
தமிழக மீனவர்கள் இலங்கைக்கடற்படையினால் தாக்கப்படுவது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை புதுடில்லிக்கு விஜயம் செய்த தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதனையடுத்தே நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு விஜயம் செய்த எம்.கே. நாராயணன் மீண்டும் தமிழகமுதலமைச்சர் கருணாநிதியிடம் தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குலைத் தடுக்க இந்திய கடற்படையும் கடலோரக் காவற்படையும் ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் ரோந்துப்பணிகள் மேற்கொள்வது, தூத்துக்குடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பினை அதிகரிப்பது போன்ற விடயங்களைக் கலந்துரையாடினர்.

இது தொடர்பாக ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த நாராயணன் இந்திய கடற்படை இலங்கைக் கடற்படையுடன் கூட்டு சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபடாது. ஆனால் இருதரப்பும் ஒருங்கிணைந்த ரோந்துப்பணியை மேற்கொள்ள முடியும்.
இலங்கைக்கு யுத்த ஆயுத தளபாடங்களை இந்தியா ஒரு போதும் வழங்காது. ஆனால், தாக்குதலைத் தடுக்க பயன்படும் ரேடார் உள்ளிட்ட சாதனங்களை மட்டுமே இந்தியா இலங்கைக்கு வழங்கும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.