செவ்வாய், 14 ஜூலை, 2009

நாட்டைச் சீர்குலைக்கும் பாதாள உலகக் கும்பலும், முஸ்லிம் ஆயுதக் குழுக்களும் !

ஸ்ரீலங்காவின் தலைநகரையும் அதனோடு ஒட்டியுள்ள தென் பகுதியுமான சிங்களப் பகுதிகளில் பாதாள உலகக் கும்பலினால் பலத்த தொல்லைகள் ஏற்பட்டு வருவது சகலரும் அறிந்ததே! இந்தக் கும்பலில் பல்லினத்தவர்களும் அங்கம் வகிக்கின்றனராயினும், சிங்கள, முஸ்லிம் காடையர்களே இதில் அதிக சிரத்தையெடுத்து சமூகச் சீரழிவுகளை நடாத்தி வருகின்றனர்.

போதைப் பொருள் வியாபாரம் முதல் கப்பம் பெறல், ஆட்கடத்தல், பணத்துக்காகக் கொலை செய்தல், அடாவடித்தன தரகு வியாபாரம் போன்றன இவர்களால் செவ்வனே செய்யப்பட்டு வருகின்றது. வேலியே பயிரை மேய்வது போன்று நாட்டை நல்வழிப்படுத்தக் கூடிய அரசியல்வாதிகளும், சில பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்களும் முன்னின்று செயற்படுவதனால் கட்டுப்படுத்துவது கடினமாகவே இருந்து வந்தது.

மக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்களை முற்றாக ஒழித்துக் கட்டி, சுத்திகரிப்புச் செய்யுமாறு படையினருக்கு பணிப்புரை செய்துள்ள நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்த வேண்டாமென அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளமை பாராட்டத்தக்கது.

அதில் ஒரு கட்டமாக இந்திய என்கவுண்டர் முறையில் சில சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது நல்ல விடயமாக இருந்த போதிலும், அப்பாவிகள் எவரும் இதில் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.

தென்பகுதியில் இருக்கும் இந்த அச்சுறுத்தல் போன்று கிழக்கு மாகாணத்திலும் முஸ்லிம் ஆயுதக் குழுவினரால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது, அஸ்ரப்பினால் தோற்றுவிக்கப்பட்ட முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இன்னும் தங்களது அடாவடித்தனங்களை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, இதனை கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் தூபமிட்டு வளர்த்துக் கொண்டே வருகின்றனர், இதனால் பிட்டும் தேங்காய்ப் பூவுமாக வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இனத்தவர்களிடையே விரிசல் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றனர்.

பாதுகாப்புத் தரப்பினர் சட்ட விரோத ஆயுதங்களை ஒப்படைக்குமாறு முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு அறிவித்திருந்தும் இன்னும் பூரணமான ஆயுதக் களைவு ஏற்பட்டதாக அறிய முடியவில்லை, முஸ்லிம் தீவிரவாத ஆயுதக் குழுத் தலைவர்கள் இப்போது தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருப்பதன் மர்மம் என்னவென்று அறிய முடியாமல் இருக்கின்றது.

அரசியல்வாதிகளின் திட்டமிடல்களினால் முன்பும் இதே போன்று முஸ்லிம் ஆயுதக் குழுத் தலைவர்கள் தலைமறைவாக இருப்பது போன்று தகவல்கள் வெளியாகி பாதுகாப்புத் தரப்பினர்களின் தேடுதல்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டது, அதே போன்று இப்போதும் பாதுகாப்பு தரப்பு எடுத்து வரும் முயற்சிகளை நசுக்குவதற்காகவே, முஸ்லிம் ஆயுதக் குழுவினர்களின் தலைவர்கள் ஓடி விட்டார்கள் எனப் போலிப் பிரச்சாரம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மூதூர், கிண்ணியா, வாழைச்சேனை, காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இறக்காமம் போன்ற பகுதிகள் முஸ்லிம் தீவிரவாதிகளின் ஆயுதத் தளங்களாகும், இங்குள்ள சில பள்ளிவாசல்கள் சம்மேளனங்களும், முஸ்லிம் வர்த்தகர்களுமே முஸ்லிம் ஆயுதக் குழுக்களை ஊக்குவித்து வருகின்றனர், இந்த முஸ்லிம் ஆயுதக் குழுக்களினால் இப்பகுதிகளில் வாழும் தமிழ், சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டே வருகின்றனர், 1990 ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த பல தமிழ் மக்கள் இந்த முஸ்லிம் ஆயுதக் குழுக்களினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு தங்களது சொந்த கிராமங்களில் இருந்தே துரத்தப்பட்டு, சொத்துக்கள் அழிக்கப்பட்டு, உடமைகளும் அபகரிக்கப்பட்டு இருந்தன.

இப்படியான சம்பவங்கள் இனிமேலும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படுவதுடன், அதற்கு உடந்தையானவர்களும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியத் தேவையாகும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீவிரமாகச் செயற்பட்டு முஸ்லிம் ஆயுதக் குழுக்களினதும், பாதாள உலகக் கும்பல்களினதும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டியது கட்டாயமாகும்.

முஸ்லிம் ஆயுதக் குழுக்களில் ஒன்றான ஜிகாத் முன்பு வெளியிட்ட துண்டுப்பிரசுரம்

திங்கள், 13 ஜூலை, 2009

மீண்டும் புலூடா விட்டுள்ள தமிழ்வின்

கடந்த 2009.07.11 ஆம் திகதி சனிக்கிழமை மெனிக்பாம் அகதி முகாமுக்கு இளையோர்களின் செயற்திட்டம் தொடர்பான விடயங்களை முன்னெடுக்கச் சென்றிருந்த நாமல் ராஜபக்ஷ அங்குள்ள மக்களினால் சேறடிப்புக்கு உள்ளானதாக புகைப்படங்களை ஆதாரப்படுத்தி தமிழ்வின் செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்தச் செய்தி ஆதாரமற்றது என்பதை நிரூபிக்க பல ஆதாரங்கள் இருந்தும் கூட "பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பது போல" தனது பொய் பரப்புரைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது, தமிழ்வின்னின் பொய்ச் செய்திகளை முன்பும் களத்துமேடு தோலுரித்துக் காட்டியிருந்தது.

"இளைஞர்களுக்கு நாளை" அமைப்பின் தலைவரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான நாமல் ராஜபக்ஷ மக்களைச் சந்திக்கச் செல்லும் போது இராணுவ பாதுகாப்புடன் செல்வது தான் வழக்கம், இப்படியான பாதுகாப்புடன் பின்னியுள்ள நாமல் வன்னி யுத்தத்தில் இருந்து மீண்ட விடுதலைப் புலிகளின் அரசியலுடன் இறுக்கமாகி இருந்த இம் மக்களைப் பார்க்கப் போகும் போது பாதுகாப்பின்றிச் சென்றிருக்க வாய்ப்பே இல்லை, தமிழ்வின் பிரசுரித்துள்ள படத்தில் எந்தப் பாதுகாப்பு படையினரும் இல்லை, அப்படியானால் வன்னி மக்களை முட் கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துள்ள ஸ்ரீலங்கா இராணுவம் தமிழர்களைச் சுதந்திரமாக நடமாட விட்டுள்ளது, அங்கு இராணுவ கெடுபிடிகள் இல்லையென்று தமிழ்வின் மறைமுகமாகக் கூற முற்படுகின்றது.

தமிழ்வின் பிரசுரித்துள்ள படத்தில் மக்கள் கூட்டத்துக்குள் நின்றிருக்கும் நாமல் மட்டும் சேறடிப்புக்குள்ளான நிலையில் சிக்கியிருப்பதாக பொய்யான படத்தை தயாரித்து வெளியிட்டமை சிரிப்புக்கு இடமானது, அந்த படத்தைக் கிராபிக்ஸ் செய்தவர்கள், அப் படத்தில் நாமலுக்கு அருகில் நிற்பவர்களுக்கும் சிறிது சேற்றைப் பூசி இருக்கலாமே!, மக்கள் கூட்டத்தினுள் இருக்கும் நாமலுக்கு மட்டும் சேறு படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது?

ஒளிப்படக் கருவியினால் பதிவாகியுள்ள திகதியை மாற்ற முடியாமல் இன்னும் பல திகதிகளை இட்டு படத்தில் மாற்றங்களைச் செய்ய முனைந்தது வேடிக்கையாக உள்ளது, பல திகதிகளை ஒளிப்படக் கருவி ஒரே நேரத்தில் பதிவு செய்வதில்லை, இது ஒன்றே போதும் தமிழ்வின் பிரசுரித்துள்ள படம் போலியானது என்பதற்கு!

