
இந் நிகழ்வுக்குப் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினர், வட்டப் பொறுப்பாளர்கள், வர்த்தக சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், மாவீரர் செயற்பாட்டுக் குழுவினர் மற்றும் தேசிய போரெழுச்சிக் குழுவினர் அழைக்கப்பட்டிருந்தனர்.
மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளித்தல், மாவீரர் துயிலுமில்லம், பொது இடங்கள் போன்றவற்றில் சிரமதானப்பணிகளை மேற்கொள்ளல், குருதிக்கொடை வழங்கல், களமுனைப் போராளிகளுக்கு உலருணவு வழங்கல், வீதிகளில் மாவீரர் நினைவுப் பதாகைகளை அமைத்தல் மற்றும் இறுதிநாளில் மாவீரர் தினத்தை எழுச்சிபூர்வமாக அனுஷ்டிப்பது போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.