
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகச் செயலராக கடமை புரிந்த முன்னாள் ஆங்கில ஆசிரியரான வடமராட்சி தம்பசிட்டியைச் சேர்ந்த தயா மாஸ்டர் எனப்படும் திரு.வேலாயுதம் தயாநிதி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ச் எனப்படும் ஓய்வுபெற்ற தபாலதிபர் திரு.வேலுப்பிள்ளை குமாரு பஞ்சரத்தினம் ஆகியோர் தங்களது குடும்பங்கள் சகிதம் இன்று புதுமாத்தளன் பகுதியில் நிலைகொண்டுள்ள 58 ஆம் படையணியிடம் சரணடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தென்னிலங்கையில் இருந்து வடக்கு நோக்கிச் சென்ற வாசுதேவநாயணயக்கார போன்ற சிங்கள அரசியல்வாதிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக வரவேற்று அவர்களுடனான சந்திப்புகளில் மொழி பெயர்ப்பாளராக தயா மாஸ்டர் கலந்து கொண்டவராவார்.

விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைகளுக்கென கிளிநொச்சிக்கு விஜயம் செய்த சர்வதேசப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் திரு.வே.பிரபாகரன் மற்றும் திரு.சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு மொழி பெயர்ப்பாளராகவும், சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பேச்சுவார்த்தைகளுக்கெனச் சென்ற திரு.தமிழ்ச்செல்வன் குழுவுடன் திரு.ஜோர்ச் கலந்து கொண்டவராவார். ஸ்ரீலங்கா அரச படையினரிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய மாட்டார்களென விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பொறுப்பாளர் திரு.புலித்தேவன் நேற்று ரொய்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.