

பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயற்பாடுகளுக்குத் துணை போதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே ஊடகவியலாளர் லோஷன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா காவற்துறை வழங்கிய பதிவுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஜா நிறுவனத்தின் சக்தி எப்.எம், ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சூரியன் எப்.எம் ஆகிய வானொலி நிறுவனங்களிலும் லோஷன் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி எப்.எம் அறிவிப்பாளர் திரு.சந்திரமோகன் (சந்துரு) அவரது வீட்டில் வைத்து, ஊடகவியலாளர் லோஷன் கைதாவதற்கு சற்று முன்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவிரால் விசாரணைக்கு உட்பட்டிருந்தாரென அறிய முடிகின்றது.
ஊடகவியலாளர்களான திரு.சசிதரன், திரு.வளர்மதி, திரு.திஸ்ஸநாயகம் போன்றவர்கள் ஸ்ரீலங்கா பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதாகி விடுவிக்கப்படாமல் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.