நாமல் சேறடிக்கப்பட்டதாக வர்ணிக்கப்பட்டுள்ள படத்தில் அவரை சுற்றி நிற்கும் அனைவரும் சிரித்த முகத்துடன் நிற்பது எந்த அளவு தூரத்துக்குச் சாத்தியமாகும், அப்படியானால் ஸ்ரீலங்காவில் ஜனநாயகம் நிலவுகின்றது என்று அர்த்தமல்லவா?

இத்தனைக்கும் மேலாக "தாக்குதல்கள் சம்பவங்களை அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு மற்றும் புகைப்படங்களை எடுத்திருந்த போதும் அவற்றை நாமல் ராஜபக்ச பறித்து அழித்துள்ளார். இதனால் பல ஊடங்களில் தாக்குதல்கள் தொடர்பான பதிவுகள் வெளிவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது" எனும் செய்தியை தமிழ்வின் கூடவே பதிவு செய்துள்ளது, இதிலிருந்து தமிழ்வின் பிரசுரித்துள்ள செய்தி போலியானது என்பதை வாசகர்கள் நன்கு புரிந்திருப்பார்கள், ஏனெனில் அந்த படத்தில் நாமலுக்கு முன்னாலுள்ள நபர் செல்லிடப்பேசியினால் சிரித்த படி புகைப்படம் எடுத்துக் கொண்டி இருக்கும் காட்சி உள்ளது.

ஆகவே தமிழ்வின் பிரசுரிதுள்ள செய்தி உண்மையானால் இலங்கையில் எந்த மக்களுக்கும் இப்போது பிரச்சனை ஏதும் இல்லை, முழுமையான ஜனநாயகம் நிலவுகின்றது என்பது அர்த்தம். இல்லை இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை என கருத்துக் கூற முற்படின் தமிழ்வின் சொல்லியுள்ள செய்தி அப்பட்டமான பொய்ச் செய்தி என்பதுடன் மீண்டும் தமிழ்வின் புலூடா விட்டுள்ளது என்பது உறுதியாகின்றது.

தமிழ்வின் செய்தி

மெனிக்பாம் அகதி முகாமுக்கு பயணம் செய்த ஜனாதிபதியின் மூத்தமகன் மீது சேறடிப்பு மற்றும் கல்வீச்சு தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 யூலை 2009, 05:04.03 AM GMT +05:30 ]
வவுனியா அகதிகள் முகாமுக்கு பயணம் செய்த மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச மீது பொதுமக்கள் சேறடிப்பு மற்றும் கல்வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை வவுனியா மெனிக்பாம் அகதிகள் முகாமுக்கு ஊடகவியலாளர்களுடன் சென்ற நாமல் ராஜபக்ச மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இளையோர்களின் செயற்திட்டம் குறித்த விடயங்களை முன்னெடுப்பதற்காகவே அங்கு சென்றிருந்தார்.

தாக்குதல்கள் சம்பவங்களை அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு மற்றும் புகைப்படங்களை எடுத்திருந்த போதும் அவற்றை நாமல் ராஜபக்ச பறித்து அழித்துள்ளார். இதனால் பல ஊடங்களில் தாக்குதல்கள் தொடர்பான பதிவுகள் வெளிவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.





ஞாயிறு, 12 ஜூலை, 2009

யாழ்தேவி இணையத்துக்கு நன்றி

பல்லாயிரம் பதிவர்கள் மத்தியில் "களத்துமேடு" தனக்கே உரித்தான பாணியில் "ஊடகப் புதினங்களின் திறனாய்வுக் களம்" எனும் கருப் பொருளில் பதிவுகளைச் செய்து வருவது பதிவர்கள் அறிந்ததே!

அந்த வகையில் பதிவுலகில் தடம் பதித்துள்ள என்னையையும் ஒரு பதிவராகக் கருதி "யாழ்தேவி" இணையத் தளத்தில் நட்சேத்திரப் பதிவர் அந்தஸ்த்து கொடுத்துள்ளமைக்கு நன்றியறிதலைத் தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கின்றேன்.

யாழ்தேவி இணையத்தின் பணி தொடர களத்துமேட்டின் வாழ்த்துக்கள்.

வியாழன், 2 ஜூலை, 2009

ஆழும் கட்சிக்குள் நுழைய ஒத்திகை பார்க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஸ்ரீலங்காவின் அபிவிருத்தி மற்றும் சமூக நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று சர்வ கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

கூடவிருக்கும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கவிருக்கின்றன, குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சிபாரிசுவில் தெரிவாகி பாராளுமன்றம் சென்று சர்வகட்சிக் குழுக் கூட்டங்களுக்கு கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவிழந்த பின்னரான இந்த நேரத்தில் ஜனாதிபதியினுடான சர்வகட்சிக் குழுக் கூட்டத்துக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இன்றைய சர்வகட்சிக் குழுவின் முதலாவது கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் திரு.என். சிறீகாந்தா தலைமையில் திரு.த.கனகசபை, திரு.கே.துரைரட்ணசிங்கம், திரு.வினோ நோகதாரலிங்கம், திரு.கிஷோர் சிவநாதன் ஆகியோரைக் கொண்ட குழு கலந்து கொள்ளவுள்ளதாகவும், அத்துடன் எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் இந்த சர்வ கட்சிக் குழுக் கூட்டத்திலும் தாம் கலந்துகொள்ளவுள்ளதாகவும் திரு.பா.அரியநேந்திரன் (பா.உ) உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்க கட்சியுடனான சந்திப்புக்களை விடுதலைப் புலிகளின் அரசியற் செயலர்களான மறைந்த திரு.சு.ப.தமிழ்ச்செல்வன், பா.நடேசன் ஆகியோரின் கோரிக்கைக்கு ஏற்ப தவிர்த்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர், இப்போது சொந்த அறிவின் அடிப்படையில் கலந்து கொள்ள முன்வந்துள்ளதமையானது சிறப்பம்சமாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிஷோர் சிவநாதன் காட்டிய வழியில் இன்னும் பல தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் உள் நுழைய இருப்பதாகவும், அதற்கான இரகசிய பேச்சுக்கள் திரை மறைவில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன, அதற்கான முதற்கட்ட ஒத்திகையே இந்த கூட்டத்திற்கான சமூகமளித்தலாகும்.

எது எப்படி இருப்பினும் எமது நலிந்த மக்களுக்கு உபத்திரமின்றி இனிமேலாவது கிடைத்திருக்கும் பாராளுமன்ற ஆசனம் எனும் பெரிய பதவியினைக் கொண்டு தங்களால் முடியுமான உதவிகளைச் செய்வார்கள் என அறிய முடிகின்றது, இச் சந்தற்பத்தையும் தவற விடுவார்களாயின் எதிர்வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செல்லாக் காசாகி விடுவர் என்பது குறிப்பிடத்தக்கது, இப்போதே கருத்தியல்ரீதியாகப் பிரிந்துள்ள இக் கூட்டமைப்பினர் நிரந்தரமாகவே பல கூறுகளாகப் பிரிந்து இருந்த இடமே தெரியாமல் போவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

ஞாயிறு, 28 ஜூன், 2009

அடுத்த பிரபுதேவாவும் பிறேம் கோபாலும் !

இந்தியாவின் தமிழக தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் ரீவியில் வாராந்தம் ஒளிபரப்பாகி வரும் "அமுல் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" நடன நிகழ்வு இளையோரைக் கவந்த நிகழ்ச்சியாக உள்ளது, பல இளைஞர்கள், யுவதிகள் இந் நிகழ்வுக்காக அதிக நேரத்தினைச் செலவு செய்து ஒத்திகை பார்த்து மேடையேறி தங்களது திறமைகளை வெளிக்காட்டியும் நடுவர்களின் தீர்ப்பில் தெரிவாகாமல் கவலையுடன் வெளியேறுவது போட்டியாளர்களை மாத்திரமின்றி பார்வையாளர்களையும் கலங்க வைக்கின்றது.

ஒருவர் இறந்து விட்டால் அல்லது ஓய்வு பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே இன்னுமொருவரைத் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும், ஆனால் தமிழக நடன கலைஞரும், நடிகருமான சுந்தரம் பிரபுதேவாவுக்கு அப்படியேதும் நிகழ்ந்ததாக தெரியவில்லை, எதற்காக இந்த தேர்வு நிகழ்வு என்று விஜய் ரீவிக்கும், அதனை நடாத்துபவர்களுக்குமே நன்கு தெரியும். விறுவிறுப்பான நடனங்களை வருங்கால பிரபுதேவாக்களும், பிரபுதேவிக்களும் அழகாக அரங்கேற்றி வருகின்றனர்.

