வெள்ளி, 8 ஜூன், 2007

ஸ்ரீலங்கா தமிழர்களை பலாத்காரமாக வெளியேற்றுகின்றது

கொழும்பிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை ஸ்ரீலங்கா அரசு திட்டமிட்டு பலாத்காரமாக வெளியேற்றுவது தமிழீழத்தின் அங்கீகாரத்தின் ஒத்திகையாக இருக்கலாமென எண்ணத் தோன்றுகின்றது, ஒரு நாட்டினுள் அனுமதியின்றி சட்ட விரோதமாக குடியேறியவர்களை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் குடியகல்வு அதிகாரிகளின் உதவியுடன் பொது மன்னிப்பு வழங்கி அவரவர் நாட்டுக்குரிய எல்லைக் கோடுகளில் கொண்டு விட்டு விடுவது சாதாரண விடயம். அதே பாணியில் ஈழ நாட்டில் இருந்து வந்து சட்டவிரோதமாக ஸ்ரீலங்காவில் பகுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஈழ நாட்டின் எல்லைக் கோடுகளில் கொண்டு விடுவதாக நினைக்கத் தோன்றுகின்றது.

விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை பலாத்காரமாக வெளியேற்றுவது மனித உரிமை மீறாலாகுமென்று பல தமிழர் அமைப்புக்களும் அறிக்கை விடுத்துள்ளன.

கொழும்பில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த அப்பாவித் தமிழ்மக்களை பலவந்தமாக அவர்களது பிரதேசங்களுக்கு கொண்டு சென்றமை மனிதஉரிமை மீறலாகும்.
நேற்றைய தினம் கொழும்பில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அப்பாவித் தமிழ்மக்கள் தாம் தங்கியிருக்கின்றமைக்கான தகுந்த காரணங்களைக் காட்டிய போதும் காவல்துறையினர் அவற்றைப் பொருட்படுத்தாது அவர்களை பலவந்தமாக அவர்களது பிரதேசங்களுக்கு கொண்டு சென்றமையானது உண்மையிலேயே ஓர் அடிப்படை மனிதஉரிமை மீறலாகும். இச்செயற்பாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்(ரிஎம்விபி) வன்மையாகக் கண்டிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து வடக்கு கிழக்கு மக்கள் தமது சொந்த இடங்களுக்கு பஸ்களில் ஏற்றி அனுப்பப்பட்டதை வீ.ஆனந்தசங்கரி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
ஒருவித முன்னறிவித்தலுமின்றி ஆண், பெண், குழந்தைகள் என அனைவரையும் அழைத்து பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தமையானது நான் எங்கும் பார்த்திராத கொடூரமான செயலாகும். இப்பேர்ப்பட்ட முட்டாள்த்தனமாக செயல்களால் தான் இன்று புலிகள் இந்தளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளனர். சும்மா இருக்கும் மக்களை புலிகளிடம் பாரம் கொடுப்பது போல் அமைந்துள்ளது இந்நடவடிக்கை. புலிகளுக்கு பயந்து இங்கு வருவது, படையினருக்கு பயங்கு அங்கு செல்வது என மக்கள் எங்கு தான் செல்வது? கடலுக்குள் தான் மக்கள் சென்று தொலைவதா?? இவ்வாறான செயல்களை செய்யக் கூடாது, மனிதாபிமானமுள்ள எவராலும் இச்செயலை அங்கீகரிக்க முடியாது.

கொழும்பில் விடுதிகளில் தங்கியிருக்கும் வடக்குக் கிழக்கு மக்களை பலாத்காரமாக அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை புளொட் வன்மையாகக் கண்டிக்கின்றது.
தமது சொந்த அலுவல்கள் நிமித்தமும், தத்தமது இடங்களில் பாதுகாப்புடன் வாழ முடியாத சூழலிலும் கொழும்பு வந்து விடுதிகளில் தங்கியிருக்கும் வடக்கு, கிழக்கு மக்களை குறிப்பாக இளவயதினரை பலாத்காரமாக வெளியேற்றி வடக்கு, கிழக்குக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகளில் பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. இவ்வாறான நடவடிக்கை, மனித உரிமை மீறல்களின் உச்சமாகவே கருத்தப்பட முடியும். ஜனநாயக குடியரசொன்றின் பிரஜைகள் தங்களின் நாட்டில் தாங்கள் விரும்பிய பிரதேசமொன்றில் வாழ முடியுமென்ற அடிப்படை உரிமையையே இது தகர்த்தெறிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசொன்று அதன் பிரஜைகளின் ஒரு சாராரினை தமக்கு விரும்பிய இடங்களில் வாழவிடாது தடுக்கும் நடவடிக்கையானது மிகப்பாரிய உரிமை மீறலாகும்.

கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது பற்றிய விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் தனது மேற்சட்டையை கழற்றி எறிந்து எதிர்ப்பினை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் மேற்சட்டையை கழற்றி எறிந்தார், முதற்தடவையாக இடம்பெற்ற இச் சம்பவமானது பாராளுமன்ற பதிவேட்டில்(கன்சாட்) பதிவாகியுள்ளது.


கொழும்பில் விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆடிக் கலவரத்தைவிட மோசமான நடவடிக்கை என, பாராளுமன்றத்தில் நேற்று இது தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தில் பேசிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் காரணமின்றி அரசினால் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை போன்று கொழும்பில் தங்கியுள்ள முஸ்லீம்களையும், சிங்கள மக்களையும் அரசு வெளியேற்ற முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார் ஹக்கீம்.

கொழும்பில் தங்கியிருந்த தமிழர்களை பலவந்தமாக அரசு வெளியேற்றியதைக் கண்டித்து பாராளுமன்றத்தில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தாமும் வடக்கு கிழக்கிற்கு செல்லவிருப்பதாகவும் அதேபோன்று வடக்கு-கிழக்கிலுள்ள படையினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----