ஞாயிறு, 4 டிசம்பர், 2011

கூட்டமைப்பு சம்பந்தனின் காணி அபகரிப்பினால் பாராளுமன்றில் சலசலப்பு !

வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்பு, பெரும்பான்மையினக் குடியேற்றங்கள், தமிழ்க் கலாசாரங்களை சீரழிக்கும் நடவடிக்கைகள் தமிழின விகிதாசாரத்தை பாதிக்கும் நிகழ்வுகள் மற்றும் இன சுத்திகரிப்புகள் இடம்பெறுமாயின் மீள் இணக்கமோ, இனங்கள் இணைந்து வாழவோ, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ முடியாது எனக் கூறிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் திருகோணமலையில் மக்களின் காணிகளைச் போலிப் பத்திரங்களைக் கொண்டு அபகரிப்புச் செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த 2011.11.30 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனால் அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பாக இணையத் தளத்தில் வெளிவந்துள்ள திடுக்கிடும் செய்தி தொடர்பாக தெரியப்படுத்தினார்.

கடந்த 1981 ஆம் ஆண்டு மரணித்த ஜனாப் ரசூல் என்பவருக்குச் சொந்தமான திருகோணமலை நகருக்கு அருகிலுள்ள லிங்கநகர் கிராமத்திலுள்ள ஆறு ஏக்கர் பரப்புள்ள காணியை உரிமம் கோர எவரும் இல்லாததாலும் தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்செயலான பயங்கரவாத சூழலினாலும் அந்தப் பகுதி மக்கள் எல்லோரும் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல அந்தப் பகுதிகளை சிங்கள பெரும்பான்மை மக்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

2000 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளும் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க தலைமையிலான அரசாங்கமும் செய்து கொண மோதல் தவிர்ப்பு ஒப்பந்ததைத் தொடர்ந்து நல்ல சூழல் நிலவியதால் தமிழர்கள் லிங்கநகரில் மீள் குடியேற ஆரம்பித்தனர், இதனால் இந்தப் பகுதியில் வாழ முடியாதென உணர்ந்த சிங்களவர்கள் ரசூலுக்குச் சொந்தமான காணியை தங்களுடையதாகக் காட்டி தமிழர்களுக்கு விற்பனை செய்து விட்டார்கள்.  லிங்கநகரை அண்மித்த மூதூர், கட்டப்பறிச்சான், ஈச்சலம்பத்தை, சம்பூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்த 56 தமிழர்கள் மேற்படி 6 ஏக்கர் காணியினையும் கொள்வனவு செய்து வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

இந்த ஆறு ஏக்கர் காணியினது அதிகாரங்கள் அனைத்தும் சம்பந்தனிடம் இருப்பதாகவும் ஒவ்வொரு பேர்ச் காணிக்கும் 25 000 ரூபாய் வீதமாக அக் காணியில் வசிக்கும் 56 குடும்பங்களும் பணம் தர வேண்டுமென சம்பந்தன் கேட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். ரசூலுக்குச் சொந்தமான காணியினை போலி ஆதாரங்களைக் காட்டி தனதாக்கிக் கொண்ட சம்பந்தன் பேர்ச் 25 000 ரூபாய் வீதமாக 2 கோடி 40 இலட்சம் ரூபா பணத்தினை இந்தப் பகுதி மக்களிடம் பெற பகீரத முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதேபோன்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் செயலாளர் நாயகம் க.பத்மநாபாவின் மனைவி திருமதி ஆனந்தி பத்மநாபாவுக்குச் சொந்தமான மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள வீட்டுடன் கூடிய காணியினை பத்மநாபாவின் மறைவினையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் திருமதி ஆனந்தி பத்மநாபாவினைப் போன்று போலிக் கையெடுத்திட்டு தன்வசப்படுத்தியுள்ளார் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் உள்ளக தகவல்கள் கூறுகின்றன.


