தீபம் தொலைக்காட்சி நடுநிலை தவறிய ஊடகம் !, சாத்தான் வேதமோதுகின்றது !,தீபத்தின் அவசர அவசரமான தீர்வு காண முடியாத நேர் காணல் !, அடுத்த பிரபுதேவாவும் பிறேம் கோபாலும் !, ஆழும் கட்சிக்குள் நுழைய ஒத்திகை பார்க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ! ..... தோழரே வணக்கம். களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

ஊடகவியலாளர் லோஷன் கைது!

ஸ்ரீலங்கா தலைநகரில் இருந்து ஒலிபரப்பாகும் வெற்றி எப்.எம் வானொலியின் தமிழ் நிகழ்ச்சி பணிப்பாளர் திரு.ரகுபதி பாலஸ்ரீதரன் வாமலோஷன் (லோஷன்) 2008.11.15 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் வெள்ளவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஸ்ரீலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயற்பாடுகளுக்குத் துணை போதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே ஊடகவியலாளர் லோஷன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா காவற்துறை வழங்கிய பதிவுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஜா நிறுவனத்தின் சக்தி எப்.எம், ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சூரியன் எப்.எம் ஆகிய வானொலி நிறுவனங்களிலும் லோஷன் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி எப்.எம் அறிவிப்பாளர் திரு.சந்திரமோகன் (சந்துரு) அவரது வீட்டில் வைத்து, ஊடகவியலாளர் லோஷன் கைதாவதற்கு சற்று முன்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவிரால் விசாரணைக்கு உட்பட்டிருந்தாரென அறிய முடிகின்றது.

ஊடகவியலாளர்களான திரு.சசிதரன், திரு.வளர்மதி, திரு.திஸ்ஸநாயகம் போன்றவர்கள் ஸ்ரீலங்கா பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதாகி விடுவிக்கப்படாமல் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் ::

ஊடகப் புதினங்களின் திறனாய்வுக் களம்






நாட்டில் இருந்து இப் பதிவைப் பார்வையிடும் நண்பரே வணக்கம்! மறக்காமல் உங்கள் கருத்தையும் சில வரிகளில் பதிவு செய்து விட்டுச் செல்லுங்கள்.