எப்படி இருப்பினும் இலங்கையர்கள் சிலருக்கும் இந் நிகழ்ச்சி களம் அமைத்துக் கொடுத்துள்ளது, அதை சாதகமாக பயன்படுத்த நமது இளையோர்கள் முயன்று வருவது பாராட்டத்தக்கது. அந்த வரிசையில் அடுத்த பிரபுதேவா எனும் மகுடத்தை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் பிறேம் கோபால் எனும் இளவல் அருமையாக நடனத்தை நடாத்தி நடுவர்களினதும், சபையோரினதும் மற்றும் பார்வையாளர்களினதும் பாராட்டினைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இலங்கையில் சிங்கள அரசாங்கத்தினாலும், அதன் படை பலத்தினாலும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அண்மையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் தத்துரூபமாக பிறேம் கோபால் அவர்தம் குடும்பத்துடன் இணைந்து அரங்கேற்றிக் காட்டினார்.

பிறேம் கோபாலில் குடும்ப நடனம் தமது தாயக இன்னல்களை உலகுக்கு உரத்துக் கூற அருமையான சந்தற்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது, அவர்களும் அதனைத் திறமையாக நடாத்தி சபையோர்களையும், பார்வையாளர்களையும் அத்துடன் நடுவர்களையும் கண் கலங்க வைத்து நல்ல பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டனர்.

பிறேம் கோபால் உணர்ச்சி வசப்பட்டு உணர்வு பூர்வமாக நடாத்திக் காட்டிய நடனத்தின் இறுதியில் சுய விமர்சனமாக கோபால் தன்னைப் பற்றியும் தனது நாடு பற்றியதுமான முகவுரையுடன் தனது பத்தாவது வயதில் குடும்பத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பேரூந்தில் பயணிக்கையில் கண்டியில் வைத்து அப் பேரூந்தை வழி மறித்த இராணுவத்தினரால் அதில் பயணித்த 30 பேரையும் தெருவுக்கு இறக்கி அரை மணித்தியாலத்துக்கும் மேலாக கைகளை உயரத் தூக்கி நிற்குமாறு பணிக்கப்பட்டனர், இதனால் தனக்கு ஏற்பட்ட விரக்தியில் படிமமே இந்த நடனம் என வர்ணனை செய்தார்.

இவருக்கு பத்து வயதாக இருந்ததால் கிளிநொச்சியைக் கண்டியாக நினைத்தாரோ தெரியவில்லை, யாழ்ப்பாணம் - கொழும்பு பாதையில் கண்டி நகரம் இல்லை, கண்டி என்பது இலங்கையின் மத்தியில், மலையகத்தில் இருக்கும் பிரதான நகரமே கண்டியாகும்.

தொலைக்காட்சிகள் நடாத்தும் பிரபல்யமான நிகழ்ச்சிகளில் கருத்துக்கள் தெரிவிக்கும் போது கவனமாக, நேர்மையாக பதிலிறுக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

இறுதியாக இலங்கை வாழ் தமிழர்களுக்காக உதவி செய்யுங்கள் இந்திய மக்களே என அழுதழுது கண்ணீருடன் பிறேம் கோபாலின் தாயும், சகோதரியும் கெஞ்சி மன்றாடிக் கேட்டதுடன் சிறுவர்களின் அசைவும் இறுகிய கல் மனதையும் கரைய வைத்தது.



வியாழன், 18 ஜூன், 2009

தீபத்தின் அவசர அவசரமான தீர்வு காண முடியாத நேர் காணல் !

தீபம் தொலைக்காட்சி இன்று இரவு 8.30 மணி தொடக்கம் நேர்காணல் ஒன்றை நடத்தியது, எதிர்வரும் 20.06.2009 ஆம் நாள் சனிக்கிழமை பிரித்தானியாவின் நடத்தவிருக்கும் ஊர்வலம் தொடர்பாக திரு.சபா பத்மநாதன் பதிலளித்துக் கொண்டிருந்தார், அவரிடம் வினாக்கள் தொடுக்கவிருக்கும் நேயர்கள் கேள்விகள் கேட்கலாமென அறிவிப்பாளர் அனஸ் தொலைக்காட்சியில் இலக்கத்தையும் அறிவித்து செவ்வியைத் தொடர்ந்தார், ஆனால் சபா பத்மநாதனிடம் கேட்கப்படும் காத்திரமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே அவசர அவசரமாக நேர்காணல் முடிவடைந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக மீண்டும் கண்ணீர் வடிக்கத் தொடங்கி விட்ட சபா பத்மநாதன் பதிலளிக்க மறுத்து, வினா தொடுத்தவர்களிடமே கேள்விகளைக் கேட்டு விதண்டாவாதம் புரிந்தது வேடிக்கையிலும் வேடிக்கை.

ஞாயிறு, 14 ஜூன், 2009

சாத்தான் வேதமோதுகின்றது !

தீபம் தொலைக்காட்சி நடுநிலை தவறிய ஊடகமாக கருதப்படுவதால் அதன் பத்தாம் ஆண்டு வருகையை முன்னிட்டு பதிவு பண்ண வேண்டிய காலத் தேவை ஏற்பட்டது.

அதில் குறையுண்டு என நக்கீரத்தனம் புரிய வந்த வலைப் பதிவர் மருதமூரான் பதிவின் முழுத் தன்மையையும் அறியாமல் பின்னூட்டமாய் வந்திருந்த மடலினை மட்டும் படித்து விட்டு அது ஈழவனால் எழுதப்பட்டதாக பதிவு செய்ய முனைந்தது தான் வேடிக்கை.

பிழையான பதிவொன்றினை மருதமூரான் இட்டுள்ளார் என்பதையறிந்த பதிவர் கொழுவி பெருந்தன்மையுடன் தானே அப் பின்னூட்டமிட்டேனெனச் சுட்டிக்காட்டிய போது அதற்கு விதண்டாவாத பின்னூட்டங்களை அடுக்கிக் கொண்டே போகின்றார்.

இத்தனைக்கும் யாழ்தேவி இணையத்தின் நட்சத்திரப் பதிவர் என்று இவருக்கு மகுடம் வேறு. பதிவுகள் இடவேண்டுமென்பதால் குறைப் பிரசவங்களும், வரட்டுச் சிந்தனைகளும் கோலோச்சுகின்றன.

கொழுவியின் வாதத்தின் பின் தவறை உணர்ந்து கொண்ட மருதமூரான் சிறிய பிழை விட்டதாகவும் அது பெரிய தவறாகி விட்டது போல் பாசாங்கு செய்து பின்னூட்டத்திலேயே பதில் எழுதியுள்ளார்.

ஊடக தர்மத்தைப் பற்றி பிரஸ்தாபிப்பவர், முதலில் தான் அதற்குத் தகுதியானவரா என்பதை எடுத்து நோக்க வேண்டும், பிழையான பதிவை தரவேற்றி 24 மணி நேரம் கடந்தும் அந்த நட்சத்திரப் பதிவரால் இன்னும் தவறை ஏற்கும் பதிவொன்றினை இட முடியாமல் இருக்கின்றது, சாத்தான்கள் வேதமோத முற்பட்டால் இப்படித்தான் அமையும்.

வியாழன், 11 ஜூன், 2009

தீபம் தொலைக்காட்சி நடுநிலை தவறிய ஊடகம் !

ஐரோப்பாவில் இருந்து பல தொலைக்காட்சிகள் தமிழில் பல சேவைகளை நடாத்தி வருகின்றது, அவற்றில் தீபம் தொலைக்காட்சி பிரித்தானியாவில் இருந்து ஒளி பரப்பினை நடாத்தி வருகின்றது, தீபம் தொலைக்காட்சியானது தனது சேவையைத் தொடங்கி இன்றுடன் பத்து ஆண்டுகளை எட்டுகின்றது எனக்கூறும் தொலைக்காட்சி நிறுவனத்தினர் நேர்மை, பக்கச்சார்பின்மை, எப்போதும் நடுநிலமைச் செய்திகளை மக்களுக்கு கொணர்வது போன்ற மேதாவித்தன அறிவித்தல்களை விடுத்து வருகின்றனர்.

இவர்கள் நடுநிலமை எனக் கூறுவது எது என்பது அனேகமானவர்களுக்குத் தெரியாமல் இருக்கின்றது, ஸ்ரீலங்காவில் நடக்கும் நிகழ்வுகளை அரங்கேற்றுவது ஊடகங்களின் தார்மீகப் பணி, அதிலும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உள் வீட்டு அந்தரங்கங்க விடயங்கள் மட்டும் தான் நடுநிலைச் செய்திகள் அல்ல, மாறாக விடுதலைப் புலிகளின் அசைவுகளில் ஏற்படும் பிழைகளையும் சுட்டிக்காட்டுவது தான் நடுநிலைச் செய்தி, ஆரோக்கியமானதும் கூட, ஆனால் தீபம் தொலைக்காட்சி என்றும் அவ்வாறு நடந்து கொள்ளவில்லையே!

