செவ்வாய், 14 ஜூலை, 2009

நாட்டைச் சீர்குலைக்கும் பாதாள உலகக் கும்பலும், முஸ்லிம் ஆயுதக் குழுக்களும் !

ஸ்ரீலங்காவின் தலைநகரையும் அதனோடு ஒட்டியுள்ள தென் பகுதியுமான சிங்களப் பகுதிகளில் பாதாள உலகக் கும்பலினால் பலத்த தொல்லைகள் ஏற்பட்டு வருவது சகலரும் அறிந்ததே! இந்தக் கும்பலில் பல்லினத்தவர்களும் அங்கம் வகிக்கின்றனராயினும், சிங்கள, முஸ்லிம் காடையர்களே இதில் அதிக சிரத்தையெடுத்து சமூகச் சீரழிவுகளை நடாத்தி வருகின்றனர்.

போதைப் பொருள் வியாபாரம் முதல் கப்பம் பெறல், ஆட்கடத்தல், பணத்துக்காகக் கொலை செய்தல், அடாவடித்தன தரகு வியாபாரம் போன்றன இவர்களால் செவ்வனே செய்யப்பட்டு வருகின்றது. வேலியே பயிரை மேய்வது போன்று நாட்டை நல்வழிப்படுத்தக் கூடிய அரசியல்வாதிகளும், சில பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்களும் முன்னின்று செயற்படுவதனால் கட்டுப்படுத்துவது கடினமாகவே இருந்து வந்தது.

மக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்களை முற்றாக ஒழித்துக் கட்டி, சுத்திகரிப்புச் செய்யுமாறு படையினருக்கு பணிப்புரை செய்துள்ள நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்த வேண்டாமென அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளமை பாராட்டத்தக்கது.

அதில் ஒரு கட்டமாக இந்திய என்கவுண்டர் முறையில் சில சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது நல்ல விடயமாக இருந்த போதிலும், அப்பாவிகள் எவரும் இதில் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.

தென்பகுதியில் இருக்கும் இந்த அச்சுறுத்தல் போன்று கிழக்கு மாகாணத்திலும் முஸ்லிம் ஆயுதக் குழுவினரால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது, அஸ்ரப்பினால் தோற்றுவிக்கப்பட்ட முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இன்னும் தங்களது அடாவடித்தனங்களை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, இதனை கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் தூபமிட்டு வளர்த்துக் கொண்டே வருகின்றனர், இதனால் பிட்டும் தேங்காய்ப் பூவுமாக வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இனத்தவர்களிடையே விரிசல் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றனர்.

பாதுகாப்புத் தரப்பினர் சட்ட விரோத ஆயுதங்களை ஒப்படைக்குமாறு முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு அறிவித்திருந்தும் இன்னும் பூரணமான ஆயுதக் களைவு ஏற்பட்டதாக அறிய முடியவில்லை, முஸ்லிம் தீவிரவாத ஆயுதக் குழுத் தலைவர்கள் இப்போது தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருப்பதன் மர்மம் என்னவென்று அறிய முடியாமல் இருக்கின்றது.

அரசியல்வாதிகளின் திட்டமிடல்களினால் முன்பும் இதே போன்று முஸ்லிம் ஆயுதக் குழுத் தலைவர்கள் தலைமறைவாக இருப்பது போன்று தகவல்கள் வெளியாகி பாதுகாப்புத் தரப்பினர்களின் தேடுதல்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டது, அதே போன்று இப்போதும் பாதுகாப்பு தரப்பு எடுத்து வரும் முயற்சிகளை நசுக்குவதற்காகவே, முஸ்லிம் ஆயுதக் குழுவினர்களின் தலைவர்கள் ஓடி விட்டார்கள் எனப் போலிப் பிரச்சாரம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மூதூர், கிண்ணியா, வாழைச்சேனை, காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இறக்காமம் போன்ற பகுதிகள் முஸ்லிம் தீவிரவாதிகளின் ஆயுதத் தளங்களாகும், இங்குள்ள சில பள்ளிவாசல்கள் சம்மேளனங்களும், முஸ்லிம் வர்த்தகர்களுமே முஸ்லிம் ஆயுதக் குழுக்களை ஊக்குவித்து வருகின்றனர், இந்த முஸ்லிம் ஆயுதக் குழுக்களினால் இப்பகுதிகளில் வாழும் தமிழ், சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டே வருகின்றனர், 1990 ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த பல தமிழ் மக்கள் இந்த முஸ்லிம் ஆயுதக் குழுக்களினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு தங்களது சொந்த கிராமங்களில் இருந்தே துரத்தப்பட்டு, சொத்துக்கள் அழிக்கப்பட்டு, உடமைகளும் அபகரிக்கப்பட்டு இருந்தன.

