ஸ்ரீலங்கா வங்கிக் கணக்குகளில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 7.1 மில்லியன் ரூபா நிதியனைத்தும் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது .ஸ்ரீலங்காவின் சட்டதிட்டத்துக்கமைய அரச சார்பற்ற தொண்டர் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகம், சர்வதேச ரீதியில் சேகரித்த நிதியை ஸ்ரீலங்கா வங்கிக் கணக்குகளில் வைத்திருந்தது, ஸ்ரீலங்கா அரசாங்கம் இக் கணக்கினை 2006.09.04 ஆம் திகதி முடக்கி விசாரணையை மேற்கொண்டு வந்ததைத் தொடர்ந்து, மக்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்ற நிதியனைத்தும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவும் காரணத்தினால், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்கு நிதி அனைத்தும் அரசுடமையென அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவில் இயங்கிக் கொண்டிருக்கும் 20 அரச சார்பற்ற நிறுவனங்கள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதனால் அவற்றின் மீது விசேட புலனாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் மத்தியவங்கி மேலும் தெரிவித்துள்ளது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.