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தீபம் தொலைக்காட்சிக்கு தெரியாமல் போனதற்குக் காரணமென்ன, அல்லது ஏன் போய் வீண் பிரச்சனைகளுக்குள் மாட்டிக் கொள்ள வேண்டுமென தவிர்த்து ஒரு தலைப் பட்ச செய்திகளை மட்டும் பதிவு செய்ததா?

ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழினத்துக்குச் செய்யும் அராஜகம் கொஞ்சநஞ்சமல்ல, அளவுக்கு அதிகமானது தான், ஆனால் அதற்கு எதிர் தரப்பு எனக் கூறப்பட்ட விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகளை ஏன் தீபம் தொலைக்காட்சி பதிவேற்றம் செய்ய மறந்து விட்டது.

ஜனநாயக நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோர்கள் துரோகியாக வர்ணிக்கப்பட்டு கொல்லப்பட்டார்களே, இது பிழையான வாதம் என தீபம் குரல் கொடுக்கத் தவறிவிட்டதே!

வீட்டுக்கு ஒருவர் போராட்டத்துக்கு வரவேண்டும் எனக்கூறி பலவந்தமாக பதின்ம வயதுக்குள்ளானவர்கள் அனைவரையும் ஆயுத முனையில் யுத்த களத்துக்கு அனுப்பி கொன்றதுடன், எஞ்சிய சிலராக ஊனமுற்ற சமுதாயமொன்றை விடுதலைப் புலிகள் பிரசவித்து விட்டு காணாமல் போனார்களே இது தீபம் தொலைக்காட்சிக்குத் தெரியவில்லையா?

வன்னியில் முன்னூறு ஆயிரம் பேருக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை துப்பாக்கி முனையில் தடுத்து வைத்து யுத்தம் நடத்தினார்களே, அந்தவேளை எதிரி பாரிய ஆயுத தளபாடங்களுடன் யுத்தத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றான் மக்களை விடுவியுங்கள் என ஒரு நாளிகையாவது விடுதலைப் புலிகளுக்கு உங்களின் ஊடகத்தின் மூலமாக அறிவித்தல் விடுத்தீர்களா முடியவில்லையே ஏன்?

இன்னும் அதிகம் குறிப்பிடலாம் இனிமேலாவது நடுநிலை தவறிய ஊடகம் தீபம் எனப் பதிவு செய்யுங்கள், அரசியல் ஞானமுள்ள ஊடகவியலாளர் திரு.அனஸ் முகமட் எனும் இளைய அப்துல்லாஹ் கூட தீபம் சார்பாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாரே தவிர விடுதலைப் புலிகளினால் ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் பற்றி குரல் கொடுக்கத் தவறி விட்டாரே !

ஆகவே மொத்தத்தில் தீபம் தொலைக்காட்சி நடுநிலை தவறிய ஊடகமென்பதே நிஜம்.

செவ்வாய், 9 ஜூன், 2009

அரசுடன் நெருங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

ஸ்ரீலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டப் பின் விடுதலைப் புலிகளினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் துணையை நாடியிருப்பதனை அறியக் கூடியதாக இருக்கின்றது.

வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.கிஷோர் சிவநாதன் அண்மைக் காலமாக அரசாங்க நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வருவது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் களைகட்டியுள்ளன.

காங்கேசந்துறை நோக்கி செல்லவிருக்கும் யாழ்தேவி புகையிரத சேவையை ஆரம்பிக்கும் நோக்கில் வவுனியாவில் இருந்து தாண்டிகுளம் வரையான யாழ்தேவி வெள்ளோட்ட நிகழ்வில் அரசதரப்பு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுபிப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா அமைச்சர்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.கிஷோர் சிவநாதனும் சேர்ந்து தாண்டிக்குளத்தில் புகையிரதத்தை வரவேற்று நிகழ்ச்சி யொன்றினையும் நடாத்தினர், அதில் அதிதியாகக் கலந்து கொண்டு கிஷோர் சிறப்புரை நிகழ்த்தினார்.

தாண்டிக்குளத்தில் யாழ்தேவி புகையிரத வரவேற்பைத் தொடர்ந்து ஓமந்தையில் புதிய புகையிரத நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெற்றது, இவ் அனைத்து நிகழ்வுகளிலும் திரு.கிஷோர் கலந்து கொண்டார்.

இன்று (09.06.2009) பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தினை நீடிக்கும் பிரேரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது அதற்கு ஆதரவாக 102 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன, ஐக்கிய தேசியக் கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரில் எட்டுப் பேர் கலந்து கொண்ட போதிலும் ஏழு பேரே எதிர்த்து வாக்களித்துள்ளனர், ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த கிஷோர் வாக்களிக்காமல் நடுநிலை வகித்துள்ளார்.

இவை அனைத்தையும் உற்று நோக்கும் போது அரசாங்கத்துடன் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் கிஷோர் செயற்படுவது புலனாகின்றது, எது எப்படியாகினும் விரைவில் அமைச்சர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

திங்கள், 1 ஜூன், 2009

பதுங்குகுழியில் இருந்து ஓர் வலைப்பதிவு

நீண்ட யுத்தத்துக்கு முடிவு கண்டு விட்டோமென ஸ்ரீலங்கா அரசாங்கம் மார்தட்டிக் கொண்டாடும் இந் நேரத்தில் அந்த யுத்தத்தில் சிக்குண்ட மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாய் விரிந்து கிடப்பதை எச் சமூகமும் ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பது கவலையளிக்கின்றது.

யுத்த பூமியில் வாழ்ந்த தமிழினம் சிதைந்து மண்ணாகிப் போக எஞ்சிய சிலரில் பலர் ஊனமுற்றவராகவும், சிலர் உறவுகளை இழந்தவர்களாகவும் மனிதாபிமான யுத்தத்தின் விளைவை கண்டுள்ளனர்.

அந்த யுத்த களம் ஏற்படுத்திய தாக்கத்தினை "பதுங்குகுழியில் இருந்து ஒரு வலைப்பதிவு" என்று உபதலைப்புடன் தோழர் தீபச்செல்வன் அவர்கள் தீபம் எனும் வலைப்பதிவை காத்திரமாக, மனதைத் தொட்டுச் செல்லும் கவிதைகளூடாகப் பிரசவித்துள்ளார்.

"பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி" எனும் குறியீட்டினூடாக

மண் சிதறி மூடப்பட்ட
பதுங்குகுழியில்
மூடுண்டு போயிற்று
கடைசி வரை
வைத்துக் காத்திருந்த
உடைந்த முகத்தின் எச்சங்கள்.

எனக் கூறித் தொடரும் வரிகள் எத்தகைய கல்மனதையும் கரைய வைக்கக் கூடியதாகப் பதிவு செய்துள்ளமை கவிஞரின் ஆளுமையைக் காட்டுகின்றது, புதுக் கவிதையைத் தளமாகக் கொண்டு தோழர் தீபச்செல்வன் கூறும் அனைத்துக் கவிதைகளும் பிரமாதம்.

ஆனால் நொந்த கவிதைகளின் பிறப்புக்கு உரித்தான எம்மின அழிப்பின் சீரழிவுக்கு ஒரு தரப்பு மட்டுமே சொந்தக்காரரென கவிஞர் கூற முற்படுவதனை ஏற்க முடியாமல் இருக்கின்றது.

தமிழின அழிப்புக்கு முக்கிய பாத்திரங்கள் யாரென்பதை தீபச்செல்வன் போன்ற எதார்த்தக் கவிஞர்கள் இனம் காண வேண்டும், எம்மின மக்கள் அராஜகம் கொண்ட அல்லது பாஸிஸத்தில் மூழ்கிப்போன தமிழீழத்தில் என்றுமே வாழ முற்படவில்லை, மாறாக முற்பட வைக்கப்பட்டார்கள் என்பதே உண்மை.

ஒரு வேளை கஞ்சியாவது குடித்து விட்டு நிம்மதியாக இருக்க வேண்டுமென்றே எம்மக்கள் அனைவரும் கூறுவர், மனிதத்தை நேசிப்போர் தங்களின் மனங்களில் கை வைத்துப் பதில் கூறினால் நிம்மதியான வாழ்வு மாத்திரமே எமக்குத் தேவை படுகொலைக் கலாசாரத்துடன் கூடிய சீரழிந்த துப்பாக்கிக் கலாசாரம் வேண்டவே வேண்டாம் என உரத்துக் கூறுவர்.

நன்றி : http://deebam.blogspot.com/

வியாழன், 14 மே, 2009

அம்பலத்துக்கு வரும் தமிழ் ஊடகங்களின் போலிப் பிரசாரம் !

ஸ்ரீலங்கா படைதரப்பு வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதாகக் கூறி கனரக ஆயுத தளபாடங்களைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக படுகொலைகளை நடத்தி வருகின்றது.

