கொழும்பு கோட்டை புகையிரத நிலைய பகுதியில் வைத்து கடத்தப்பட்ட இலங்கைச் செஞ்சிலுவைச்சங்க பணியாளர்களான மட்டக்களப்பினைச் சேர்ந்த தொண்டர் அலகு செயலாளரான 32 வயதுடைய சின்னராசா சன்முகலிங்கம் மற்றும் 27 வயதுடைய உதவி நிறைவேற்று உத்தியோகத்தரான கார்த்திகேசு சந்திரமோகன் இருவரும் கைகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்களாக இரத்தினபுரிப் பகுதியின் கிரியெல்ல எல்லாகாவ கொட்டேபோக் காட்டுப் பிரதேசத்தில் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்...
..
..
இச்சடலங்களில் ஒருவருடைய சடலம் கருநீலநிற நீளக் காற்சட்டையும் சேட்டும் மற்றய சடலம் கறுப்பு நிற நீளக் காற்சட்டையும் கபில நிற சேட்டும் அணிந்த நிலையில் காணப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து பயத்தின் காரணமாக தற்காலிகமாக தங்களின் செஞ்சிலுவைச் சங்க செயற்பாடுகளை நிறுத்துவதாக மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.