

திருக்கோவில் சங்குமன்கண்டி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியினருடன் ஸ்ரீலங்கா விசேட அதிரடிப் படையினர் தாக்குதல் நடாத்திய போது எண்மர் கைதாகியுள்ளதுடன் இவர்களிடமிருந்து வெடிபொருட்களையும் கைப்பற்றியதாக ஸ்ரீலங்கா படை தரப்பு செய்திகள் கூறுகின்றன.
இவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டோர் பெயர் விபரம்
1.ஜீவராசா சுதன் - வயது 15
2.சாமுத் நாடன் திரவுல் - வயது 19
3.பெருமாள் சின்னத்தம்பி - வயது 15
4.தர்மரதம் ரமேஷ் - வயது 16
5.செல்வராசா சுவராஜினி - வயது 15
6.துரைசிங்கம் சுமன் நமீனா - வயது 14
7.விக்னேஷ்வரன் வினோதினி - வயது 16
8.தவராசா ரசீனா - வயது 14
யுனிசெப் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்காக சிறுவர்களை அழைத்து வந்த போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இவ்விடயம் சம்பந்தமாக விடுதலைப் புலிகள் எதுவும் தமக்குத் தெரிவிக்கவில்லையென யுனிசெப் தெரிவித்துள்ளது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.