இது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் பார்வையை வன்னித் தமிழர்கள் மீது திருப்பும் நோக்கிலும், யுத்தத்தில் சிக்கியுள்ள விடுதலைப் புலிகளைப் பாதுகாக்கவும் சர்வதேசமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களில் பலர் உண்ணாவிரதம், பாதை மறிப்பு போன்ற போராட்டங்களிலும் அத்துடன் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகளின் தூதரகங்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் வகையிலும் சில ஆர்ப்பாட்டங்களையும் மற்றும் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்த புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் இரண்டு மாதங்களாக நடைபெற்று வருவதால் மக்களின் எழுச்சி விகிதம் குறைவடைந்து போகின்றது, தினமும் குடும்பம் குடும்பமாக வந்து நின்று போராட்டம் செய்ய எல்லோராலும் முடியாது, இங்கு வாழும் மக்கள் வேலைக்குப் போகவில்லையென்றால், வங்கிக்குக் கட்டவேண்டிய வீட்டுக் கடனை எப்படி கட்டுவதென அடுத்த கணம் யோசிக்கத் தொடங்கி விடுவர், அதனால் நீண்ட கால போராட்ட அழைப்புகளைத் தவிர்த்தே வருகின்றனர்.

குறுகிய காலப் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளும் புலம்பெயர் தமிழ் மக்கள் நீண்டகாலப் போராட்டத்துக்கு வராமையை கண்ணுற்ற போராட்ட ஒருங்கமைப்பாளர்கள் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் வன்னித் தமிழர்கள் தொடர்பான போராட்டங்களுக்கு தொடர்ச்சியாக வருகை தருமாறு ஊடகங்கள் வாயிலாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வன்னியில் ஸ்ரீலங்கா படையினரால் தினமும் கொல்லப்படும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போதெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாகி கவலைப்படும் இந்த மக்களைப் போராட்டத் தளத்துக்கு இலகுவாகக் கொண்டுவர போராட்ட ஒருங்கமைப்பாளர்களால் முடிந்தது, இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி கொல்லப்படும், காயப்படும் தமிழர்களின் எண்ணிக்கையும், போர்க்களப் படங்களையும் சற்று மிகைப்படுத்தி செய்திகளாக சில ஊடகங்கள் வாயிலாக இவ் ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டும், பிரசாரம் செய்தும் வருகின்றனர்.

இதனை அறியாத புலம்பெயர் அப்பாவி மக்கள் இப் படங்களையும், செய்திகளையும் பார்த்து கவலையடைந்து வீட்டில் இருந்து அழுகின்றார்கள், இதனைச் சாதகமாகப் பயன்படுத்தும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஊடகங்கள் வாயிலாக போலிப் படங்களையும் காண்பித்து வருகின்றனர்.

நேற்றைய செய்திகளில் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் காணாமல் போனதாகவும் அவர்களின் சடங்கள் பொலநறுவையில் குளிரூட்டப்பட்ட அறைகளில் அவயவங்கள் தோண்டப்பட்ட நிலையில் உள்ளதாகவும், பின் சடலங்கள் பாரவூர்திகளில் ஏற்றப்பட்டு மலையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்படுவதாகவும் இதனைக் கண்ட ஒரு பாதிரியார் தனது செல்லிடப்பேசியினால் புகைப்படம் எடுத்ததாகவும் குறிப்பிட்டு படங்களோடு செய்திகளை தமிழ்வின், அதிர்வு போன்ற விடுதலைப் புலிகளின் சார்பு இணையத் தளங்களில் செய்தி வெளிவந்தது, முன்பொரு தடவை அதிர்வு இணையத்தளத்தில் பிரசுரமான போலிச் செய்தியை களத்துமேடு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதிலுள்ள படங்கள் இந்தியாவில் சடலப் பரிசோதனை நடக்கும் விதத்தினைக் காண்பிக்க தயாரிக்கப்பட்டதாகும், இதனை ஸ்ரீலங்காவில் நடப்பதாக உலகுக்குக் காட்ட இப் பொறுப்பற்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையானதாகும்.
(படங்கள் அகோரமானவை)

இது தொடர்பாக ஏற்கனவே பிரசுரமான செய்திகள்:

1. அதிர்வு, தமிழ்வின் செய்தி
பொலநறுவையில் மாபெரும் குளிரூட்டப்பட்ட பிரேத அறை: திடுக்கிடும் தகவல்

பொலநறுவை மாவட்டம் குருநாகல் பகுதியில் மாபெரும் குளிரூட்டப்பட்ட பிரேத அறை ஒன்று இருப்பதாக நேரில் பார்த்த பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத் திடுக்கிடும் தகவலை தந்திருப்பது ஒரு கத்தோலிக்க பாதிரியார். பாதுகாப்புக் கருதி அவர் பெயர், விபரங்கள் எதனையும் நாம் பிரசுரிக்கவில்லை. இங்கு வவுனியா, புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சியில் கைதாகி காணமற்போகும் இளைஞர்களை கொண்று அவர்களின் உடல் உறுப்புக்களை (இருதயம், ஈரல், சிறுநீரகம் மற்றும் கண்கள்) என்பன எடுக்கப்பட்ட பின்னர் குளிரூட்டப்பட்ட செயற்கை சவச்சாலை அறைக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்த பாதிரியார், அவை பின்னர் மலையகம் செல்லும் பார ஊர்திகளில் ஏற்றப்படுவதாகவும், மலையக்த்தில் உள்ள சிங்கள கிராமங்களில் அவ் உடல்கள் புதைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். சிங்கள இராணுவ உயர் அதிகாரி ஒருவரின் பிள்ளைக்கு ஞானஸ்தானம் செய்யச் சென்ற பாதிரியார் அங்கு நின்ற வேளை அவ் உயர் அதிகாரியின் உறவினர் ஒருவர் பாம்புக்கடிக்கு உள்ளானதால் ஏற்பட்ட பரபரப்பில் உயர் அதிகாரி அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டதாகவும், அதனால் அயல் அட்டையில் நடந்த இக் கொடூரக் காட்சிகளை அவர் தற்செயலாக பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு தின்பண்டம் கொண்டுவந்த அதிகாரியின் சீருடையில் இரத்தக்கறை காணப்பட்டதையடுத்து, சந்தேகமடைந்த அவர் மறைந்திருந்து பலவிடயங்களை பார்த்ததாகவும் வாசலில் இருந்த உடலங்களை தமது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததாகவும் கூறியுள்ளார்.


2.
23 March 2004
AHRC-LT-01-2004

A letter by the Asian Human Rights Commission -- AHRC

The Horrendous Practices during Forensic Examinations in India


To
Mr. A. P. J. Abdul Kalam
President of India
New Delhi

Dear Sir

The Asian Human Rights Commission is concerned about the horrendous practices during forensic examinations at the government hospitals in the state of West Bengal, India.

At the Srirampur Government Hospital of Hoogly District, West Bengal, Mr. Ratan Dom conducts the autopsies (if one can call it an autopsy). Even though Dr. Gaffar is the forensic surgeon responsible for the examination of the bodies, in practice Mr. Ratan conducts the autopsy.

According to reliable information received Mr. Ratan is a government employee appointed for carrying corpses in the mortuary. He conducts the 'postmortem examination' with crude instruments like rusted knifes and hammer.

After the 'postmortem examination', the bodies are left without even suturing the incisions. The bodies are kept on open floor without any protection and they are left to rot in the open humid environment and it is common that body parts are eaten away by rats and dogs. The relatives of the deceased are to pay 'extra incentives' to Dr. Gaffar and to Mr. Ratan if they were to conduct a proper autopsy. It doesn't mean that even if the 'incentives' were paid the autopsy would be conducted in scientific manner in terms with the legal procedures respecting the etiquettes. It only guarantees suturing of the body after the postmortem examination. The attached photographs show how the bodies are handled in this particular hospital. Information reviles that this is not the only hospital in which dead bodies are handled in such fashion. It is the general practice in all government hospitals.

The very inhuman nature in which the bodies are handled and left to rot is an indicator of human values in the state and how far they are enforced and respected. It is also a pointer to the depth of exploitation, torture, neglect and corruption. It also indicates how much priority is given by the state for prevention of crime and protection of rights within the state. It is also clear indicator of the resources earmarked for prevention of crime and administration of justice in a 'welfare state'.

Torture is a crime and is one of the most heinous crimes against humanity. Callousness in handling dead bodies as mentioned above and exploitation of death is also a crime that comes under the ambit of the term 'torture' according to the UN Convention against Torture. India has abstained from ratifying the convention on the ruse that the domestic legislations within the country are adequate to prevent torture in the country. However the above facts paints a different picture.