இப்படியான சம்பவங்கள் இனிமேலும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படுவதுடன், அதற்கு உடந்தையானவர்களும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியத் தேவையாகும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீவிரமாகச் செயற்பட்டு முஸ்லிம் ஆயுதக் குழுக்களினதும், பாதாள உலகக் கும்பல்களினதும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டியது கட்டாயமாகும்.

முஸ்லிம் ஆயுதக் குழுக்களில் ஒன்றான ஜிகாத் முன்பு வெளியிட்ட துண்டுப்பிரசுரம்

6 கருத்துகள்:

  1. //This blog does not allow anonymous comments. //

    மன்னிக்கவும்... அனானியாக எழுதப்படும் இந்த பதிவுக்கு அனானியாகவே பின்னூட்டமிட நான் விரும்புவேன்...!!!

    நன்றி...!

    பதிலளிநீக்கு
  2. ஆயுதக் கலாசாரம் முற்றாக இலங்கை மண்ணில் இருந்து அகற்றப்பட வேண்டும், ஆயுதக் குழுக்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் பாரிய தண்டனை வழங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. ஈழவன்,பதிவுகள் அருமை.
    எல்லாத்தையும் போட்டு உடைக்கிறீங்கள்.

    சும்மாக்கு நாங்களும் இருக்கிறோம் எண்டு கத்துறதில பிரயோசனம் இல்ல ஈழவன்.எங்கட சனங்களுக்கு ஏதாவது செய்ய நினைக்கவேணும்.அதை விட்டிட்டு அவையளின்ர இப்போதைய நின்மதியையும் குழப்பக்கூடாது.

    பதிலளிநீக்கு
  4. தீவிர வாசகனுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஹேமா.

    //சும்மாக்கு நாங்களும் இருக்கிறோம் எண்டு கத்துறதில பிரயோசனம் இல்ல ஈழவன்.எங்கட சனங்களுக்கு ஏதாவது செய்ய நினைக்கவேணும்.அதை விட்டிட்டு அவையளின்ர இப்போதைய நின்மதியையும் குழப்பக்கூடாது.//

    இப்படியான பதிவுகள் தேவையற்றது என்பதா உங்கள் பதில்!

    ஒன்றுமே புரியவில்லை, தெளிவாகப் பின்னூட்டம் இட்டால் நல்லதல்லவா ஹேமா.

    பதிலளிநீக்கு
  6. ஐயோ ஈழவன் உங்களைச் சொல்லேல்ல நான்.நீங்கள் உள்ளது உள்ளபடி எல்லாத்தையும் போட்டு உடைக்கிறீங்கள்.இல்ல இப்போ எங்கட நாட்டில தேவையில்லாத பேச்சுக்கள் செய்திகள் சுவரொட்டிகள் என்று இருக்கிற சனங்களின்ர கொஞ்ச நஞ்ச நின்மதியையும் கெடுக்கிறார்கள்.சும்மாக்கு நாங்கள் இருக்கிறோம் எண்டு சிலபேர் பூச்சாண்டி வேலை காட்டிக்கொண்டு இருக்கினம்.அதுதான்.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----