ஸ்ரீலங்கா படை தரப்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் வன்னியில் நடைபெறும் யுத்தத்தில் மன்னார் - பூநகரி பிரதேசத்திலுள்ள டெவில் பொயின்ற் எனப்படும் பேய்முனை மற்றும் வலைப்பாடு ஆகிய பகுதிகளை 2008.11.13 ஆம் திகதி காலை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும், கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம், மடம், பண்டிவெட்டிக்குளம், அக்கராயன்குளம், கிராஞ்சி மற்றும் பாலாவி போன்ற பகுதிகளை ஏற்கனவே தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா படை தரப்பின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்கவெல, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார, கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணாயக்கார மற்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையப் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல போன்றோரும் கலந்து கொண்டனர்.
















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.