The purpose of forensic examination is not only to find out the cause of death but is also a process which helps to do justice to the deceased and her/his family. In cases of suspicious death where the result of an autopsy is vital, one can imagine how far the purpose of justice is served in conditions as are prevailing at Srirampur Government Hospital.

Even if forensic examinations are held in proper manner the records are handled by police officers on deputation to courts. The unchallenged access to case records by the police officers on deputation to courts is yet another serious hindrance to delivery of justice in the state of West Bengal. This must end.

AHRC is aware that the Government of India is planning to restructure its criminal legislations in tune with the notorious Malimath Committee Recommendations. At this juncture it is pertinent to note the response from the Calcutta High Court signed by Mr. Nure Alam Chowdhury, J., Mr. Debi Prasad Sengupta, J., and Mr. Narayan Chandra, J. to the committee's questionnaire.

Question. "7.6. Do you agree with the fact that Prosecution should place greater reliance on forensic evidence?"

Answer. "No. Too much of reliance on forensic evidence may lead to disaster. Man falters -- sometimes machines falters dangerously, leaving no scope for rectification. But for detection of the criminals and not the crime forensic evidence may be used." *

In the light of the existing facts, one may even wonder what is left to rely upon? It is a pity that the suggestions by the judges were more concerned of taking away the basic ingredients of rule of law like the right to silence and presumption of innocence. The judges also recommended that Article 20(3) of the Constitution of India should be amended, as it was considered as a stumbling block in criminal cases.

Where gross violations of basic human values happen in such proportions within the state and when the courts, government and other arms of the state ignore such violations and further permit it to continue no justice what so ever could be achieved.

Any attempt to restructure the legislations without addressing the basic facts and correcting inherent errors due to improper implementation of existing laws would only result in catering the interests of a government which foster the idea of building a police state.

AHRC urge the state government and the court

* To urge the Government of India to ratify the Convention against Torture and to adoption the convention at the domestic level thorough implementation of appropriate laws.
* To take immediate actions to conduct an impartial inquiry into the incident mentioned above and to put an end to the practice of callousness, exploitation and torture as carried out by Dr. Gaffar and Mr. Ratan.
* To take appropriate steps without any delay so that the Government Hospitals in the state are provided with enough resources to procure adequate equipments and personnel for proper discharge of their duties.
* To immediately end the practice of deployment of police officers in criminal courts in the state of West Bengal and to replace them with civilian officers.

Mr. Basil Fernando
Executive Director
AHRC



Two photographs from the Srirampur Government Hospital, Hooghly, West Bengal. URL to the photographs:
http://www.ahrchk.net/statements/images/ltr-01-2004/image1.jpg
http://www.ahrchk.net/statements/images/ltr-01-2004/image2.jpg


CC.

1. The Chief Justice, Supreme Court of India
2. The Chief Justice, Calcutta High Court, Calcutta
3. The Chairperson, National Human Rights Commission, New Delhi
4. The Chairperson, State Human Rights Commission, West Bengal
5. The Home Minister, Government of India
6. The Home Minister, Government of West Bengal.

* Endnote. The reference to the detection of criminals indicates the positive attitude of the judges for polygraph test, which is another suggestive question in the questionnaire. Polygraph test is considered to be one of the most unreliable test for detection of crime due to its inaccuracy, whereas forensic examination in laboratory conditions is time tested and accepted in all jurisdictions worldwide.

3. http://www.ahrchk.net/statements/mainfile.php/2004statement/797/
4. http://www.ahrchk.net/ua/mainfile.php/2006/1809/
5. http://www.internationalreporter.com/News-3489/Rats-eat-away-newborn%E2%80%99s-eye-and-scratches-the-face.html
6. http://escapefromindia.wordpress.com/2008/04/17/shocking_images_from_india/

வியாழன், 7 மே, 2009

கிழக்கில் தொடரும் சிறார் கடத்தலும் கப்பம் கேட்டு ஆட்கொலையும்!

ஸ்ரீலங்காவில் சிறுவர்களைக் கடத்தும் பழக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது, கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களின் படையணிக்காக மாணவர்களையும், பராயமடையாத சிறார்களையும் கடத்தி யுத்த தயாரிப்புகளில் ஈடுபடுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு பலமாக எதிரொலித்து வந்தது, அண்மைக் காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து வந்த கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் தரப்பினர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பின் கட்டுமானப் பணியை வலுப்படுத்துவதற்காக படையணியை உருவாக்கும் நோக்கில் ஆட்கடத்தலில் குறிப்பாக சிறுவர்களை படைகளில் சேர்ப்பதில் முயன்று வந்தனர், ஆனால் சிறார்களைப் படையணிகளில் சேர்ப்பதனை முற்றாக எதிர்த்து வந்த ஐ.நா. வின் கோரிக்கையினால் சற்று தளர்வடைந்து வந்த இவ் ஆட்கடத்தல் விவகாரம் கிழக்கின் உதயத்தின் பின் விஸ்வரூபம் எடுத்து குழந்தைகளைக் கடத்தி கப்பம் கோரி கொலை செய்யும் அளவுக்கு விருத்தியடைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி புதன் கிழமை திருகோணமலை சென். மேரிஸ் பெண்கள் கல்லூரியில் முதலாம் தரத்தில் கல்வி பயிலும் பாலையூற்றைச் சேர்ந்த ஆறு வயதுப் பாலகி ஜூட் ரெஜி வர்ஷா பாடசாலையில் வைத்துக் கடத்தப்பட்டு 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கண்கள், வாய், கைகள் மற்றும் கால்களை பச்சை நிற பிளாஸ்டிக் ரேப்பினால் இறுகக் கட்டி கழுத்து நெரித்து கொலை செய்து உரப் பையினுள் திணித்து மூன்று நாட்களின் பின் திருமலையில் சன நடமாட்டமுள்ள சோனகத் தெருவின் வடிகாலில் போடப்பட்டிருந்த சம்பவம் திருகோணமலை மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இக் கொலைக்கு காரணமானவர்கள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் திரு பிள்ளையான் சந்திரகாந்தனை தலைமையாகக் கொண்டு இயங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களேயென பொலிசார் தரப்பு செய்திகள் கூறின.

பொலிஸாரினால் கைதான பிரதான சந்தேக நபர் திருகோணமலையைச் சேர்ந்த 25 வயதுடைய ஒப்ரின் மேர்வின் நிரோஷன் பொலிஸாரைத் தாக்கி விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த ஆட்கடத்தல் மற்றும் கொலை தொடர்பான 2 ஆவது சந்தேக நபரான திருகோணமலை, கந்தசாமி கோவில் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய வரதராஜன் ஜனார்த்தனன் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களைக் காண்பிப்பதாக பொலிஸாரைக் அழைத்துச் சென்று, அங்கு புத்தகத்தினுள் மறைத்து வைத்திருந்த சயனைட்டை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நிலையிலேயே 3 ஆம் மற்றும் 4 ஆம் சந்தேக நபர்களான சிவானந்தன் நிஷாந்தன் மற்றும் டானி ரெஜினோல்ட் இருவரும் கன்னியா சாரதாபுரம் மகாவூற்றுக் காட்டுப் பகுதியில் வைத்து துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது இவ்விதம் இருக்க மட்டக்களப்பு, கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் மூன்றாம் தரத்தில் கல்வி பயிலும் மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோயில் வீதியில் வசிக்கும் பாலகி, 8 வயதுடைய சதீஸ்குமார் தினூஷிகா ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பாடசாலையில் வைத்துக் கடத்தப்பட்டு, 3 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு இறுதியில் கொல்லப்பட்டு மே மாதம் 02 ஆம் திகதி சனிக்கிழமை காலை கல்வியங்காடு பாரதி வீதியிலுள்ள சேமக்காலைக்கருகில் உள்ள பாழடைந்த கிணறொன்றினுள் காணப்பட்டார்.

இம் மாணவியின் கொலை தொடர்பாக ஜுலியன், மயூரன், தனூசன் ஆகிய மூவரும் ஏறாவூர்ப் பகுதியில் வைத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது தினூஷிகாவின் புத்தகப் பையைக் காண்பிப்பதாக மட்டக்களப்பு, முஸ்லிம் கொலனி, முஸ்லிம் மையவாடிக்கு பொலிஸாரை அழைத்து வந்த சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியினால் தாக்குதல் நடத்த முற்பட்ட போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் அம் மூவரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.

இந்த இரு சிறுமிகளினதும் ஆட்கடத்தல் மற்றும் கொலையை எடுத்து நோக்கும் போது பின்னணியில் பலர் இயங்குவது புலனாகின்றது, பின்புலத்தில் இருப்பவர்கள் அடையாளம் காணப்படாமல் இருப்பதற்காகவே விசாரணையின் ஆரம்பக்கட்டதில் வைத்தே சந்தேக நபர்கள் அழிக்கப்படுகின்றார்கள்.

