இயக்க கூட தெரியாத அந்த முட்டாள்கள் இரண்டு இந்தியரை வைத்து இயக்கி கொண்டுள்ளனர் அவர்களையும் திரும்ப அழைக்க வேண்டும்.
இப் போராட்டத்துக்கு ஆதரவு செய்து எதிர்வரும் நவம்பர் முதலாம் நாள் சென்னையில் காலை முதல் மாலை வரை கமலஹாசன், ரஜனிகாந்த் உட்பட தென்னிந்திய நடிகர்கள் பலரும் உண்ணாவிரததப் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளதாக நடிகர்கள் சங்க தலைவர் திரு.சரத்குமார் தெரிவித்துள்ளார்.





இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)