சம்பந்தனின் போலிக் காணி ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட லிங்கநகர் மக்கள் விபரம்:
(01) அருட்பிரகாசம் – ஜமுனா,
(02) சிவபாதம் – சுமதி,
(03) பொன்னம்பலம் – மல்லிகா,
(04) குருகுலசிங்கம் – மகாலெட்சுமி,
(05) சிவலிங்கம் – செல்லநாச்சியார்,
(06) செல்லத்தம்பி – துளசிமணி,
(07) கணகசிங்கம் – உதயராணி,
(08) பற்றீக் – ஸ்ரெலர்,
(09) பேரின்பராசா – ராசகுலசிங்கம்,
(10) தேவலிங்கம் – நீத்தா,
(11) தேவலிங்கம் – தேவவதனா,
(12) கந்தையா – சண்முகநாதன்,
(13) இராசதுரை – வணசா,
(14) இராசையா – தட்சணாமூர்த்தி,
(15) செல்வநாயகம் – அருள்கிருபாகரன்,
(16) செல்வநையினார் – இராதாமோகன்,
(17) தயாபரன் – வனிதா,
(18) உதயகுமார் – அன்னலட்சுமி,
(19) ஜெயானந்தன் – ஜெசிகா,
(20) மகேஸ்வரன் – தேவசீலி,
(21) சந்திரமோகன் – தேவமனோகரி,
(22) சூசைப்பிள்ளை – ஜோதிமலர்,
(23) ரஞ்சன் – கோமளாதேவி,
(24) நாகராசா – நவரெத்தினம்,
(25) முத்துராசா – ஃப்பிரியா,
(26) ரட்ணராசா – வேணுகுமாரி,
(27) சுகுணசேகரம் – குமாரதாஸ்,
(28) விபுணசேகரனம் – அருள்மணி,
(29) சுந்தரலிங்கம் – வித்தியா,
(30) தேவலிங்கம் – தேவகாஞ்சனா,
(31) நகுலேஸ்வரன்,
(32) விசாகரெத்தினம் – ஃநிவாசன்,
(33) ஞானநேகரம் – லிரோஜிதா,
(34) பேச்சுமுத்து – இராமநாதன்,
(35) சந்திரகுமாரன் – நந்தகுமாரன்,
(36) இராமநாதன் – குணரெத்தினம்,
(37) சுவேந்திரலிங்கம் – சரோஜாதேவி,
(38) இருதயநாதன் – வள்ளியம்மை,
(39) ஆறுமுகம் – இராஜசுந்தரம்,
(40) இராமச்சந்திரன் – உதயகுமார்,
(41) நடராசா,
(42) N. திருச்செல்வம்,
(43) மாதவன்,
(44) சந்திரலிங்கம் – பரிமளாதேவி,
(45) ஜெயவீரசிங்கம் – சூரியபிரகாஸ்,
(46) விஜயகுமார் – வேதநாயகம்,
(47) வைரமுத்து – நாகராசா,
(48) செளந்தரிப்பிள்ளை – நாகராசா,
(49) பாலச்சந்திரன் – ரஞ்சனி,
(50) சுசிகரன் தாத்தயசீலி,
51) மரியநாயகம் – ஜெராட்தனிநாயகம்,
(52) செபமாலை – பீலிக்ஸ் செல்வராசா,
(53) கேசவன் – தங்கத்துரை,
(54) மோகன் – விஜயா,
(55) கு. நாகேஸ்வரி,
(56) சிவபுண்ணியம் – லிங்காரெத்தினம் – ஜோதிமகாலெட்சுமி

தொடர்புபட்ட செய்திகள்:
1. இலங்கைநெட் 2011.10.19
2. வீரகேசரி 2011.10.22

1 கருத்து:

  1. * இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

    * பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

    * நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

    * இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

    * தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

    * இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
    please go to visit this link. thank you.

    * ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

    * கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

    * போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----