விசாரணைக்கு உட்படும் கொலைக் குற்ற சந்தேக நபர்களை வீதிகளில் கொண்டு செல்லும் போது கைகளுக்கு விலங்கிட்டு ஓட முடியாமல் பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதே பொலிஸாரின் மரபு, ஆனால் திருகோணமலையில் வர்ஷாவின் கொலையுடன் சம்பந்தப்பட்ட கொலைக் குற்ற சந்தேக நபர்களை பொலிஸார் விசாரணையின் நிமித்தம் கொண்டு செல்லும் போது அவர்களில் ஒருவர் பொலிஸாரைத் தாக்கிவிட்டு ஓடும் போது சுட்டுக் கொல்லப்பட்டதும், மற்றவரில் ஒருவர் மறைத்து வைத்திருந்த சயனைட்டினை உட்கொண்டு தற்கொலை செய்ததும், மற்றைய இருவரும் மறைந்து நின்று ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்ட சம்பவமும் அறியப்பட்டதே!

அதே போலவே மட்டக்களப்பில் கடத்திக் கொல்லப்பட்ட தினூஷிகாவின் கொலையுடன் தொடர்புடைய கொலைக் குற்ற சந்தேக நபர்களை அழைத்துச் சென்ற போது அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியினால் தாக்குதல் செய்ய முற்பட்ட போது பொலிஸார் நடத்திய தாக்குதலில் அம் மூன்று சந்தேக நபர்களும் கொல்லப்பட்டனர். அப்படியானால் ஏன் பொலிஸார் அவர்களுக்கு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லவில்லை.

இரு சம்பவங்களும் ஒரே வடிவத்தில் செய்யப்பட்டுள்ளதால் கொலைகாரர்கள் ஒத்த இலக்குடையவர்கள், பொலிஸாருக்கும் இவ் ஆயுதம் தரித்த கும்பலுக்கும் இடையில் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது அத்துடன் நீதி விசாரணை எனும் இச் சம்பிரதாயத்தை மூடி விடுவதற்காகவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட முன்னதாகவே கொல்லப்பட்டுள்ளார்கள்.

எது எப்படி இருப்பினும் கிழக்கின் உதயமென நாமமிட்டு ஆயுததாரிகளின் கைகளில் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்ததே மானிட தர்மம் மரித்ததற்குக் காரணமாகும், தொடரும் குழந்தைகளைக் கடத்தி கப்பம் கோரும் நாகரீகமற்ற கொடும் செயலால் திக்குமுக்காடிப் போயுள்ளது கிழக்கிலங்கை மாணவர் சமூகம்.

ஆட் கடத்தல் மற்றும் கொலைகளால் கிழக்கிலங்கையின் பாடசாலைக் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்புற்றதுடன், பாடசாலைக்கு மாணவர்களை அனுப்பப் பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர், அரசாங்கம் இதில் கூடிய கவனம் செலுத்தி தொடரும் இப் படுகொலைக் கலாசாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

வெள்ளி, 1 மே, 2009

உலகத் தொழிலாளர் தினம்

ஆண்டான் அடிமை வாழ்க்கை முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் "தொழிலாளர்களின் வேலை நேரத்தை மட்டுப் படுத்துங்கள்" எனும் கோசத்தை முன்வைத்து 1886 மே முதலாம் நாள் அறுநூறாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவின் சிக்காக்கோ நகரின் மெக்காமிக் ஹார்வெஸ்ட் வேக்ஸ் எனும் நிறுவனத்தின் பணியாளர்களின் வேலைப் பகிஷ்கரிப்பினால் ஏற்பட்ட கலவரத்தில் அந் நிறுவனம் மூடப்பட்டது.

எண்ணற்ற தொழிலாளர்கள் துப்பாக்கி வேட்டுக்கு இலக்காகி இரத்தத்தில் தோய்ந்து மாண்டனர், அத் தொழிலாளர்களின் மகத்தான மரணத்தினால் கிடைக்கப் பெற்றதே எட்டு மணி நேர வேலை எனும் உரிமையுடனான உலகத் தொழிலாளர் தினமாகும்.

வியாழன், 30 ஏப்ரல், 2009

மட்டக்களப்பில் மாணாக்கர் மூவரைக் காணவில்லை !

கடந்த இரண்டு நாட்களில் மாணாக்கர் மூவர் மட்டக்களப்புப் பகுதியில் இருந்து காணாமற் போயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன, மட்டக்களப்பு, கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் மூன்றாம் தரத்தில் கல்வி பயிலும் 8 வயதுடைய சதீஸ்குமார் தினுஷிகா, ஏறாவூர் விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய வள்ளுவன் மதிசுதன் மற்றும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய ஏரம்பமூர்த்தி ஜனார்த்தனன் ஆகியோரே காணாமல் போன மாணாக்கர்களாவர்.

2009.04.30 ஆம் திகதியான இன்று மட்டக்களப்பு புறநகர் மற்றும் நகரப் பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்கள் இணைந்து கடத்தப்பட்ட மாணாக்கர்களை விடுவிக்கக் கோரி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர், நேற்று மாணவி காணாமற் போன செய்தி அறிந்ததில் இருந்து அப்பகுதி மக்கள் அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு வீதிகள் வெறிச்சோடி போயுள்ளதுடன், கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.

கடந்த மாதம் திருகோணமலையில் வர்ஷா எனும் பச்சிளம் பாலகி கடத்தல்காரர்களால் கடத்திக் கப்பம் கோரப்பட்டு இறுதியில் கொலை செய்யப்பட்டார், இது தொடர்பாக ஆயுதக் குழுவொன்று தொடர்புற்றுள்ளதாக செய்திகள் வந்த போதிலும் சந்தேக நபர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான கடத்தல் சம்பவங்களினால் பாடசாலைகளுக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர் தயங்குகின்றார்கள், இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமலும், சம்பந்தப்பட்டவர்களைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த அரசியல்வாதிகளும், பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களும் உளசுத்தியுடன் செயற்படுவதே சிறந்ததாகும்.

இச் சம்பவங்கள் இனிமேலும் தொடரக் கூடாது என்பதனால் களத்துமேடு தனது ஆதங்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

புதன், 29 ஏப்ரல், 2009

தயா மாஸ்டர், ஜோர்ச் மாஸ்டர் இருவரும் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வி !

ஸ்ரீலங்கா அரச படையினரால் வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நடத்தப்பட்டு வரும் யுத்தத்தினைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சரணடைந்து வருவதாக அரச ஊடக தகவல்கள் கூறுகின்றன.

அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகச் செயலர் திரு.தயா மாஸ்டர், அரசியற் செயலர் அமரர்.சு.ப.தமிழ்ச்செல்வனின் மொழி பெயர்ப்பாளர் திரு.ஜோர்ச் மாஸ்டர் போன்றோர் ஸ்ரீலங்கா அரச படைகளிடம் சரணடைந்ததாக செய்திகள் கூறின.

திரு.தயா மாஸ்டர் மற்றும் திரு.ஜோர்ச் மாஸ்டர் இருவரும் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் இரு பாகங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

செவ்வி



திங்கள், 27 ஏப்ரல், 2009

உண்ணா நோன்பைக் கை விட்டார் கருணாநிதி

இலங்கையின் வன்னிப் பகுதியில் தொடரும் போர் அவலத்தை நிறுத்தக் கோரி ஸ்ரீலங்கா அரசாங்கத்தைக் கோரும் உண்ணா நோன்பினை இன்று காலை அண்ணா நினைவிடத்தில் கலைஞர் கருணாநிதி ஆரம்பித்தார்.

கலைஞரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா அரசாங்கம் பாதுகாப்பு அவையைக் கூட்டி யுத்த நிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ள செய்தி தனக்கு எட்டியுள்ளதாகவும் கூறி உண்ணா விரதத்தைக் கை விட்டார் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.

வெள்ளி, 24 ஏப்ரல், 2009

விமல் வீரவன்சவின் உரை தொடர்பாக மனோ கணேசன் அவசர விளக்கம் !

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஜனநாயக ரீதியாக நான் முன்னெடுத்துவருவதை சகித்துக்கொள்ள முடியாத விமல் வீரவன்ச எம்.பி., என்னை அரசாங்கம் கைது செய்து சிறையில் தள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். தமிழ் இனத்திற்கென எனது ஜனநாயக போராட்டத்தில் சிறை செல்வதற்கும் நான் தயார் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. கூறிய கருத்துத் தொடர்பில் கொழும்பு நிப்போன் ஹொட்டலில் நடத்திய அவசர பத்திரிகையாளர் மாநாட்டில் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் திரு.மனோ கணேசன் பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்தார்.

