செவ்வாய், 5 ஜூன், 2007

ஈழத்திற்கு ஆயுதப் போரை முதலில் வித்திட்டவர் போராளி சிவகுமாரன்

ஈழப் போராட்டத்தினை ஆயுதப் போராட்டமாக மாற்றிய பெருமைக்குரியவர் சிவகுமாரன். இவ்விடயம் ஈழப் போருடன் சம்பந்தப்பட்டோர் அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயம், ஆனால் காலப்போக்கில் இவரின் நாமத்தை அழித்துவிட வேண்டுமென சில தமிழீழ விடுதலை இயக்கங்கள் கங்கணங்கட்டி நிற்பது அறிந்ததே.

ஆயுதப் போராட்டத்துக்கு வித்திட்டவர் சிவகுமாரன் எனும் பெயர் முன்னிலைப் படுத்தப்படுமாயின், எங்கே தமக்குரிய மரியாதையும் கௌரவமும் அடிபட்டுப் போய் விடுமோவென நினைத்து சிவகுமாரனின் தியாகத்தை மழுங்கடிப்பது வருத்தந்தரும் விடயமாகும்.

இவரின் தியாகத்தை கௌரவிக்கும் முகமாக ஈபிடிபி எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் ஈழப் போராட்டத்தின் முதல் வித்தாக சிவகுமாரன் எனக் கௌரவம் செய்து "விடுதலை வித்துக்கள் தினமாக" இன்றைய ஆனி 5 ஆம் திகதிக்கு மகத்துவம் செய்கின்றனர். ஆனால் அவர்களின் கட்சிக்காக உழைத்து மரித்த தோழர்களுக்கு அவர்கள் மகத்துவம் செய்வதில்லை என்பது பதிவு செய்யப்பட வேண்டிய விடயம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பட்டியலில் பொன் சிவகுமாரன் அவர்களை தமிழீழத்தின் முதல் மாவீரரெனப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----