நான் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின விழாவில் சமீபத்தில் கலந்து கொண்டதாகவும், தனிநாட்டை உருவாக்கும் நோக்கில் அரசியலமைப்பை நான் மீறியுள்ளதாகவும் விமல் வீரவன்ச நேற்று நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியுள்ளார். விமல் வீரவன்சவின் கூற்றை நான் அடியோடு மறுக்கின்றேன். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான பொய்யான சோடிக்கப்பட்ட கட்டுக்கதையாகும். எனது அரசியல் அன்றும், இன்றும், என்றும் ஜனநாயக வரம்புகளுக்கு உட்பட்டதாகும். எங்களது நிகழ்ச்சி நிரலில் வன்முறைக்கும், பிரிவினைவாதத்திற்கும் இடமில்லை. ஆனால், நாம் ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே தமிழ் மக்களின் உள்ளக அரசியல் சுயநிர்ணய உரிமைக் கொள்கையை ஆதரிக்கின்றோம். தமிழ், சிங்கள, முஸ்லிம் தோழமை சக்திகளுடன் இணைந்து எமது இந்த நோக்கத்தை அடைவதற்காக ஜனநாயக ரீதியாக போராடுகின்றோம். இது எங்களது பகிரங்க நிலைப்பாடு. இதில் மறைப்பதற்கு எதுவும் கிடையாது. தமிழ் பேசும் மக்களின் தேசிய உரிமைகளை எப்போதும் நிராகரிக்கும் பேரினவாதியான விமல் வீரவன்சவிற்கு எங்களது ஜனநாயக செயற்பாட்டை சகித்துக்கொள்ள முடியவில்லை.

அரசியல் அமைப்பு பற்றியும், மாவீரர் நிகழ்வுகளை பற்றியும், ஆயுத வன்முறை கலாசாரத்தை பற்றியும் கருத்து தெரிவிப்பதற்கு இந்த விமல் வீரவன்சவிற்கு என்ன தகுதி இருக்கின்றது? நான் எனது அரசியலை அம்பாந்தோட்டை, வலஸ்முல்லை பொலிஸ் நிலையத்திற்கு கைக்குண்டு எறிந்துவிட்டு ஆரம்பிக்கவில்லை.

புலிகள் இயக்கத்திற்கு முன்னரே 1989ஆம் வருடத்திலேயே கண்டி புனித தலதா மாளிகையை தாக்கி கொள்ளையடிக்கவில்லை. பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க கட்சிக் குழுக்கூட்டத்திற்கு கைக்குண்டை கொண்டு சென்று வீசி பாராளுமன்ற உறுப்பினர் கீர்த்தி அபயவிக்கிரமவை கொலை செய்துவிட்டு, நாட்டின் அன்றைய தினத்தின் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை படுகொலை செய்ய முயற்சிக்கவில்லை.

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிச் சிங்கள இளைஞர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கவில்லை. கொட்டிகாவத்தை சத்தா திஸ்ஸ தேரர் போன்ற பெருந்தொகையான பௌத்த துறவிகளையும், விஜயகுமாரதுங்க போன்ற ஜனநாயக அரசியல் தலைவர்களையும், பிரேமகீர்த்தி அல்விஸ் போன்ற கலைஞர்களையும் கொலை செய்த கலாசாரத்தை நான் சாரவில்லை.

இத்தகைய சட்டவிரோத பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு எனது நேரத்தை வீணடிக்காததால் எனக்கு சிகிரியா மலை, சிவனொளிபாத மலை ஆகிய மலைகளில் ஏறுவதற்கும் நேரம் இருந்தது, மனிதர்களைக் கொன்று குவித்துக்கொண்டிருந்தவர்களுக்கு இதற்கான நேரம் இருக்கவில்லை.

புலிகளின் மாவீரர் தின வைபவத்தில் நான் ஒருபோதும் கலந்துகொண்டதில்லை. இது உண்மை. ஆனால், மாவீரர் வைபவங்களை பற்றி பேசுவதற்கு விமல் வீரவன்சவிற்கு இருக்கும் அருகதை என்ன? இந்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக பயங்கரவாதத்தை ஆரம்பித்து வைத்து 1971இல் இவர்கள் நடத்திய கிளர்ச்சியையும், 1989இல் இவர்களது இயக்கத்தலைவர் ரோஹண விஜயவீரவை வலப்பணை தோட்ட பங்களாவிலிருந்து இழுத்து வந்து அன்றைய அரசு கொலை செய்ததையும் இன்று ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்திலும், நவம்பர் மாதத்திலும் நினைவுக்கூர்ந்து கொழும்பில் பெரும் விழா நடத்துகின்றார்கள். இது எவ்விதத்தில் நியாயமாகும்?

இன்று ஜே.வி.பி. கட்சியை உடைத்து வெளியேறிவிட்டு, வேறு கட்சி அமைத்துக் கொண்டதால் விமலசிறி கம்லத் என்ற ஆருடப்பெயரில் செயற்பட்ட விமல் வீரவன்ச தனது பயங்கரவாத வரலாற்றை மூடி மறைத்துவிட முடியாது. நாங்கள் ஒரு முறை பிறந்து வாழ்ந்து இறந்து இன்று மீண்டும் பிறக்கவில்லை. 1971இலும், 1989இலும் இவர்கள் செய்துவந்த படுகொலைகளை நாம் மறக்கவில்லை. ஆகவே விமல் வீரவன்ச போன்ற பேரினவாதப் பயங்கரவாதியின் அறிவுரை எனக்குத் தேவையில்லை.

நன்றி வீரகேசரி

புதன், 22 ஏப்ரல், 2009

விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் குடும்பத்துடன் படையிடம் சரண் ?

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகச் செயலராக கடமை புரிந்த முன்னாள் ஆங்கில ஆசிரியரான வடமராட்சி தம்பசிட்டியைச் சேர்ந்த தயா மாஸ்டர் எனப்படும் திரு.வேலாயுதம் தயாநிதி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ச் எனப்படும் ஓய்வுபெற்ற தபாலதிபர் திரு.வேலுப்பிள்ளை குமாரு பஞ்சரத்தினம் ஆகியோர் தங்களது குடும்பங்கள் சகிதம் இன்று புதுமாத்தளன் பகுதியில் நிலைகொண்டுள்ள 58 ஆம் படையணியிடம் சரணடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தென்னிலங்கையில் இருந்து வடக்கு நோக்கிச் சென்ற வாசுதேவநாயணயக்கார போன்ற சிங்கள அரசியல்வாதிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக வரவேற்று அவர்களுடனான சந்திப்புகளில் மொழி பெயர்ப்பாளராக தயா மாஸ்டர் கலந்து கொண்டவராவார்.


விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைகளுக்கென கிளிநொச்சிக்கு விஜயம் செய்த சர்வதேசப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் திரு.வே.பிரபாகரன் மற்றும் திரு.சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு மொழி பெயர்ப்பாளராகவும், சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பேச்சுவார்த்தைகளுக்கெனச் சென்ற திரு.தமிழ்ச்செல்வன் குழுவுடன் திரு.ஜோர்ச் கலந்து கொண்டவராவார்.

ஸ்ரீலங்கா அரச படையினரிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய மாட்டார்களென விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பொறுப்பாளர் திரு.புலித்தேவன் நேற்று ரொய்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சனி, 11 ஏப்ரல், 2009

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடையே கருத்து முரண்பாடு!

இந்திய வெளியுறவுச் செயலாளர் திரு.சிவசங்கர் மேனன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை இந்திய அரசாங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார், எதிர்வரும் 15 ஆம் 16 ஆம் திகதிகளில் இந்திய வெளியுறவுச் செயலாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக நேற்று முந்தினம் இரவு ஸ்ரீலங்காவில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று நடைபெற்றது, இக் கலந்துரையாடலின்படி இந்தியா விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென முடிவெடுக்கப்பட்டது, இந்தச் சந்திப்புக்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு.மாவை சேனாதிராஜா தலைமை வகித்தார், உடனடியாக இச் செய்தியை இந்தியாவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் திரு.சம்பந்தனுக்கு தெரிவிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் திரு.என்.ஸ்ரீகாந்தா சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்காவிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதில்லையெனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் சந்திப்பில் திரு.சிவசங்கர் மேனனைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச் சந்திப்புக்கான முக்கிய தொடர்ப்புகளைப் பேணுமுகமாக திரு.மாவை சேனாதிராஜா இந்தியாவுக்கு உடனடியாக பயணத்தை மேற்கொண்டுள்ளார், கூட்டமைப்பினரில் பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதால் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் இச்சந்திப்பில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய வெளியுறவுச் செயலாளர் திரு.சிவசங்கர் மேனன் அவர்களின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்றுக்கொள்ளுவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

மேலதிக செய்திகள்:

1. புதினம் இணையம்

2. பிபிசி வானொலி

3. ரெலோ இணையம்
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----